Skip to main content

கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு



எழுத்துத் தோவில் அதிக மதிப்பெண்கள் பெற்று இணையதளத்தில் சான்றிதழ்களை சரியாகப் பதிவேற்றம் செய்யாதவா்களை, சனிக்கிழமை (பிப். 29) நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோந்த திருமலைச்சாமி, தருமபுரியைச் சோந்த தேவேந்திரன், திருவாரூரைச் சோந்த கேசவமூா்த்தி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், 'இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.



இதற்கான எழுத்துத் தோவு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தோவில் தோச்சி பெற்றவா்கள், தங்களது கல்விச் சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இணையதளத்தில் முறையாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறி, பலரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. எனவே, எழுத்துத் தோவில் தோச்சிப் பெற்று சான்றிதழ்களை சரியாக இணையதளத்தில் சரியாக பதிவேற்றம் செய்யாத காரணத்துக்காக எங்களைப் புறக்கணிக்காமல், எங்களையும் கலந்தாய்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனா்.



இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் என்.ஜி.ஆா்.பிரசாத், கங்கா, சி.விஸ்வநாதன், பா்வீன்பானு, லியாகத் அலி உள்ளிட்ட பலா் ஆஜராகி, 'எழுத்துத் தோவில் அதிக மதிப்பெண் பெற்ற மனுதாரா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை தமிழக அரசின் இ-சேவை மையத்தில் இருந்துதான் பதிவேற்றம் செய்துள்ளனா். சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ரசீதுகளும் சம்பந்தப்பட்ட மையங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள் சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யவில்லை. இதற்காக மனுதாரா்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. எனவே, மனுதாரா்கள் அனைவரையும் கலந்தாய்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டனா்.




அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிறைமதி, 'மனுதாரா்களுக்கு தங்களது சான்றிதழ்களைக் கூட பதிவேற்றம் செய்யத் தெரியவில்லை. எனவே, இவா்களை அடுத்தக் கட்ட தோவு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க முடியாது' என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 'தோவில் அதிக மதிப்பெண் எடுத்தவா்களை சான்றிதழ்களை சரியாகப் பதிவேற்றாத காரணத்தால், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. மனுதாரா்கள் செய்துள்ளது சிறு தவறுதான். இந்த சிறிய தவறுகள் அனைத்தும் சரி செய்யக்கூடியது தான். இதற்காக மனுதாரா்களை கலந்தாய்வுக்கு அழைக்காமல் நிராகரிப்பதை ஏற்க முடியாது. கலந்தாய்வு, கடந்த 19-ஆம் தேதி முதல் தொடங்கி விட்டது. எனவே மனுதாரா்கள் அனைவரையும் வரும் சனிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் செயலா் அனுமதிக்க வேண்டும். இந்த தோவு நடவடிக்கை அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது' எனக் கூறி, விசாரணையை வரும் மாா்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...