Skip to main content

உங்களை நம்புங்கள்..

*உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம்.

“என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்.*


*அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.*


*உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்?*


*நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும்.*


*அப்படிப் பொறுப்புகள் வரும் போது, வாழக் கூடாது என்ற வெறுப்புணர்வு உங்கள் உள்ளத்தில் மறைந்து இருந்தால்,அது தானாகவே அழிந்து விடும்.*


*குடும்பப் பொறுப்புகள், பணியாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள், சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும்.*


*பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர்கள்.* *தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர் விட்டுப் பிரகாசிப்பீர்கள்.*


*பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேருகிற போது நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.*


*நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படத்*

*தொடங்கினால் நீங்கள் எவருக்கும் பயப்படத் தேவையில்லை.*


*மற்றவர்கள் பொறாமை உணர்வுடன் பேசுகின்ற ஏச்சுக்களையும், கிண்டல்களையும், நக்கல்களையும் கேட்டு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை*.


*நீங்கள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து, முழு மூச்சுடன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குங்கள்.*


*வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், முழு முயற்சியுடன் உழைப்பை சிந்துங்கள்.*

*ஆர்வமும், முழு முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையின் மூலம் வருவது தான்.*


*ஆம்.,நண்பர்களே..,*


*“ என்னால் முடியும்” என்று நீங்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும். “முடியாது” என்கிற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் தான் காணப்படுகிறது என்று சொன்னான், மாவீரன்d, மேலான வாழ்க்கை வாழ்வதற்கும் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் அல்லவா..?*


*தன்னம்பிக்கையை வளர்த்து, வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளுங்கள், சாதனை படையுங்கள்.* 


*உங்கள் மீது நம்பிக்கை வைத்து வீறு கொண்டு எழுந்து வாருங்கள், உலகம் உங்கள் வசப்படும்.*


*"DONT TRY TO IMPRESS PEOPLE; ALWAYS BE YOURSELF..''*



Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. நமது TET நண்பர்களுக்காக நேற்று பிரதோஷ பூஜையில் பணிநியமனம் கிடைக்க சங்கல்பம் செய்யப்பட்டது.சாமி அய்யர். சின்னமனூர்

    ReplyDelete
  3. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  4. என்ன இன்றைக்கு comments குறைவா இருக்கு, சண்டை போடும் ஆசிரிய பெருமக்கள் வரவில்லையோ

    ReplyDelete

Post a Comment