Skip to main content

டிரம்பின் பயணம்..

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும், அவரது மனைவி மெலனியாவையும் சுமந்து வரப்போகிற அதிநவீன விமானம். இது பறக்கும் வெள்ளை மாளிகை. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அமெரிக்க தேசியக்கொடியும், ஜனாதிபதியின் முத்திரையும் இடம் பெற்றிருக்கும்.

1¾ கிரவுண்ட் விமானம்

இந்த விமானம் 3 அடுக்குகளை கொண்ட பிரமாண்ட விமானம். இதன் மொத்த பரப்பளவு 4 ஆயிரம் சதுர அடி. கிட்டத்தட்ட 1¾ கிரவுண்ட்.

டிரம்புக்கும், அவரது மனைவிக்கும் சொகுசான பிரத்யேக சூட்... அதிலும் எக்சிகியூடிவ் சூட்...

டிரம்பின் மூத்த ஆலோசகர்கள், அவரது பாதுகாப்பை கவனிக்கும் ரகசிய சேவை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பிற விருந்தினர்கள் என அனைவருக்கும் அசத்தலான தனித்தனி அறைகள்...

100 பேருக்கு அறுசுவை உணவு

ஒரே நேரத்தில் 100 பேருக்கு அறுசுவை உணவுகளை சமைத்து சுடச்சுட பரிமாற 2 சமையலறைகள்... ஒரு மருத்துவ அறை... எப்போதும் ஒரு டாக்டர்... மருத்துவ அறையை ஆபரேஷன் தியேட்டராக மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இந்த விமானத்தில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மீது ஒரு தாக்குதல் நடைபெற்றால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சொல்லும் கட்டளை மையமாக இந்த விமானமே செயல்படும் வசதிகள் இருக்கிறது.

அதிநவீன ரேடார்கள்

அதிநவீன ரேடார்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ரேடார்களின் சிறப்புத்தன்மை, ஒரு வேளை ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை தாக்குவதற்கு எதிரிகள் குறிவைத்து ஏவுகணை வீசினால், அந்த ஏவுகணையை குழப்பம் அடைய வைத்து திசை திருப்பி விடும்.

நடுவானில் பறந்து கொண்டிருக்கிறபோதே எரிபொருள் நிரப்பிக்கொள்ள முடியும். எனவே இந்த விமானம் எவ்வளவு தொலைவுக்கும் வரம்பின்றி பறக்க முடியும். தொலைதூர இடங்களில் ஜனாதிபதிக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு பல சரக்கு விமானங்கள், ஏர்போர்ஸ் ஒன் விமானத்துக்கு முன்பாக எப்போதும் பறந்து கொண்டிருக்கும்.

இந்த விமானத்தின் இயக்கம், பராமரிப்புக்கு என்று அதிநவீன தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட பிரசிடென்ஷியல் ஏர்லிப்ட் குரூப் இருக்கிறது. இது வெள்ளை மாளிகை ராணுவ அலுவலத்தின் ஒரு அங்கம்.

தி பீஸ்ட் கார்

விமானத்தின் சிறப்புகள் இப்படி நீண்டுகொண்டிருக்க, டிரம்ப் எங்கு சென்றாலும் அவரது சாலை வழி பயணத்துக்கு பயன்படுத்தப்படுகிற சொகுசு கார் கேடிலாக் லிமவுசின் கார் ஆகும். இந்த காரின் செல்லப்பெயர் ‘தி பீஸ்ட்’.

இதைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? இந்த கார் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். இதன் விலை அதிகமில்லை. 1.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.10½ கோடி மட்டும்தான்). இது குண்டு துளைக்காத கார் ஆகும்.

இந்தக் காரின் எடை 20 ஆயிரம் பவுண்ட் (9 டன்களுக்கும் அதிகம்).

இந்த கார் ஜன்னல்கள் கண்ணாடி மற்றும் பாலிகார்போனேட்டுகளால் ஆன 5 அடுக்குகளை கொண்டதாகும். டிரைவர் அருகேயுள்ள ஜன்னலை மட்டும் 3 அங்குல அளவுக்கு திறக்க முடியும்.

காருக்குள் இருந்தே தாக்குதல் நடத்தும் துப்பாக்கிகள், கண்ணீர்ப்புகை குண்டு வீசும் சாதனங்கள் இருக்கும்.

ஜனாதிபதிக்கு காயம் ஏற்பட்டு, ரத்த இழப்பு ஏற்பட்டால் செலுத்துவதற்காக டிரம்ப் ரத்த பிரிவை சேர்ந்த ரத்த பாட்டில்கள் ஒரு ஃபிரிஜ் நிறைய இருக்கும்.

டிரைவர் கேபினில் அனைத்து அதிநவீன தொலை தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும்.

ராணுவ பயிற்சி பெற்ற டிரைவர்

இந்த காரின் வெளிப்புறமானது, ராணுவ வாகனங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய உறுதியான உருக்கு, டைட்டேனியம், அலுமினியம் மற்றும் செராமிக்ஸ் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் முன் பாகத்தில் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசும் கருவி, இரவு நேரங்களில் புகைப்படங்கள் எடுக்கும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கார் டிரைவர், அமெரிக்க ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய சேவை படையின் பயிற்சி பெற்றவர். போர்க்கால நடவடிக்கைகள் இவருக்கு அத்துப்படியாக இருக்கும்.

செயற்கை கோள் தொலைபேசி வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் துணை ஜனாதிபதி மைக் பென்சுடனோ, அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனுடனோ எந்த நிமிடமும் தொடர்பு கொண்டு பேச முடியும்.

டிரம்புடன் 4 பேர் வசதியாக அமர்கிற வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டிரம்ப், டிரைவர் இடையே ஒரு கண்ணாடி இருக்கும். இதை ஜனாதிபதி டிரம்ப் மட்டுமே திறக்க முடியும்.

நெருக்கடியான காலத்தில் பதற்றமான சூழலில் அழுத்துவதற்காக அவசர கால பொத்தான் (பேனிக் பட்டன்) உள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டரும் காரில் இருக்கிறது.

காரில் உள்ள ஆயில் டாங்க் மீது குண்டு விழுந்தால் கூட வெடிக்காத அளவுக்கு உறுதியான பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகையுடன்

தொடர்பு கொள்ளலாம்

இந்த கார் உருக்கு ரிம் கொண்டதாகும். எனவே டயர் பஞ்சர் ஆகாது. டயர் வெடித்தாலும் விபத்து நேராது. தப்பிச்செல்லும் லாவகம் உள்ளது.

காரில் இருந்தவாறு வெள்ளை மாளிகையுடன் எந்த நேரமும் தொடர்பு கொள்ள முடியும்.

டிரம்ப் காருடன் வருகிற பாதுகாப்பு வாகனங்களில் சென்சார் பொருத்தபட்டுள்ளது. இவை அணு, ரசாயன, உயிரி ஆயுத தாக்குதல்களை கண்டுபிடித்து விடக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாகும்.

டிரம்ப் காருடன் வருகிற பாதுகாப்பு வாகனங்களில் மந்திரிகள், டாக்டர்கள், உயர் ராணுவ அதிகாரிகள் பயணம் செய்வார்கள்.

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete
  3. போராட்டம் நல்ல நடக்கும்

    ReplyDelete
  4. தல போராட்டம் என்ன ஆச்சு

    ReplyDelete
  5. Because of trump's visit they didn't conducted it seems..

    ReplyDelete
  6. போராட்டம் போச்சா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...