Skip to main content

TODAY'S THOUGHT..

*ஓஷோவும்_அகப்பேய்_சித்தரும்*

தூராதி தூரமடி அகப்பேய் தூரமும் இல்லையடி
*அகப்பேய்_சித்தர்*

ஒரு  எளிய விவசாயி, அவன் வாழ்நாளில்  முதல் முறையாக ஒரு  மலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

         அவனுடைய  வயலிலிருந்து அந்த  மலையின் பசுமை  நிறைந்த  உச்சிகள் தெரிவதால், அவனுள் அடிக்கடி  அவற்றை அருகில்  சென்று  பார்க்க வேண்டும்  என்று  எண்ணம் ஏற்பட்டது.

 ஆனால்  ஏதோ காரணங்களினால்  அவனது பயணம் ஒத்திப் போடப்பட்டு வந்ததால் அவன் அங்கு  செல்ல முடியவில்லை. 

         சென்ற முறை அவனிடம்  ஒரு விளக்கு இல்லை என்பதற்காக அவன் மலைக்குச் செல்வது தடைப்பட்டு விட்டது.

  ஏனெனில்  இரவே மலையைச் சென்றடைவது மிகவும்  அவசியம்.

 சூரிய உதயத்திற்குப் பிறகு  அந்த கடினமான மலை மீது  ஏறுவது சிரமம்.

          இப்போது அவன் தன்னுடன் ஒரு விளக்கையும் எடுத்து வந்திருந்தான்.

 மேலும்  மலையில் ஏறவேண்டும் என்ற அவாவினால் அவன் இரவில்  தூங்கவும் இல்லை.

         அவன் இரவு இரண்டு  மணிக்கு  எழுந்து  மலைக்குப் புறப்பட்டான்.

 ஆனால்  கிராமத்தை விட்டு  வெளியில் வந்ததும் அவன் தயங்கி நின்று விட்டான்.

        அன்று அமாவாசையாதலால் சுற்றிலும் பயங்கர இருளாக இருக்குமே என்ற கவலையும், சந்தேகமும் அவனது மனத்தில் எழுந்தன.

          அவன் கையில்  விளக்கு ஒன்று  வைத்திருந்தான் என்பதில் சந்தேகம்  இல்லை. 

         ஆனால்  அந்த விளக்கின் ஒளி பத்து அடிகள் எடுத்து  வைக்கும் தூரம்தான்  தெரியும். 

ஆனால்  அவன் ஏற வேண்டியதோ பத்து மைல் தூரம். 

அவன் எப்படிச் செல்ல முடியும்?

         அந்த அடர்ந்த காரிருளில் சிறிய  மெழுகுவர்த்தியின் ஒளியில்   புறப்பட்டுச் செல்வது புத்திசாலித்தனம் ஆகுமா?

இது கடலில்  ஒரு சிறிய படகில் செல்வதைப் போன்றதாகும்.

         இவ்வாறு  எண்ணிக் கொண்டு  அவன் கிராமத்தின் வெளியே சூரிய உதயத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

        ஆனால்  அதே நேரத்தில்  மற்றொரு வயதான மனிதன்  தன்னைக் கடந்து மலையை நோக்கிச் செல்வதைப் பார்த்தான்.

        அந்த  மனிதன்  இவனிடமிருந்த விளக்கைவிட மிகச் சிறிய விளக்கையே வைத்திருந்தான்.

        அந்த  வயதான  மனிதனை நிறுத்தி அவனிடம் தனது சந்தேகத்தைக் கூறியதும் அந்த வயதான  மனிதன் சிரித்தான். 

       "பைத்தியக்காரா!
ஆரம்பத்தில்  நீ பத்தடிகள் எடுத்துவை.

நீ பார்க்க முடிந்த தூரம் வரை செல்.

பின் அதே அளவு தூரம்  உன் முன் விளக்கொளி இருப்பதை உணர்வாய்.

 உன் முன்னால்  ஒரு அடி தூரத்தைக் காண முடிந்தால் நீ அதன் உதவியால் இந்த  உலகம் முழுவதையும்  சுற்றி வரலாம்!"

 என்று  அந்த  வயதான  மனிதன் கூறினான்.

          அந்த  இளைஞன்  இதைப் புரிந்து  கொண்டு  எழுந்து நடந்தான்.

சூரியன்  உதயமாவதற்குள் மலையைச் சென்றடைந்தான்.

"நானும் அதைத்தான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன். 

 நீங்கள்  ஏன்  முடங்கிக் கொண்டு  உட்கார்ந்திருக்கிறீர்கள்?

எழுந்திருங்கள்;  நடந்து செல்லுங்கள்.

 நினைப்பவனல்ல, நடப்பவன்தான் சென்றடைய முடியும்.

 உன்னிடம் பத்து அடிகள்  எடுத்து  வைக்கும்  தூரத்திற்கு வேண்டிய  ஒளி இருந்தால் போதும்  என்பதை ஞாபகத்தில்  வைத்துக் கொள்.

 அதுவே  போதுமானது, கடவுளை அடைய அதுவே  போதுமானது."

*ஓஷோ*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here