Skip to main content

உடைந்த காலம்..

*நட்பு உடைந்து முகநூலானது..*.

*சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது.*..

*வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது.*..

*உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது...*


*குளக்கரை உடைந்து குளியலறை ஆனது..*.

*நெற்களம் உடைந்து கட்டடமானது.*..

*காலநிலை உடைந்து வெப்பமயமானது..*.

*வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது...*


*துணிப்பை உடைந்து நெகிழியானது..*.

*அங்காடி உடைந்து அமேசான் ஆனது...*

*விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது...*

*ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது...*


*கடிதம் உடைந்து இமெயிலானது...*

*விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது...*

*பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது...*

*புத்தகம் உடைந்து இ-புக் ஆனது...*


*சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது..*

*இட்லி உடைந்து பர்கர் ஆனது...*

*தோசை உடைந்து பிட்சாவானது...*

*குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது...*


*பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது...*

*வெற்றிலை உடைந்து பீடாவானது...*

*தொலைபேசி உடைந்து கைபேசியானது...*

*வங்கி உடைந்து  பே டி எம் ஆனது...*


*நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது...*

*புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது...*

*மார்க்கம் உடைந்து மதவெறியானது...*

*அரசியல் உடைந்து அருவெறுப்பானது...*


*பொதுநலம் உடைந்து சுயநலமானது...*

*பொறுமை உடைந்து அவசரமானது...*

*ஊடல் உடைந்து விவாகரத்தானது...*

*காதல் உடைந்து காமமாய்ப் போனது...*


*நிரந்தரம் உடைவது நிதர்சனம்* *ஆகையால்...*

*உடைவது உலகினில் நிரந்தரமானது...*

*தீயவை உடைத்து நீ தீங்கறச் செய்திடில்...*

*அல்லவை உடைந்திங்கு நல்லவை வாழுமே...*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. உடைந்த காலம் - என்னே அழகான உருவகம். அருமை சகோதரி.

    ReplyDelete
  3. மனோ சகோதரரே தங்கள் மனதில் தோன்றுவதற்குல்லாம் இங்கு அனைவரும் பதில் கூற இயலாது. எந்த பதிவிற்கு என்ன கருத்து பதிவிட வேண்டும் என்பது அவரவர் உரிமை. நான் 2017 டெட் தேர்ச்சி பெற்றேன். இந்த வலைத்தளத்தில் மட்டுமே எதார்த்தமான உண்மையான கருத்துக்கள் பதிவிட படுகின்றன. மேலும் அட்மினும் டெட் தேர்ச்சி பெற்றவர் பலமுறை டெட் தீர்வுகளுக்காக அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். எனவே உங்கள் சொந்த அவதுறுகளை பரப்ப வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ௮ப்படியா ௮ப்ப ௨லகம் ௮றிந்த ௨த்தமரா?

      Delete
    3. அறிவுகெட்ட அன்நோன் நீ அத பத்தி எல்லாம் பேசாத.

      Delete
    4. மானம் கெட்ட ௮ன்நோன் ஜால்ரா போடத

      Delete
    5. 1:2 உங்களுக்கு சாதகமா பேசினா நல்லவங்க இல்லனா ஜால்ராவா

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. மனோ அவர்களே அதற்காக இந்தியாவில் உள்ள அனைவரும் இங்கு வந்து தினம் தினம் கருத்துக்களை பதிவு செய்வார்களா

      Delete
    8. யார் யார் பார்க்கிறார்களோ அதில் யார் கருத்து பதிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் தான் பதிவிடுவார்கள். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வலைத்தளத்தை பார்க்க வேண்டாம். உங்கள் சொந்த கருத்துக்களை திணிக்க வேண்டாம்

      Delete
    9. எல்லா வலைத்தளமும் இப்படி தான். "Gang" என்ற வார்த்தை எல்லாம் தேவையற்றது. சொல்லில் கவனம் தேவை.

      Delete
    10. மனோராக் அப்டியே gang கமெண்ட் பண்னா உங்களுக்கு என்ன? அதுக்குன்னு டெய்லி பத்து பேர கூட்டிட்டு வந்தா கமெண்ட் போடுவாங்க. முட்டாள். உனக்கு வேணாம்னா பாக்காத. தேவை இல்லாம பேசிட்டு.

      Delete
    11. மனோராக் கல்விசெய்தில மணியரசனா வச்சு மணி ஆட்டிட்டு இருந்தாங்க அது கூட தெரியாம இங்க வந்து பேசிட்டு இருக்கிங்க. ஏதோ இந்த அட்மின் உண்மையான தகவலை கேட்டு சொல்ராங்க அது பொறுக்கலயா? பொண்ணுங்கன்னு சொன்னாலே மட்டம் தட்ட வந்துருவிங்க. பொம்பளைங்கள மட்டம் தட்டு உங்க அம்மா உங்களை சரியா வளக்கலைன்னு காட்டிக்க வேணாம்.

      Delete
    12. I have been watching this website from 2017. It has never been gangs or nothing. And moreover admin is a women who is full of courage. Every time some rogues will be disturbing like this only. This website has been true motivation for many people.

      Manorag you don't have rights to impose your perceptions on others. I strongly oppose your damn useless thoughts.

      Delete
  4. Very nice thought madam

    ReplyDelete
  5. Admin mam pg case details therinchatha

    ReplyDelete
  6. Pg case hearing is on 6th of July..

    ReplyDelete
  7. அட்மின் மேடம் தாங்கள் எந்த தகவலும் பதிவிடாதிர்கள். இந்த மனோராக் யார்?? அவருக்கு என்ன தெரியும் இந்த வலைத்தளம் பற்றி?? ஒரு 10நாட்களாக கருத்து பதிவிடுகிறேன் என்ற பெயரில் குறை கூறுவதை மட்டும் குறிக்கோளாக வைத்துள்ளார். இதில் 1:2 என்று வேலை கேட்க தகுதி இல்லாத அந்த கும்பல் வேறு. நீங்கள் தகவல் தெரிந்தாலும் பதிவு செய்ய வேண்டாம். நன்றி.

    ReplyDelete
  8. நன்றிகெட்ட மனிதர்கள்.

    ReplyDelete
  9. ஆமா அட்மின் சிஸ்டர் நீங்க தகவல் சொல்லாதிங்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...