Skip to main content

இன்றைய சிந்தனை..

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்., 


அவன் அதை உணரும் போது, 
கையில் ஒரு பெட்டியுடன் 
கடவுள் அவன் அருகில் வந்தார்..

#கடவுள் : "வா மகனே.... 
நாம் கிளம்புவதற்கான 
நேரம் வந்து விட்டது.."

#மனிதன் : "இப்பவேவா? 
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் 
என்ன ஆவது?" 

#கடவுள் : "மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு 
செல்வதற்கான நேரம் இது.."

#மனிதன் : "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

#கடவுள் : "உன்னுடைய உடைமைகள்....."

#மனிதன் : "என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள், 
உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான்
இருக்கின்றனவா?"

#கடவுள் : "நீ கூறியவை அனைத்தும் 
உன்னுடையது அல்ல.. 
அவைகள் பூமியில் 
நீ வாழ்வதற்கு தேவையானது.."

#மனிதன் : அப்படியானால், 
"என்னுடைய நினைவுகளா?"

#கடவுள் : "அவை காலத்தின் கோலம்...."

#மனிதன் : "என்னுடைய திறமைகளா?"

#கடவுள் : "அவை உன் சூழ்நிலைகளுடன் 
சம்பந்தப்பட்டது...."

#மனிதன் : "அப்படியென்றால் என்னுடைய 
குடும்பமும் நண்பர்களுமா?"

#கடவுள் : "மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும் 
நீ வாழ்வதற்கான வழிகள்...."

#மனிதன் : "அப்படி என்றால் 
என் மனைவி மற்றும் மக்களா?"

#கடவுள் : "உன் மனைவியும் மக்களும் 
உனக்கு சொந்தமானவர்கள் அல்ல, 
அவர்கள் உன் இதயத்துடன் 
சம்பந்தப்பட்டவர்கள்...."

#மனிதன் : "என் உடலா?"

#கடவுள் : "அதுவும் உனக்கு சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."

#மனிதன் : "என் ஆன்மா?"

#கடவுள் : "அதுவும் உன்னுடையது அல்ல...,  அது என்னுடையது......."

●மிகுந்த பயத்துடன் 
கடவுளிடமிருந்து 
அந்தப் பெட்டியை வாங்கி 
திறந்தவன், 

காலி பெட்டியைக் கண்டு
அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய 
கடவுளிடம், 

"என்னுடையது என்று 
எதுவும் இல்லையா?" 
எனக் கேட்க,

#கடவுள் சொல்கிறார்,
"அதுதான் உண்மை.. 
நீ வாழும் 
ஒவ்வொரு நொடி மட்டுமே 
உன்னுடையது..

வாழ்க்கை என்பது 
நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும் 
சந்தோஷமாக வாழ்

எல்லாமே உன்னுடையது என்று 
நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ்
அது மட்டுமே நிரந்தரம்..

-- உன் இறுதிக் காலத்தில் 
நீ எதையும் உன்னுடன் 
கொண்டு போக முடியாது
வாழுகின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning sister ☺

    ReplyDelete
  3. Replies
    1. நல்ல எண்ணங்களே வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்... தீய எண்ணங்கள் நம்மை அழிப்பதொடு நம்மை சார்ந்தவர்களையும் சேர்த்து அழித்து விடும்...

      Delete
    2. அட்மின் மேடம் முரளி சார் சொல்லி இருக்கும் தீய எண்ணங்கள் நம்மை அளிப்பதோடு நம்மை சார்ந்து இருப்பர்களையும் சேர்த்து அழிக்கும். இந்த கருத்து கண்டிப்பாக உங்களுக்கு 100% பொறுத்தமாக இருக்கிறது....

      Delete
    3. அட்மின் மேடம் முரளி சார் சொல்லி இருக்கும் தீய எண்ணங்கள் நம்மை அழிப்பதோடு நம்மை சார்ந்து இருப்பர்களையும் சேர்த்து அழிக்கும். இந்த கருத்து கண்டிப்பாக உங்களுக்கு 100% பொறுத்தமாக இருக்கிறது....

      Delete
    4. Why Mr. Unknown, Admin Madam vungalukku enna Theengu Seithaargal, ethukkaga ippadi pesureenga, Avanga ellorukkum Nallathu mattumey Seiraanga...Please next neenga PGT aaga poreenga, 1000 of students vungala Kadavula paakkanuma veynama neengaley mudivu pannikonga...

      Delete
    5. SK நீங்க இந்த மாதிரி அட்மின் மேடம் பத்தி பேசறதை விட்டுட்டு படிக்கிற வேலைய பாருங்க

      Delete
    6. அறிவீலி Unknown அவர்களே அட்மின் மேடம் இருக்காதால தான் உங்கள போல தீயது எல்லாம் ஓடுது இல்லனா எங்க நிலைமை எல்லாம் மோசம் தான்

      Delete
    7. அன்நோன் நண்பரே நாவடக்கம் தேவை.

      Delete
    8. முரளி நீங்கள் கூறியது ௮ட்மினுக்கு பொருந்தும்

      Delete
    9. ஆம் தீய எண்ணம் கொண்ட உங்களை போன்றவர்களை ஒதுக்கி நல்ல எண்ணங்களை வலிமை பெற செய்வதால் அட்மினுக்கு முரளி நண்பர் கூறியது நிச்சயமாக பொருந்தும்

      Delete
    10. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    11. படிக்கற வழிய பாக்காம எப்ப பாத்தாலும் பொம்பள பிள்ளையை குத்தம் சொல்றதெல்லாம் ஒரு பொழப்பா

      Delete
    12. Murali sir, Saravanan sir and Unknown frnds..

      Don't react to them, they can only talk like this..

      Barking dogs seldom bite..

      Delete
    13. 👌👌👌👌👌👌

      Delete
    14. 👌👌👌👌👌👌

      Delete
    15. Saravana sir your words were very true..these peoole fit for criticizing women only

      Delete
  4. Madam age extend panuvangala matangala???

    ReplyDelete
  5. Replies
    1. Extend panna dhan possibilities adhigam frnd..

      Delete
  6. Apdiye extern panni 100 age akkattum yen na tamilnadu la youngsters ye illaye yenna panna nanna state la strength kammi pola

    ReplyDelete
  7. Trt info varuma mam Feb முடிய போகுதே

    ReplyDelete
    Replies
    1. Tet notification varumnu sonnanga sir.. Lets wait and see..

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here