Skip to main content

TRB - 2,098 முதுநிலை ஆசிரியர் காலி பணியிட தேர்வு எப்போது???

 



தமிழகத்தில் 2,098 முதுநிலை ஆசிரியர் பணிக்கு மார்ச் 1 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்த நிலையில் , இந்தத் தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 1,863 முதுநிலை ஆசிரியர் மற் றும் உடற்கல்வி இயக்குநர் நிலை - | பணியிடங்கள் மற்றும் 236 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 2,098 பணியிடங்களை நிரப்புவதாக கடந்த பிப்.11 ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதற்காக ஆன்லைன் மூலம் மார்ச் 1 ம் தேதி முதல் மார்ச் 25 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் , எழுத்துத் தேர்வு ஜூன் 26 , 27 ம் தேதிகளில் நடத்தப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த பிப் . 26 ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாக முதுநிலை ஆசிரியர் தேர்வு தேதி வெளியிடப்பட்டதால் , தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என முதுநிலை பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். இதற்காக மார்ச் 1 ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க முதுநிலை பட்டதாரிகள் தயாராகினர். ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி ஒத்தி வைக்கப்படுவதாகவும் , ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி எப்போது கிடைக்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென அறிவித்தது.

இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6 ம் தேதியே முடிந்துவிட்டது. மே 2 ம் தேதிதான் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது என்ற போதிலும் , வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் பறக்கும் படை சோதனை போன்றவை முடிவுக்கு வந்துள்ளன.ஏற்கெனவே கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் அனைத்தும் பூட்டிக்கிடக்கின்றன. 9 , 10 , பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புகள் மட்டுமே சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில் , கொரோனா 2 வது அலை அதிகரித்து வருவதால் பிளஸ் 2 வகுப்புகள் மட் டுமே பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. மற்ற வகுப்புகளும் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஒரு கல்வி ஆண்டு முழுவதும் கொரோனாவில் கழிந்துள்ளது.

இந்த காலத்தில் எந்த ஆசிரியர் பணிக்கும் தேர்வு நடத்தாத நிலையில் , முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பை வெளியிட்ட போதிலும் , விண்ணப்பம் பெறுவதை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்திவைத்துள்ளது. எனவே முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட்டு தேர்வும் குறித்த நேரத்தில் நடத்த வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Comments

  1. தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  2. Y you r saying like.think positively and exam will come surely.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி இந்த வீணர்கள் புரளியை நம்பாமல் படிக்கவும்

      Delete
    2. Ok sir. I think they belong to second list category. That's y they are saying like this.

      Delete
    3. ஆம் சகோதரி. தேர்வு அறிவிப்பு வந்த பின்பும் பேராசை இவர்களுக்கு.. தாங்கள் முயற்சியை கைவிடாமல் படிக்கவும். வாழ்த்துக்கள்

      Delete
    4. Priya mam adhuku whatsap la oru kumbaley suthittu iruku, ellam waste of time.. Neenga padinga..

      Delete
    5. Kandipa hard work panni nalla yelthanum mam.

      Delete
  3. டீஆர்பி யில் நடந்த குளறுபடிகள் மற்றும் ௮திகாரிகளின் பற்றி தெரிந்து நம்புவது முட்டாள் தனம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...