Skip to main content

எறும்புகள்..

இது கதையுமல்ல, கவிதையுமல்ல.. ஒரு நிகழ்வு..!!*


ஒருநாள்

மாலை நேரத்திலே!

இளையராஜாவின் இசையினிலே!

இதயம் வருடும் பாடல்களை!

சுவற்றில் சாய்ந்து கண்கள் மூடி!

இதமாய் ரசித்து அமர்ந்திருந்தேன்!


கழுத்தில் ஏதோ சுருக்கென்றது!

திரும்பிப் பார்த்தால்!

எறும்பின் வரிசை!

நாளைய தேவைக்கு!

இன்றே இரை தேடி!

சீரான வரிசையில் சிறப்புடனே!

சுறு சுறுப்பாக

இயங்கிக்கொண்டிருந்தது!


எறும்பிடம் பாடம் கற்கலாமென்று்!

பள்ளிப் பாடத்திலும்!

அறிஞர்கள் பலரின்

கருத்திலும் கவிதையிலும்

அறிந்திருக்கிறேன்!


எத்தனை உயர்ந்த சுறு சுறுப்பு!

எதிர்கால தேவைக்கு சேமிப்பு!

இனிப்பில் மண் கலந்திருந்தாலும் ,

இனிப்பை மட்டும் பிரித்தெடுக்கும்!

இஷ்டப்படி இயங்காமல்!

சீராய் செல்லும் அதன் பாதையிலே!


இப்படி நிறைய நன்மைகளை

முன்பே அதனிடம் கற்றிருந்தாலும்!

புதிதாய் கற்க்கும் ஆர்வத்தில்!

தடையற்ற அதன் பாதையிலே!

தடைகள் போல

என் விரல் வைத்தேன்!


பிரச்சனையற்ற அதன் பயணத்திலே!

பிரச்சனையாக இப்போது

என விரல்கள்!

வரிசைப்பயணம் தடை பட்டதால்!

வழி தெரியாத எறும்பெல்லாம்

தாறு மாறாய்ச் சிதறியது!


அவற்றில் சில எறும்புகளோ!

என் விரலைக் கண்டு

மிரண்டு பயந்து!

தொடர்ந்து முன்னேறிச் செல்லாமல்!

வந்த வழியே திரும்பியது!


இன்னும் சிற்சில எறும்புகளோ!

என் விரலை விட்டு விலகிச் சென்று

சுற்றி வளைந்து மறுபுறம் சென்று!

மீண்டும் பயணத்தை தொடங்கியது!


இன்னும் சிற்சில எறும்புகளோ!

என் விரலின் தடைய

எளிதென எண்ணி! ஒருபுறம் ஏறி

மறுபுறம் இறங்கி இனிதாய்

பயணத்தை தொடங்கியது!


இன்னும் சிற்சில எறும்புகளோ!

என் விரலை தடையென கருதாமல்!

தைரியமாய் ஏறி நருக்கென்று கடித்ததும்!

வலி தாங்காமல் விருட்டென்று

விரல்களை இழுத்துக் கொண்டேன்!


இவ்வளவு சிறிய எறும்புகளுக்குள்!

இத்தனை பல குணங்களா!!

அழகாய் அறிவு உணர்த்தியது!

நம்மிலும் இது போல் பலர் உண்டு!


வாழ்வின் நல்ல முயற்சிகளை

பிரச்சனைகளுக்கு பயந்து தொடராமல்!

திரும்பி விடுபவர்கள்!


பிரச்சனைகளை விட்டு விலகிச் சென்று

அமைதியாய் இருந்து உயர்பவர்கள்!


பிரச்சனைகளை எளிதென நினைத்து!

சமாளித்து சாதிப்பவர்கள்!


பிரச்சனைகளுக்கே

பிரச்சனைகளை கொடுத்து!

எதிர்த்து நின்று வெற்றி பெறுபவர்கள்!


அற்புதமான பாடம் தந்த

எறும்புகளுக்கு நன்றி சொல்லி!

இமைகள் மூடி இசையில் கலந்தேன்.!


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning sister ☺

    ReplyDelete
  3. Good Morning Mam... Yesterday ADW department CV mudichuttom Mam... still waiting for posting...

    ReplyDelete
    Replies
    1. Gudnoon Murali sir..

      Superb sir, so happy for u..

      Delete
  4. Mam nama pass panna year senioritya or register pannrathu seniority ya tet la mam?

    ReplyDelete
    Replies
    1. Usually pass panra year seniority ah varadhu, namma epo register panromo apo irundhu dhan consider pannuvanga, so register panra year dhan..

      Delete
    2. Mam nan 2017 la pass pannen. Appo 4 years latea than senirioty varum ella.🤭🤭🤭🤭🤭

      Delete
    3. Irukkatum, epdiyum TRT marks dhan main ah irukkum, ithaellam pg la seniority marks add agara madhiri dhan varum.. So don't worry..

      Delete
  5. Gud afternoon mam.innum apply pandra date solala .mam inimel announce panalum exam athe date la nadakuma.

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Idhuku munadi trb ellam notification eduthu paarunga maximum 45days la exam date vandhurum, indha time election mansula vachu dhan neriya gap vitrukanga, so correct ah irukkum.. Sonna date la exam nadakka dhan chances adhigam..

      Delete
    2. யோவ் sk போய் வேலைய பாருய்யா

      Delete
    3. தம்பி பொறுமை வேண்டும்.

      Delete
  6. #BREAKING

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 9,10,11ம் வகுப்புகளுக்கு மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை

    ReplyDelete
  7. Thanks for the info Selva sir..

    ReplyDelete
  8. Mam na 2017 tet passed.but innum employment la pathivu pannala.kandipaa register pannanuma...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...