Skip to main content

இறை..

 நான்  யார்?


அதைக் கற்றேன்-

இதைக் கற்றேன்-

அறிவாளி நான் என இறுமாந்தேன்.


அதைச் செய்தேன்- இதைச்செய்தேன-

சாதனையாளன் 

நான் என, சவடால் 

விட்டேன்.


அன்றொரு நாள் அதிகாலை,

யாரே தீண்ட திடுக்கிட்டு 

விழித்தேன்.


ஏதோ ஒன்று, ஏளனமாய்

எனைப் பார்த்து சிரித்தது.


யார் நீ என்றேன்?


நீ தான் என்றது அது.


நீதான நான் என்றால்

பிறகு நான் யார் என்றேன்.


நான்தான் நீ என்றது.


குழப்ப வந்த குட்டிச்சாத்தானா- என கோபமாய் கேட்டேன்.


நான் எத்தகைய

 ஆற்றல் மிக்கவன் -அறிவாளி - என்னையே குழப்புகிறாயா என்று ஏளனமாய் கேட்டேன்.


அப்படியா சரி என்று அது ஒரு கேள்வி கேட்டது.


நீ பெறும் அறிவாளிதானே-

உன் அறிவைக்கொண்டு

நீ உண்ணும் உணவின் உட்கூறுகளை தனித்தனியே பிரித்து- வைட்டமின்கள் ,தாது உப்புக்கள்,புரதம்  என

அந்தந்த உறுப்புகளுக்கு தேவையானதை 

தனித்தனியேஅனுப்பி 

வைத்திடு என்றது.


திடுக்கிட்டேன்.


உணவின் உள்நுழைந்து உட்கூறு பிரிக்கும் அறிவெனக்கேது.

பிரித்தாலும் அந்தந்த உறுப்புகளுக்கு எங்ஙனம்

அனுப்புவேன்.


சற்றே தடுமாறி நின்றேன்.


மீண்டும் கேட்டது

நீ பெறும் ஆற்றல் உள்ளவன் தானே.

உன் ஆற்றலைக்கொண்டு,


ஒரு ஐந்து நிமிடம் உன்

இதயத்தை இயக்கிக்கொள்


சில நிமிடம் உன் சீரணத்தை பார்த்துக்கொள்.


சொற்ப நேரத்திற்கு

உன் சுவாசத்தை

நடத்திக்காட்டு.

  

உடலில் லட்ச லட்சமாய்

மடிந்துவிடும் உயிரணுக்களை ஒரு நாளைக்கு மட்டும்  நீ உருவாக்கிக்கொள் .

என்றது-


கிறுகிறுத்துப்போனேன்.


நீ அறிவாளியா

உன்னுள் இருக்கும்

நான் அறிவாளியா  

என்றது?


நீ திறனாளியா-

உன்னுள் இருக்கும் 

நான் திறனாளியா 

என்றது.


மயங்கிய நிலையில் நான் கேட்டேன்.

 

நீ என்னுள்ளேதான் இருக்கிறாயா?


 ஆம் என்றது அது.


அப்படியானால் நீயும் நானும் ஒன்றா? என்றேன்


இல்லை ஆனால் ஆமாம்

என்றது.


விழிபிதுங்கினேன்.

சிரித்துக்கொண்டே சொன்னது.


உன்னுள் நான் இருப்பதை 

நீ உணரும் வரை -நானும் நீயும் வேறு வேறு.


உணர்ந்தபின்னே நானும் நீயும் ஒன்று. என்றது.


அப்படியானால் உன்னுடைய அறிவு ,ஆற்றல் அனைத்தும் எனக்கும் உண்டா என்றேன்

.

ஆம் என்றது.


நீ சொல்வதை நான் அறிந்து கொண்டாலும்-


நடைமுறையில் பார்க்கையில்

உன்னளவு ஆற்றலும்

அறிவும் எனக்கு இருப்பதாய் தெரியவில்லையே 

என்றேன்.


சிரித்துக்கொண்டே சொன்னது-


நீ அறிந்து கொண்டால் போதாது- 

உணர்ந்து கொண்டால் மட்டுமே

#உண்மை #உதிக்கும்,

என்று சிரித்து மறைந்தது.


அறிவால் அறிவது முதல்படி

உணர்வால் -உணர்வதே உருப்படி.. என்பதை உணர்ந்தேன்


கர்வம்  கலைந்தேன்.

ஆணவம் அழித்தேன்.

அகங்காரம் அகற்றினேன்.


இறையே நாம்.

நாமே இறை என்றுணர தலைப்பட்டேன்.


ஆனந்தம் கொண்டேன்.


உணர்ந்து கொள்ள

உய்வு உண்டாம்.


தெரிந்து கொள்ள

தேர்ச்சி உண்டாம்.


நீயும் இறை.

நானும் இறை.


அனைவரும் அறிவோம்!

அனைவரும்இறையே.!

ஏன்-அனைத்தும் இறையே.


ஆனந்தமாய் வாழ்வோம்!

ஆக்கியோன் நாமே(இறையே)!


நம்முள் உறையும்

இறையை உணர்ந்து-

இனி என்னாளும்

இன்பமாய் வாழ்வோம்!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Super thought admin madam

    ReplyDelete
  3. Gud evg admin mam.pg trb Ku current affairs entha mnth la entha year padikanum.oru idea Venu

    ReplyDelete
    Replies
    1. Gudevng mam/sir..

      Its best to start from one months before date of notification. You need to go through everything..

      But my opinion is even if you spend time for current affairs, its very hard to score the marks or expect questions frm what u went through.. Bcz there wil be current affairs, gk and sports also. Better to concentrate much on ur major..

      Delete
    2. Ok admin mam.thank you

      Delete
  4. ஆமா சிஸ் நீங்க சொல்றது சரி தான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..