Skip to main content

இறை..

 நான்  யார்?


அதைக் கற்றேன்-

இதைக் கற்றேன்-

அறிவாளி நான் என இறுமாந்தேன்.


அதைச் செய்தேன்- இதைச்செய்தேன-

சாதனையாளன் 

நான் என, சவடால் 

விட்டேன்.


அன்றொரு நாள் அதிகாலை,

யாரே தீண்ட திடுக்கிட்டு 

விழித்தேன்.


ஏதோ ஒன்று, ஏளனமாய்

எனைப் பார்த்து சிரித்தது.


யார் நீ என்றேன்?


நீ தான் என்றது அது.


நீதான நான் என்றால்

பிறகு நான் யார் என்றேன்.


நான்தான் நீ என்றது.


குழப்ப வந்த குட்டிச்சாத்தானா- என கோபமாய் கேட்டேன்.


நான் எத்தகைய

 ஆற்றல் மிக்கவன் -அறிவாளி - என்னையே குழப்புகிறாயா என்று ஏளனமாய் கேட்டேன்.


அப்படியா சரி என்று அது ஒரு கேள்வி கேட்டது.


நீ பெறும் அறிவாளிதானே-

உன் அறிவைக்கொண்டு

நீ உண்ணும் உணவின் உட்கூறுகளை தனித்தனியே பிரித்து- வைட்டமின்கள் ,தாது உப்புக்கள்,புரதம்  என

அந்தந்த உறுப்புகளுக்கு தேவையானதை 

தனித்தனியேஅனுப்பி 

வைத்திடு என்றது.


திடுக்கிட்டேன்.


உணவின் உள்நுழைந்து உட்கூறு பிரிக்கும் அறிவெனக்கேது.

பிரித்தாலும் அந்தந்த உறுப்புகளுக்கு எங்ஙனம்

அனுப்புவேன்.


சற்றே தடுமாறி நின்றேன்.


மீண்டும் கேட்டது

நீ பெறும் ஆற்றல் உள்ளவன் தானே.

உன் ஆற்றலைக்கொண்டு,


ஒரு ஐந்து நிமிடம் உன்

இதயத்தை இயக்கிக்கொள்


சில நிமிடம் உன் சீரணத்தை பார்த்துக்கொள்.


சொற்ப நேரத்திற்கு

உன் சுவாசத்தை

நடத்திக்காட்டு.

  

உடலில் லட்ச லட்சமாய்

மடிந்துவிடும் உயிரணுக்களை ஒரு நாளைக்கு மட்டும்  நீ உருவாக்கிக்கொள் .

என்றது-


கிறுகிறுத்துப்போனேன்.


நீ அறிவாளியா

உன்னுள் இருக்கும்

நான் அறிவாளியா  

என்றது?


நீ திறனாளியா-

உன்னுள் இருக்கும் 

நான் திறனாளியா 

என்றது.


மயங்கிய நிலையில் நான் கேட்டேன்.

 

நீ என்னுள்ளேதான் இருக்கிறாயா?


 ஆம் என்றது அது.


அப்படியானால் நீயும் நானும் ஒன்றா? என்றேன்


இல்லை ஆனால் ஆமாம்

என்றது.


விழிபிதுங்கினேன்.

சிரித்துக்கொண்டே சொன்னது.


உன்னுள் நான் இருப்பதை 

நீ உணரும் வரை -நானும் நீயும் வேறு வேறு.


உணர்ந்தபின்னே நானும் நீயும் ஒன்று. என்றது.


அப்படியானால் உன்னுடைய அறிவு ,ஆற்றல் அனைத்தும் எனக்கும் உண்டா என்றேன்

.

ஆம் என்றது.


நீ சொல்வதை நான் அறிந்து கொண்டாலும்-


நடைமுறையில் பார்க்கையில்

உன்னளவு ஆற்றலும்

அறிவும் எனக்கு இருப்பதாய் தெரியவில்லையே 

என்றேன்.


சிரித்துக்கொண்டே சொன்னது-


நீ அறிந்து கொண்டால் போதாது- 

உணர்ந்து கொண்டால் மட்டுமே

#உண்மை #உதிக்கும்,

என்று சிரித்து மறைந்தது.


அறிவால் அறிவது முதல்படி

உணர்வால் -உணர்வதே உருப்படி.. என்பதை உணர்ந்தேன்


கர்வம்  கலைந்தேன்.

ஆணவம் அழித்தேன்.

அகங்காரம் அகற்றினேன்.


இறையே நாம்.

நாமே இறை என்றுணர தலைப்பட்டேன்.


ஆனந்தம் கொண்டேன்.


உணர்ந்து கொள்ள

உய்வு உண்டாம்.


தெரிந்து கொள்ள

தேர்ச்சி உண்டாம்.


நீயும் இறை.

நானும் இறை.


அனைவரும் அறிவோம்!

அனைவரும்இறையே.!

ஏன்-அனைத்தும் இறையே.


ஆனந்தமாய் வாழ்வோம்!

ஆக்கியோன் நாமே(இறையே)!


நம்முள் உறையும்

இறையை உணர்ந்து-

இனி என்னாளும்

இன்பமாய் வாழ்வோம்!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Super thought admin madam

    ReplyDelete
  3. Gud evg admin mam.pg trb Ku current affairs entha mnth la entha year padikanum.oru idea Venu

    ReplyDelete
    Replies
    1. Gudevng mam/sir..

      Its best to start from one months before date of notification. You need to go through everything..

      But my opinion is even if you spend time for current affairs, its very hard to score the marks or expect questions frm what u went through.. Bcz there wil be current affairs, gk and sports also. Better to concentrate much on ur major..

      Delete
    2. Ok admin mam.thank you

      Delete
  4. ஆமா சிஸ் நீங்க சொல்றது சரி தான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..