Skip to main content

அதிக பெண் ஆசிரியர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-ம் இடம்: UDISE+ ஆய்வறிக்கை பகுதி-1

 


மத்திய அரசு சமீபத்தில் இந்தியப் பள்ளிக் கல்வித்துறையின் 2019-20-ம் ஆண்டுக்கான 'கல்வி ப்ளஸ் ஒருங்கிணைந்த தகவல் முறை' (UDISE+) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையில் மாநில வாரியாக இந்திய பள்ளிகளின் நிலை, மாணவ / மாணவியர்களின் சேர்க்கை விகிதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கல்வியின் தரம், இடைநிற்றல் விகிதம், கழிப்பறை வசதி என பல்வேறு வகையான தகவல்கள் இருந்தன.

அதில் இந்தியாவில் 22 சதவிகிதம் பள்ளிகளில் மட்டுமே இணைய வசதியும், 30 சதவீதத்துக்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே கணினி வசதியும் உள்ளதென கூறப்பட்டுள்ளது. இந்தத்தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாணவர் சேர்க்கையிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும், கல்வியின் தரத்திலும், சுகாதாரத்திலும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் செயல்பாடு குறித்து விரிவாக அலசினோம். அதன்முடிவில் நமக்கு தெரியவந்த தரவுகள் பற்றி இங்கு விரிவாக காணலாம்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 7,78,842 தொடக்கப் பள்ளிகள், 4,43,643 நடுநிலைப் பள்ளிகள், 1,51,489 உயர்நிலைப் பள்ளிகள், 1,33,734 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 15,07,708 பள்ளிகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் 58,897. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும், 9,392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 5,788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் உள்ளன.


இந்தியாவில் அதிக பள்ளிகள் கொண்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில், உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 2,54,352 பள்ளிகள் உள்ளன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம் (1,33,379 பள்ளிகள்), மகாராஷ்டிரா (1,10,229 பள்ளிகள்), ராஜஸ்தான் (1,06,240 பள்ளிகள்), மேற்கு வங்கம் (95,755 பள்ளிகள்) ஆகியவை உள்ளன.


இந்தியாவில் அரசுப் பள்ளிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்தம் 10,32,570 அரசுப் பள்ளிகள் உள்ளன. அதிக அரசுப் பள்ளி கொண்ட மாநிலங்களுக்கான பட்டியலில் உத்தரப் பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 1,37,638 அரசுப் பள்ளிகள் உள்ளன. புவிவியல் ரீதியிலும், மக்கள் தொகை அடர்த்தியிலும் உத்தரப் பிரதேசம் பெரிய மாநிலம் என்பது கவனிக்கத்தக்கது.




தமிழ்நாட்டில் 24,310 தொடக்கப்பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகள் உள்ளன.


3,37,499 தனியார்ப் பள்ளிகளைக் கொண்ட இந்தியாவில், 60,121 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், அதிகபட்சமாக, ராஜஸ்தானில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை உள்ள பள்ளிகள் 8,407 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 3,460 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் தனியார்ப் பள்ளிகளைப் பொருத்தவரை 12,382 பள்ளிகள் உள்ளன.


15 லட்சம் பள்ளிகளைக் கொண்ட இந்தியாவில் 96.8 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில், தொடக்கப்பள்ளியில் 24,99,645 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளியில் 28,98,091 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளியில் 16,66,853 ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளியில் 26,22,988 ஆசிரியர்கள் என மொத்தம் 96,87,577 ஆசிரியர்கள் இந்தியாவில் பணிபுரிந்து வருகின்றனர்.

அதேபோல், 58 ஆயிரம் பள்ளிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், 5.62 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிக ஆசிரியர்கள் பணிபுரியும் மாநிலங்களின் பட்டியலை ஆய்வு செய்தால், உத்தரப் பிரதேசத்தில் 14 லட்சத்து 23 ஆயிரத்து 995 ஆசிரியர்கள் உள்ளனர். அதேபோல், மகாராஷ்டிராவில் 7.8 லட்சம் ஆசிரியர்களும், ராஜஸ்தானில் 7.7 லட்சம் ஆசிரியர்களும், பீகார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 6 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர்.


இந்தியாவில் உள்ள 96.8 லட்சம் ஆசிரியர்களில், 49.3 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 8.2 லட்சம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 36.02 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 3.25 லட்சம் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மொத்த ஆசிரியர் எண்ணிக்கையில் 47 லட்ச ஆண் ஆசிரியர்களும், 49 லட்ச பெண் ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

இதேபோல் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், 5.6 லட்சம் ஆசிரியர்களில், 2.27 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளிலும், 77 ஆயிரம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் பேர் தனியார்ப் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தியப் பள்ளிகளில் அதிக பெண் ஆசிரியர்கள் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 1.4 லட்சம் ஆண் ஆசிரியர்களும் - 4.2 லட்சம் பெண் ஆசிரியர்களும் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 2.27 லட்சம் ஆசிரியர்களில், 79,490 ஆண்களும், 1,47,816 பெண்களும் பணியாற்றுகின்றனர். முதலிடத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் 6,42,959 பெண் ஆசிரியர்கள் உள்ளனர்.

கடந்த 2019-20 ஆண்டு மாணவர்கள் சேர்க்கையின்படி, இந்தியாவில் 26.45 கோடி மாணவ / மாணவியர் உள்ளனர். இதில், 13.7 கோடி ஆண்களும், 12.7 கோடி பெண்களும் அடங்குவர். தமிழகத்தைப் பொறுத்தவரை 68 லட்சம் மாணவர், 65.1 லட்சம் மாணவிகள் என 1.33 கோடி பேர் உள்ளனர்.


இந்தியாவில் அதிக மாணவ / மாணவிகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில், உத்தரப் பிரதேசத்தில் 4.58 கோடி மாணவ, மாணவிகளும்; பீகாரில் 2.53 கோடி மாணவ, மாணவிகளும்; மகாராஷ்டிராவில் 2.30 கோடி மாணவ, மாணவிகளும் உள்ளனர். பள்ளி வாரியாக எடுத்துக் கொண்டால், அரசுப் பள்ளிகளில் 1,30,931,634 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2,74,98,530 பேரும், தனியார் பள்ளிகளில் 9,82,09,302 பேரும், மற்ற பள்ளிகளில் 78,88,109 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.

இதில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 45,93,422 பேரும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,25,308 பேரும், தனியார்ப் பள்ளிகளில் 64,15,398 பேரும், மற்ற பள்ளிகளில் 83,755 மாணவ, மாணவிகளும் உள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் பேரில், 22,14,892 பேர் மாணவர்கள், 23,78,530 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவ / மாணவிகளின் எண்ணிக்கையைத் தெரிந்து கொண்டோம். அடுத்தக் கட்டுரையில், இந்தியா மற்றும் தமிழகத்தின் GER குறியீடு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேர்ச்சிபெறாதோர் விகிதம், இடைநிற்றல் விகிதம், தக்கவைப்பு வீதம் போன்றவற்றைக் குறித்து விரிவாகக் காணலாம்.

Comments

  1. ஆணுக்கு பெண் இளப்பில்லை என்று ஆளும் காலத்திலும் பெண்ணை இழிவுப்படுத்தும் ஈனபிறவிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...