Skip to main content

SUNDAY'S THOUGHT..

 "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?

-வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்.

”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.

”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன்.

”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? 

முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தான் வேறொரு மாணவன்.

”தான்பயணித்த தேரை ஒரு முல்லைகொடிக்காக விட்டுவிட்டு தான் நடந்து செல்ல துணிந்த அரசன்தான் எவ்வளவு பெரிய வள்ளல்!”…
-ஒரு மாணவி.


”முதலில் தேர் செய்ததே மரத்தில்தான், மரத்தை வெட்டி தேர் செய்துவிட்டு கொடியை காப்பது அறிவுடைமையா? தேர் செய்ய மரம் வெட்டுவதை நிறுத்தவேண்டும் என சொல்லியிருக்கவேண்டும் அந்த அரசன்”- இன்னொரு மாணவியின் பதிலிது.

செயல் ஒன்றுதான்… 

எத்தனை எத்தனை பார்வை. 

எத்தனை எத்தனை கண்ணோட்டம்..

ஒரு விஷயத்தில் எல்லோருக்கும் ஒரே கண்ணோட்டம் இருக்க எப்போதும் சாத்தியமில்லை.

அவரவர் பார்வை…

அவரவர் கண்ணோட்டம்.....

இப்படித்தான் நமது செயல்களைப்பற்றி நாம் நன்மையே செய்தாலும் ஆயிரம் விமர்சனங்கள் வரலாம்.

அதனாலெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல், மற்றவர்க்கு தீங்கு இல்லையெனில் நமக்கு சரியென்று தோன்றுவதை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதே சிறப்பு..

NO MATTER WHAT HAPPENS, TRY TO BE YOURSELF..

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. அட்மின் அவர்களே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி 1:25 வருமா

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Varumanu therila but vandha nalla irukkum tet la pass panna neriya perukku life kedaikkum..

      Delete
    2. Assumptionla life pokuthu madam😔

      Delete
  3. நல்ல யோசனை ஆனால் நிறைவேற்றுமா அரசு??????!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. Science BT's ku nala opportunity kedaikkum avanga mention panina madhiri physics, chemistry nu piricha.. Lets pray that it should come true..

      Delete
  4. today education minister told 1:2 candidates pathi sonnanga ano mam
    avungalukea theriyum 1:2 kandipa 2 per koopta 1 tha select nu antha process therinjum enakum posting podunganu soldranga
    antha batch close pannitanga
    but erunthalum cm kitta ketrukom avunga enna soldrangalo athu than nu sollitanga

    ReplyDelete
    Replies
    1. Thanks for the information jonah mam🙏

      Delete
    2. 1:2 concept ae adhan, ipo poradura friends indha selection method venaamnu appove poraattam pani stop panirukkanum.. Actually adhu rejected madhiri dhan adhanala dhan naanum sonen adhu nadakathunu, sonna avangaluku ellam veruppum kovamum varudhu but adhanala oru use yum illa..

      Delete
    3. ஆமா மேம் இதையே நீங்க சொன்னப்போ அவ்ளோ சண்ட போட்டாங்க. அவங்களுக்கு ஆதங்கம் ஆனா முன்னாடியே அவங்க போராட்டம் பண்ணிருக்கணும்.

      Delete
    4. அட்மின் சகோதரி டெட் பற்றி ஏதேனும் நம்பிக்கை தகவல் உண்டா?

      Delete
    5. Bharath brother..

      Aalaalukku amaichara poi paathu manu kudukranga so seekiram positive ah nall mudivu vandhurum tet ku..

      Delete
    6. tet ku avunga sonnathu epo udaney posting podanunnu oru method konduvanthutu pinnadi problem varathuku nanga temporary solution ila permanent solution venum so kandipa tetku oru vidiyal pirakkum nu sonnanga

      Delete
  5. Jonah mam in which channel that news came..news about 1:2

    ReplyDelete


  6. ஓய்வு பெறும் வயதை 68 ஆக உயர்த்த வேண்டும், ஆசிரியர்கள் முதல்வரிடம் மனு

    ReplyDelete
    Replies
    1. என்ன பாஸ் நீங்க 😆😆😆

      Delete
    2. 1:25 வந்தா நல்லது தான

      Delete
  7. 1:25 கூட வேணாம் 1:30 ஆச்சும் கொண்டு வாங்க. டெட் பாஸ் பண்ண நாங்க என்ன பாவம் பண்ணோம்.

    ReplyDelete
    Replies
    1. தொடக்க பள்ளி பணிக்கு பேப்பர்1 ....1:30 தான் இப்போதும்

      Delete
  8. பொண்னு எப்ப மாசமாறது பையன் எப்ப தாலிகட்டறது?

    ReplyDelete
    Replies
    1. பையன் பொண்ண பத்தி யார் கவலைப்படாறாங்க எல்லாம் நம்ம நேரம்

      Delete
  9. Mam,paper1 89 mark bc 2013 chance irukka madam.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இந்த ஆண்டு பணி கிடைக்கவில்லை என்றாலும் 2028 க்குள் பணிக்கு சென்று விடுவீர்கள்.....ஓய்வு வயது மாறும் பட்சத்தில்

      Delete
    2. Chance iruku don't panic

      Delete
    3. BC la competition adhigam dhan but still enna method nu clarity illama naama conclusion ku vara mudiyathu..

      Delete
  10. 89 no chance for bc in 2013.

    ReplyDelete
  11. அட்மின் மேடம் எனக்கு ஒரே ஒரு கடைசி நம்பிக்கை மட்டும் தான் உள்ளது ...அது PGTRB மட்டும்தான் ஓரளவு படித்து விட்டேன்...விரைவில் தேர்வு வந்தால் மட்டும் போதும் .. ...தகுதித்தேர்வை நம்பி இதுக்கு மேலயும் ஏமாற முடியாது ...

    ReplyDelete
    Replies
    1. Kavalapadathinga bro, nichayama thervu varum.. Neriya vacancies yoda varum.. Nalla padinga..

      Delete
  12. Gud afternoon admin mam,pg trb case details enachu

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Court hearing ah thalli vechrukanga but TRB legal team form panirkanga so seekiram cases close paniruvaanga..

      Delete
    2. Case govt nenacha ipavae close panirlam. Its govt decision only. After completion of corona only they will take step for it. Until we cant expect

      Delete
    3. Corona irukumbothu dhan notification vandhuchu..

      Delete
  13. தற்போதுஉள்ள Teacher students விகிதசாரம்

    துவக்கபள்ளி 1:30
    நடுநிலைபள்ளி 1:35
    உயர் நிலை பள்ளி 1:40

    1:30 கொண்டு வந்தால் பட்டதாரி பணி இடம் அதிகரிக்கும்


    ReplyDelete
    Replies
    1. Appadiya..........Vera enna madam.........irukara posting eppadi poda porainganu solla madam.........

      Delete
    2. Creation kku ellam vaippu cammi madam.....ellarum asaipadaradhu ellam nadakadhu.............madam

      Delete
  14. இப்போது அரசு இருக்கும் நிதிச்சுமையில் (1:25) இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. சர்பிளஸ் எல்லாம் போட்டு முடித்துவிட்டு மிச்சசொச்ச காலியிடத்தை ஏதாவது ஒரு முறையில் நிரப்பினால் கொஞ்ச பேராவது பணியில் சேர்ந்து நல்லா இருந்தால் சரி. இதற்கு எப்போது முடிவு வரும் என்று இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here