Skip to main content

கொரோனாவுடன் நூறுநாட்கள், இரண்டேஇறப்புகள்.. எதிர்கொண்டகேரளம்..


♦ கொரோனா வைரஸின் முதல் நோயாளி குறித்து அறிவிப்புகள் வெளியாகி இன்றோடு நூறு நாட்கள் ஆனது. 

♦கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

♦ஆரம்பம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் அம்மாநில நடந்து கொண்டது தான் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு தீவிரமாக சென்றடைய காரணமாக அமைந்தது. 

♦மேலும் கொரோனா நோய் தொற்று குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் முதல்வர் பினராயி விஜயனே நேரில் அறிவிக்கிறார். 

♦மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேட்டறிந்து அதனை செயல்படுத்துவதிலும் அதிக முனைப்பு காட்டுகிறது அம்மாநில அரசு.

♦பொதுமக்களின் தேவையை உணர்ந்து முதலில் பாதுகாப்பான முறையில், சிறையில் மாஸ்க்குகள் செய்யும் பணியை தீவிரப்படுத்தியது கேரளா. 

♦அனைவரும் N95 மாஸ்க்குகள் தான் உதவும். 

♦இது  தேவைக்கு ஆகாது என்று பலரும் அப்போது கேலி செய்தனர். 

♦ஆனால் தற்போதையை இந்திய அரசின் சுகாதாரத்துறை “வீட்டிலேயே மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

♦ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பருத்தி ஆடையையும் கூட 5நிமிடங்களுக்கு உப்பு போட்ட நீரில் கொதிக்க வைத்து பின்னர் முக கவசம் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று  அறிவித்திருந்தது. 

♦அமெரிக்காவின் சி.டி.சி (Centers for Disease Control and Prevention)-ம் கூட பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் டி-சர்ட் அல்லது பாந்தனாவில் முக கவசங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

♦ரேப்பிட் டெஸ்ட்டுகள் கொண்டுவரப்பட்டு, மக்களுக்கு தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறது அம்மாநிலம். 

♦எபோலா போன்ற தொற்றுநோயை கண்ட அம்மாநிலம், அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை இங்கே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

♦இன்றைய நிலை
இன்றைய நிலவரத்தின்படி (10/04/2020) கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 258. 

♦97 நபர்கள் இதுவரை இந்நோயில் இருந்து பிழைந்த்துள்ளனர். 

♦(90 வயது, 88 வயது நோயாளிகளும் உயிருடன் வீடு திரும்பியுள்ளனர்). 

♦மொத்தமாக இந்நோயின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் 357. 

♦இதுவரையில் 12710 நபர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

♦1251 கம்யூனிட்டி கிச்சன்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

♦ஒரு வேளை இந்நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் கூட மக்களை பாதுகாக்க திட்டங்களுடன் இயங்கி வருகிறது கேரள அரசு. 

♦1.73 லட்சம் படுக்கை வசதிகளை அடையாளம் கண்டுள்ளது. 

♦அதில் 1.1 லட்சம் படிக்கை வசதிகள் இப்போது தயார் நிலையில் உள்ளது.

♦பரிசோதனைகளில் மாற்றம்♦

♦ஏப்ரல் 2ம் தேதி வரை, கொரோனா நோயின் மூன்றுக்கும் மேற்பட்ட,

♦ அல்லது அளவுக்கு அதிகமான நோய் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை என்ற நிலையை வைத்திருந்தது. 

♦ஆனால் ஏப்ரல் 3ம் தேதிக்கு பிறகு, இரண்டு நோய் அறிகுறிகள் இருந்தாலே சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

♦கஞ்சிக்கோட்டில் ரெஸ்பிரேட்டர்கள், வெண்டிலேட்டர்கள், என்95 மாஸ்க்குகளை தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

♦மூன்று பேரிடர்கள்♦

♦கடவுளின் நாடு என்று அழைக்கப்படும் கேரளாவின் முக்கிய வருமானம் சுற்றுலாத்துறையில் இருந்து வருவது தான். 

♦லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கேரளாவின் அழகை கண்டு ரசிக்க வெளிநாடுகளில் இருந்து படையெடுப்பது வழக்கம். 

♦2018ம் ஆண்டு பெருவெள்ளம், 

♦2019ம் ஆண்டு பெருவெள்ளம் என அனைத்திலும் சிக்கித் தவித்த மாநிலத்தின் சுற்றுலாத்துறை 

♦கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் வளர்ச்சி அடைய துவங்கியது. 

♦ஆனாலும் கொரோனாவால் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 

♦மத்திய அரசின் நிவாரண நிதி உதவியாக வெறும் 157 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. 

♦இருந்தாலும், அம்மக்களின் ஒற்றுமை, கடந்த  கால இயற்கை பேரிடர்களில் கற்றுக் கொண்ட பாடம், சகோதரத்துவம் தான் கொரோனாவிற்கு எதிராக தொடர்ந்து 100 நாட்கள் விடாமுயற்சியுடன் போராட உத்வேகம் அளித்துள்ளது.

♦கொரோனா இன, மத பேதம் பார்ப்பதில்லை♦

♦ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று 232 வெளிநாட்டினரை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது அம்மாநிலம். 

♦வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியவர்கள் மீது தாக்குதல் நடைபெற, தாக்குதலுக்கு ஆளானவர்களை அணைத்துக் கொள்ளும் பொருட்டு, 

♦உலகமே கொரோனாவால் அழிந்து கொண்டு உள்ளது. 

♦இதில் துவேஷம் பார்க்க ஒன்றும் இல்லை.

♦ நம் மண்ணை நம்பி வந்தவர்களுக்கு நாம் தரும் வரவேற்பு இது தானா என்ற கேள்வியையும் முன் வைத்தார் பினராயி விஜயன். 

♦கொரோனாவுக்கு இனம், மதம், மொழி பாகுபாடு ஏதும் இல்லை என்பதை அவர் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் அவர் கூறி வருகிறார்.

♦புலம்பெயர் ஊழியர்கள்
தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றே, கேரளாவிலும் புலம்பெயர் ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். 

♦தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வது முடியவே முடியாத காரியம் என்பதால், 

♦அவர்களின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

♦வேலை மற்றும் வருமானம் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்க கம்யூனிட்டி கிச்சன்கள் தயாரானது. 

♦மேலும் இந்த கம்யூனிட்டி கிச்சன்களில் பணியாற்ற இந்தி தெரிந்த கேரள ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். 

♦மொழி புரியாமல் இரண்டு பக்கங்களிலும் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க இந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Reavthi Sasikumar Mam..

    Your new year wish was wonderful mam, keep it up..

    ReplyDelete
  3. வணக்கம் தல

    ReplyDelete
  4. வணக்கம் அட்மின் அவர்களே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here