Skip to main content

பயப்படாதே மகனே, நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்..

 ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.


 ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.


சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும்,

அந்த சிறுவன் 

நான் இப்போது வளர்ந்திருக்கிறேன்,

இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.


சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள்.


ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற,

“எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்”

எனறான் அந்த சிறுவன்.


ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக 


“மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது”


என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார்.

பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.


முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது.


ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.


கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம், 

மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.


அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது.


இப்போது கொஞ்சம் பயப்படத் தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது.

ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடிப்பது போல் இருக்கிறது.


ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி, மூலையில் பதுங்கிக் கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது.


அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது  தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது.


நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான்,

அதில்,


*“பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது.*


கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது.


*பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது.*


*பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்*


இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது.


மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம்.


*நோயை விட,*

*அது குறித்த அச்சம் தான் பலரைக் கொல்கிறது.*


*எல்லோரும் இறைவனை நம்புகிறோம்.*

*நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான்(ர்), என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.*


 *இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது, ​*

*நம் இதயத்தில் இறைவன் ஒரு* *காகிதத்தை*  

*வைத்திருக்கிறான்*

*அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன்,  என்று எழுதி இருக்கிறது.*


கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு இதயத்தின் ஆழத்தில் எழுகிற நம்பிக்கை துணை இருக்கிறது.


*அழைக்கிற குரலுக்கு வருவேன் என்று கீதையில் கண்ணன் சொல்கிறார்.*


*வருத்தப் பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக இயேசு கூறுகிறார்.*


*கேட்கும் கைகளை வெறும் கையாக விடமாட்டேன் என்று அல்லாஹ் நம்பிக்கை தருகிறார்.*


*கடவுளின் பெயரால் கலவரம் செய்து பழகிவிட்ட நமக்கு,*

*இருளுக்குப் பிறகு வெளிச்சமும்,*

*இன்னலுக்குப் பிறகு மகிழ்ச்சியும்*

*தருவதாக இறைவன் சொன்ன சத்திய வார்த்தைகள் மறந்து விட்டன.*


*எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம்.*

*பயமும் அச்சமும்*

*நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.*


உலகம் பிழைக்கப் போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம்..



Comments

  1. Wishing everyone a blessed morning..

    ReplyDelete
  2. அர்த்தமுள்ள பதிவு சகோதரி

    ReplyDelete
  3. Good morning mam. Suuuuper article mam.

    ReplyDelete
  4. Replies
    1. Murali sir..

      CM cell ku try panni paarunga..

      Delete
    2. Mam, yesterday I spoke to ADW department school education superintendent, he said with in a week we call for your counseling...

      Delete
    3. Regarding wat sir sir

      Delete
    4. Murali sir..

      If there is no response within a week take some steps..

      Delete
    5. Rajesh sir, PG TRB2019 ADW posting

      Delete
  5. ஆண்டவனிடம் இருந்து வந்த வார்த்தையாக இருந்தாலும் அப்பாவிடம் இருந்து வந்த வார்த்தையாக இருந்தாலும் இவ்வார்தத்தைகள் மிகவும் ஆழமானது.

    ReplyDelete

  6. எப்படித்தான் இருக்கிறது குழந்தைகள் இல்லாத பள்ளிக்கூடம்?! - ஓர் ஏக்கப்பதிவு
    ``நெடுந்தவத்தில் பள்ளிக்கூடம்..!"

    எப்போதோ கரும்பலகையில் வரையப்பட்ட படத்தில் கால் அழிந்துபோன யானையொன்று,

    முழுமை அடைய வேண்டி நீண்ட தவம் புரிகிறது!

    தூசுபடர்ந்த மேசையின் மேல் யாருக்கோ சலனமின்றிக் காத்திருக்கும் ஒற்றை சாக்குகட்டி,

    தன் தனிமை தாங்காமல் துகள் துகளாய் கரைகிறது!

    மதிய விருந்துகளில் தன் சுற்றத்துடன் தவறாமல் கலந்துகொள்ளும் காகமொன்று,

    பரிமாற ஆளின்றி கரைந்து அழுகிறது!

    சுற்றுச்சுவர் ஓரம் நட்டுவைத்த மாங்கன்று, கல்லடிக்க ஆளின்றி காய் உதிராமல் உதிர்கிறது!

    வாயிற் கதவோரம் கதைகளுடன் நொறுக்குத்தீனி விற்ற பாட்டி,

    தீனியுடன் தன் அனுபவத்தைப் பங்குபோட ஆள்தேடி அலைகிறார்!


    அடிவாங்கி அடிவாங்கி நேரம் சொன்ன மணியொன்று, அடிக்க ஆளின்றி மௌனமாய் அழுகிறது!

    இடைவேளைப் பொழுதுகளில் சன்னல்வழி பழிப்பு காட்டி பாசமான அணில் ஒன்று, விளையாட ஆளின்றி வெறுமனே கிடக்கிறது!

    செல்லச் சண்டைகளில் வெள்ளைப்பூ தூவி சமரசம் செய்து வைத்த வேப்பமரம், லட்சம் பூக்களுடன் சண்டைக்குக் காத்திருக்கிறது!

    மாலை வேளைகளில் தன் கூடடைய வரும் வலசை பறவையொன்று, விட்டு விடுதலையாகும் குழந்தைகளின் கூச்சலின்றி, தான் வந்த இடம் சரிதானா என்ற குழப்பத்தில் தவிக்கிறது!

    வகுப்பறை சுவரில் வரையப்பட்ட தேவதை பொம்மையொன்று, தன் சிறகு முளைத்த தோழியரைக் காணாமல் நெடுநாளாய் வடக்கிருக்கிறது!

    கையுடைந்த நாற்காலியும்,

    காலுடைந்த மேசையும் தங்கள் துயரத்தைப் பகிர்ந்த படி துவண்டு போய்க் கிடக்கின்றன!

    வெறுமை வகுப்பறையைக் கடந்து செல்லும் ஆசிரியர், அதன் அமைதி தாங்காமல் அவ்வப்போது உடைகிறார்!

    ஆயிரம் குழந்தைகளை அள்ளிச் சுமந்த பள்ளி, இன்று சுமக்க ஆளின்றி மனச்சுமையில் தவிக்கிறது!

    - அகன் சரவணன்

    ReplyDelete
    Replies
    1. No words, awesome👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    2. அருமை நண்பரே

      Delete
    3. Very nice. Its depicting the reality.

      Delete
  7. பள்ளிக்கூடம் கானல் நீரோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here