Skip to main content

பயப்படாதே மகனே, நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்..

 ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.


 ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.


சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும்,

அந்த சிறுவன் 

நான் இப்போது வளர்ந்திருக்கிறேன்,

இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான்.


சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள்.


ரயில் நிலைய நடைமேடையில் நின்று, சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூற,

“எனக்குத் தெரியும், நீங்கள் ஏற்கனவே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறீர்கள்”

எனறான் அந்த சிறுவன்.


ரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை காதுக்கருகில் மெதுவாக 


“மகனே, வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால், இது உனக்கானது”


என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார்.

பயண சந்தோசத்தில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை.


முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும், த்ரில்லாகவும் இருந்தது.


ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான்.


கொஞ்ச நேரம் தான், கசகசவென சப்தம் அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் உருவாக்கும் சப்தம், 

மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்குகிறான்.


அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், நம் சிறுவனுக்கு சங்கடத்தைத் தருகிறது.


இப்போது கொஞ்சம் பயப்படத் தொடங்குகிறான். வயிறு வலிப்பது போல் தெரிகிறது.

ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடிப்பது போல் இருக்கிறது.


ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி, மூலையில் பதுங்கிக் கொள்கிறான், அவன் கண்களில் கண்ணீர் எழுகிறது.


அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது  தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வருகிறது.


நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரிக்கிறான்,

அதில்,


*“பயப்படாதே மகனே,நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது.*


கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை முகத்தில் எழுகிறது.


*பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைக்கிறது.*


*பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்கிறான்*


இதே சூழல் தான் இப்போது நமக்கும் இருக்கிறது.


மகிழ்ச்சியாக வாழ்ந்த அதே ஊரில் அச்சத்தோடு இருக்கிறோம்.


*நோயை விட,*

*அது குறித்த அச்சம் தான் பலரைக் கொல்கிறது.*


*எல்லோரும் இறைவனை நம்புகிறோம்.*

*நிச்சயமாக அவன் நம்மை நிராதரவாக விட மாட்டான்(ர்), என்ற உறுதி எல்லோருக்கும் இருக்கிறது.*


 *இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பியபோது, ​*

*நம் இதயத்தில் இறைவன் ஒரு* *காகிதத்தை*  

*வைத்திருக்கிறான்*

*அதில் உன்னோடு நான் இருக்கிறேன், உன்னோடு பயணம் செய்கிறேன்,  என்று எழுதி இருக்கிறது.*


கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு இதயத்தின் ஆழத்தில் எழுகிற நம்பிக்கை துணை இருக்கிறது.


*அழைக்கிற குரலுக்கு வருவேன் என்று கீதையில் கண்ணன் சொல்கிறார்.*


*வருத்தப் பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக இயேசு கூறுகிறார்.*


*கேட்கும் கைகளை வெறும் கையாக விடமாட்டேன் என்று அல்லாஹ் நம்பிக்கை தருகிறார்.*


*கடவுளின் பெயரால் கலவரம் செய்து பழகிவிட்ட நமக்கு,*

*இருளுக்குப் பிறகு வெளிச்சமும்,*

*இன்னலுக்குப் பிறகு மகிழ்ச்சியும்*

*தருவதாக இறைவன் சொன்ன சத்திய வார்த்தைகள் மறந்து விட்டன.*


*எனவே, பீதியும், மனச்சோர்வும் அடையாமல் இருப்போம்.*

*பயமும் அச்சமும்*

*நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.*


உலகம் பிழைக்கப் போராடும் இந்த நிச்சயமற்ற காலத்திலும் நம்பிக்கையோடு இருப்போம்..



Comments

  1. Wishing everyone a blessed morning..

    ReplyDelete
  2. அர்த்தமுள்ள பதிவு சகோதரி

    ReplyDelete
  3. Good morning mam. Suuuuper article mam.

    ReplyDelete
  4. Replies
    1. Murali sir..

      CM cell ku try panni paarunga..

      Delete
    2. Mam, yesterday I spoke to ADW department school education superintendent, he said with in a week we call for your counseling...

