Skip to main content

‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பும், பின்பும் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு சரிவு: மருத்துவ கல்வி இயக்குனரக தகவலில் அதிர்ச்சி

 


‘நீட்’ தேர்வு அமல்படுத்திய முன்பும், பின்பும் இரண்டாண்டு கால இடைவெளியில் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை 8 மடங்கு அளவிற்கு சரிந்துள்ளது. இதன் விபரங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை உருவானது. மேலும், 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவானது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

குறிப்பாக தனியார் நீட் கோச்சிங் மையங்களில் பயின்ற மாணவர்கள் மட்டுமே அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டி, ஓராண்டு படித்தால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவானது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலையும் நடக்கிறது. அதனால், நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. 

தொடர்ந்து அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இன்னும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

இதனால் இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் நீட் தேர்வு அமல்படுத்திய பின்பு தமிழ் வழியில் படித்து மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைத்து நெல்லையைச் சேர்ந்த அப்பாவு ரத்தினம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மருத்துவ கல்வி இயக்குரகத்தில் சில தகவல்களை பெற்றுள்ளார். அதில், 2015 - 16ம் ஆண்டு தமிழ் வழியில் படித்த 456 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், 54 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர்.

2016 - 17ம் ஆண்டில் தமிழ் வழியில் படித்த 438 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், 99 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். 2017 - 18ம் ஆண்டில் தமிழ் வழியில் படித்த 40 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 12 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். 2018 - 19ம் ஆண்டில் தமிழ் வழியில் படித்த 88 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 18 பேர் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி பார்த்தால், நீட் தேர்வு அமல்படுத்துவதற்கு முன்பாக 2015 - 16, 2016 - 17ம் கல்வி ஆண்டுகளில் தமிழ் வழியில் படித்த 1,047 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அதே, நீட் தேர்வு அமல்படுத்திய பின்பு 2017 - 18, 2018 - 19ம் கல்வியாண்டில் தமிழ்வழியில் பயின்ற 158 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் அமலுக்கு வந்த முன்னும், பின்னும் கிட்டத்தட்ட 2 கல்வி ஆண்டுகால இடைவெளியில் பார்த்தால் 889 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழ்வழி படித்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 மடங்கு அளவிற்கு சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

  1. நீங்க பண்ண எல்லாமே சரிவு தான. இந்த தேர்தல் உங்களுக்கு பெரிய சரிவா இருக்கும்

    ReplyDelete
  2. Teacherku tet
    Studentsku neet

    ReplyDelete
  3. 2013 டெட் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால் உங்க ஆட்சி அவ்ளோ தான்

    ReplyDelete
  4. எல்லாரோட சாபமும் உங்கள சும்மா விடாது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here