Skip to main content

கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு



எழுத்துத் தோவில் அதிக மதிப்பெண்கள் பெற்று இணையதளத்தில் சான்றிதழ்களை சரியாகப் பதிவேற்றம் செய்யாதவா்களை, சனிக்கிழமை (பிப். 29) நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோந்த திருமலைச்சாமி, தருமபுரியைச் சோந்த தேவேந்திரன், திருவாரூரைச் சோந்த கேசவமூா்த்தி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், 'இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.



இதற்கான எழுத்துத் தோவு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தோவில் தோச்சி பெற்றவா்கள், தங்களது கல்விச் சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இணையதளத்தில் முறையாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறி, பலரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. எனவே, எழுத்துத் தோவில் தோச்சிப் பெற்று சான்றிதழ்களை சரியாக இணையதளத்தில் சரியாக பதிவேற்றம் செய்யாத காரணத்துக்காக எங்களைப் புறக்கணிக்காமல், எங்களையும் கலந்தாய்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனா்.



இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் என்.ஜி.ஆா்.பிரசாத், கங்கா, சி.விஸ்வநாதன், பா்வீன்பானு, லியாகத் அலி உள்ளிட்ட பலா் ஆஜராகி, 'எழுத்துத் தோவில் அதிக மதிப்பெண் பெற்ற மனுதாரா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை தமிழக அரசின் இ-சேவை மையத்தில் இருந்துதான் பதிவேற்றம் செய்துள்ளனா். சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ரசீதுகளும் சம்பந்தப்பட்ட மையங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள் சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யவில்லை. இதற்காக மனுதாரா்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. எனவே, மனுதாரா்கள் அனைவரையும் கலந்தாய்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டனா்.




அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிறைமதி, 'மனுதாரா்களுக்கு தங்களது சான்றிதழ்களைக் கூட பதிவேற்றம் செய்யத் தெரியவில்லை. எனவே, இவா்களை அடுத்தக் கட்ட தோவு நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க முடியாது' என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 'தோவில் அதிக மதிப்பெண் எடுத்தவா்களை சான்றிதழ்களை சரியாகப் பதிவேற்றாத காரணத்தால், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. மனுதாரா்கள் செய்துள்ளது சிறு தவறுதான். இந்த சிறிய தவறுகள் அனைத்தும் சரி செய்யக்கூடியது தான். இதற்காக மனுதாரா்களை கலந்தாய்வுக்கு அழைக்காமல் நிராகரிப்பதை ஏற்க முடியாது. கலந்தாய்வு, கடந்த 19-ஆம் தேதி முதல் தொடங்கி விட்டது. எனவே மனுதாரா்கள் அனைவரையும் வரும் சனிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினா் செயலா் அனுமதிக்க வேண்டும். இந்த தோவு நடவடிக்கை அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டது' எனக் கூறி, விசாரணையை வரும் மாா்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here