      Delete
    3. Regarding wat sir sir

      Delete
    4. Murali sir..

      If there is no response within a week take some steps..

      Delete
    5. Rajesh sir, PG TRB2019 ADW posting

      Delete
  5. ஆண்டவனிடம் இருந்து வந்த வார்த்தையாக இருந்தாலும் அப்பாவிடம் இருந்து வந்த வார்த்தையாக இருந்தாலும் இவ்வார்தத்தைகள் மிகவும் ஆழமானது.

    ReplyDelete

  6. எப்படித்தான் இருக்கிறது குழந்தைகள் இல்லாத பள்ளிக்கூடம்?! - ஓர் ஏக்கப்பதிவு
    ``நெடுந்தவத்தில் பள்ளிக்கூடம்..!"

    எப்போதோ கரும்பலகையில் வரையப்பட்ட படத்தில் கால் அழிந்துபோன யானையொன்று,

    முழுமை அடைய வேண்டி நீண்ட தவம் புரிகிறது!

    தூசுபடர்ந்த மேசையின் மேல் யாருக்கோ சலனமின்றிக் காத்திருக்கும் ஒற்றை சாக்குகட்டி,

    தன் தனிமை தாங்காமல் துகள் துகளாய் கரைகிறது!

    மதிய விருந்துகளில் தன் சுற்றத்துடன் தவறாமல் கலந்துகொள்ளும் காகமொன்று,

    பரிமாற ஆளின்றி கரைந்து அழுகிறது!

    சுற்றுச்சுவர் ஓரம் நட்டுவைத்த மாங்கன்று, கல்லடிக்க ஆளின்றி காய் உதிராமல் உதிர்கிறது!

    வாயிற் கதவோரம் கதைகளுடன் நொறுக்குத்தீனி விற்ற பாட்டி,

    தீனியுடன் தன் அனுபவத்தைப் பங்குபோட ஆள்தேடி அலைகிறார்!


    அடிவாங்கி அடிவாங்கி நேரம் சொன்ன மணியொன்று, அடிக்க ஆளின்றி மௌனமாய் அழுகிறது!

    இடைவேளைப் பொழுதுகளில் சன்னல்வழி பழிப்பு காட்டி பாசமான அணில் ஒன்று, விளையாட ஆளின்றி வெறுமனே கிடக்கிறது!

    செல்லச் சண்டைகளில் வெள்ளைப்பூ தூவி சமரசம் செய்து வைத்த வேப்பமரம், லட்சம் பூக்களுடன் சண்டைக்குக் காத்திருக்கிறது!

    மாலை வேளைகளில் தன் கூடடைய வரும் வலசை பறவையொன்று, விட்டு விடுதலையாகும் குழந்தைகளின் கூச்சலின்றி, தான் வந்த இடம் சரிதானா என்ற குழப்பத்தில் தவிக்கிறது!

    வகுப்பறை சுவரில் வரையப்பட்ட தேவதை பொம்மையொன்று, தன் சிறகு முளைத்த தோழியரைக் காணாமல் நெடுநாளாய் வடக்கிருக்கிறது!

    கையுடைந்த நாற்காலியும்,

    காலுடைந்த மேசையும் தங்கள் துயரத்தைப் பகிர்ந்த படி துவண்டு போய்க் கிடக்கின்றன!

    வெறுமை வகுப்பறையைக் கடந்து செல்லும் ஆசிரியர், அதன் அமைதி தாங்காமல் அவ்வப்போது உடைகிறார்!

    ஆயிரம் குழந்தைகளை அள்ளிச் சுமந்த பள்ளி, இன்று சுமக்க ஆளின்றி மனச்சுமையில் தவிக்கிறது!

    - அகன் சரவணன்

    ReplyDelete
    Replies
    1. No words, awesome👏👏👏👏👏👏👏👏👏👏👏

      Delete
    2. அருமை நண்பரே

      Delete
    3. Very nice. Its depicting the reality.

      Delete
  7. பள்ளிக்கூடம் கானல் நீரோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...