Skip to main content

இன்றைய சிந்தனை..

நம்மை பற்றி நாமே தாழ்வாக நினைப்பது நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்...


அப்பொழுதுதான் நாம் எடுத்த செயலை வெற்றியடைய வைக்கமுடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, நமது எதிரிகள் கூட நம்மை வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்...


இந்த எண்ணம்தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும்!, உயர உயரப் பறந்து செல்லும் பறவைகளைப் போல, நாமும் வாழ்க்கை என்ற வான்வெளியில் உயர்ந்து கொண்டே செல்லலாம்...


மாவீரன் நெப்போலியனுக்கு, அவருடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத் தட்டி இசை எழுப்பி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைச் கூறிக்கொண்டு இருந்தார்கள்...


அதனைத் தொடர்ந்து நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளை தளபதிகள் செய்திருந்தார்கள். நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது...


அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்த பின்பு, குண்டு வெடித்தது. தளபதிகளின் கைகளிலிருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன...


ஆனால்!, நெப்போலியன் கை மட்டும் சிறிதும் நடுங்கவில்லை. அவர் கையிலிருந்த கிண்ணத்தில் பழரசம்கூட ததும்பவில்லை...


இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்...


“பிரபுவே! இது நாங்கள் செய்த ஏற்பாடுதான்!, இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக் கிண்ணங்களை தவற விட்டுவிட்டோம். ஆனால்!, உங்களுடைய கை சற்றும் நடுங்கவில்லை. எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று வியந்து பாராட்டினார்கள்...


உடனே நெப்போலியன் சொன்னார். “அதனால்தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள்” என்றார்...


உண்மைதான்!, நெப்போலியனுக்கு தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தது. அத்துடன் எதிலும் ஏமாந்து போகாத விழிப்புணர்வு அதிகமாக இருந்தது...


நெப்போலியனின் மாபெரும் வெற்றிகளுக்கு இவைகள்தான் காரணம், ஒவ்வொரு கணமும் நெப்போலியன் தன்னை மிகவும் நம்பினார்...


*ஆம் நண்பர்களே...!*


🔴 *தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் கூறுகிறோம், இவைகளையெல்லாம் வெறுமனே பின்பற்ற முடியாது...!*


⚫ *தன்னம்பிக்கை இருந்தால்தான் அவையெல்லாம் கைகூடும். எனவே!, எல்லாவற்றுக்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். நம்புங்கள் நம்மால் முடியும்...!!*


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Today or before feb 24 second list
    Is expected.
    God save us
    😷😷😷😷😷😷😷😷😷

    ReplyDelete
    Replies
    1. நாங்க சோகமா இருக்கும் போது நீ வந்து சிரிப்பு காற்றியே யாரு சாமி நீ...

      Delete
    2. ne elam teachera pona students nilamai pavamtha..

      Delete
  3. Trt தேர்வு வருவது உறுதி

    ReplyDelete
  4. Trt தேர்வு வருவது உறுதி

    ReplyDelete
  5. Trb pending subjects list,beo result pathi ethavathu information kidaithatha mam pls reply

    ReplyDelete
    Replies
    1. Pending subjects seekirama varum sasi sir, beo and polytechnic pathi ipodhaiku endha info vum ila bt proceed panna chances iruku..

      Delete
  6. Trt நியமன தேர்வு or போட்டிதேர்வு என்று news paper-(21-1-2021) இல் வர வில்லையே

    ReplyDelete
  7. Friends don't feel tet exam ke answer illa so trt vara vaipu kuraivu but vanthalum onnum solla mudiyathu so be prepare

    ReplyDelete
  8. அட்மின் சகோதரி டெட் மற்றும் பிஜி நிலவரம் தான் என்ன?? தயவு செய்து கூறவும்.

    ReplyDelete
    Replies
    1. Saravanan Brother..

      Tet porutha vara, recent ah thanna paaka vandha 2013, 2017 batch kitta ellam yaarum ini varadhinga exam vachu dhan posting poda mudiyumnu education minister sonnadhaga thagaval..

      Pgtrb porutha vara exam dhan varum, second list venumnu 1:2 Secretariat ponapo kuda apdi GO irundha kaatunganu kettangalam, apdiyum again chennai poirukanga but adhu nadakkathu..

      So pg ku padinga.. Trt porutha vara first tet varanum, so time neriya edukkum..

      Delete
    2. மிக்க நன்றிகள் அட்மின் சகோதரி

      Delete
  9. தங்களுக்கு தெரிந்த தகவலை கூறவும்

    ReplyDelete
  10. Sir my cousin trb la work panranga avanga sonna thagaval tet process going on but three method discussed but enna method nu avar sollala.onnu mattum sonnar school la corona athigamanal and election date announced na no posting.bt ku 8k to 9k vacant irukam including retired aga poraanga vacancy

    ReplyDelete
    Replies
    1. Unknown friend pg trb exam pathi ethum sollaliya unga cousin

      Delete
    2. நன்றிகள் அன்நோன் நண்பரே

      Delete
  11. நம்பிக்கை என்னும் தோனியில் எங்கள் பயணம் வருடக்கணக்கில் நகர்ந்து கொண்டு இருக்கிறது
    என்னுடன் பயணிக்கும் சிலர் இதோ கரை! அதோ கரை! என்கின்றர்......
    நாங்கள் பயணிப்பது கடல் என்று நம்புகிறோம் அது கானல் நீர் என ஆகாமல் இருந்து நாங்கள் அடைய வேண்டிய இலக்கை சேர வேண்டிய கரையை அடைந்தால் முடிவிலாவது மகிழ்ச்சி இறை சித்தம்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார் நம்மளும் வெயிட் பண்றோம் ஒன்னும் நடக்கற மாதிரி இல்ல

      Delete
    2. கார்த்திக் நண்பரே மிக அருமையாக கூறினீர்கள்

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here