Skip to main content

இன்றைய சிந்தனை..


*முன் அனுபவம்தான்'*
..................................

ஒருவன் ஒரு தொழிலில் முன்பு பெற்ற அனுபவமே அவன் தொழில் திறனை வளர்க்க உதவும்..

*முன் அனுபவங்களை கொண்டு..தொழிலின் போலித் தன்மையையும், உண்மைத் தன்மையையும் பிரித்து அறிந்து. தொழிலில் ஈடுபட்டால் எந்த தொழிலும் வெற்றி பெறலாம்..*

ஒரு தொழில் தொடங்கும்போது அந்த தொழிலில் ஏற்கனவே நன்கு அனுபவம் பெற்ற சரியானவர்களை  கண்டு அறிந்து அவர்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

*முந்தைய அனுபவமே ஒருவருக்கு எல்லா வகையிலும் உதவும்..தொழில் முன்அனுபவமே செய்யும் தொழிலின் தனித்தன்மைக்குக் காரணமாகும்.*

ஒரு விவசாயி அந்த ஊரிலிருக்கும் ஞானியிடம் சென்றார். ‘என் தோட்டத்திற்கு ஒரு தோட்டக்காரன் தேவை’ என்றார். ‘

இன்னும் மூன்று மாதம் கழித்து வா. உனக்குத் தேவையான இளைஞனை அனுப்புகிறேன்’ என்றார் ஞானி..

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஓர் இளைஞனைத் தோட்டப் பணிக்கு அனுப்பி வைத்தார்.

தனக்குக் கிடைத்த பணியாளர் மலர்களில் ஒன்றையும் பறிக்காமல் நேசிப்பதையும், ஒரு இலையும் விடாமல் நீரூற்றுவதையும், சருகுகள் மீது கால் படாமல் நடந்து கொண்டு இருப்பதையும் கண்டு மனம் மகிழ்ந்தார் அந்த விவசாயி..

ஞானியிடம் சந்தித்து நன்றி சொல்லி விட்டு,,''எதற்காக இவரை அனுப்ப உங்களுக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது என நான் தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்.

நான் உரிய நபரைத் தேர்ந்தெடுத்து மூன்று மாதங்கள் காகிதப் பூக்கள் செய்கிற தொழிற் சாலைக்குப் பணிக்கு அனுப்பினேன்.

அங்கே வாசனை அற்ற பொய் மலர்களைப் பார்த்தவனுக்கு உயிர் உள்ள மலர்களுடன் பழகுவதில் களிப்பும், ருசியும் ஏற்பட்டது..

அவன் இந்த அழகிய பூ, செடிக்கு மட்டுமே சொந்தம் என கருதி அதைப் பறிக்காமல், வாடவிடாமல் செடிகளை பாதுகாத்தான்...

ஆம்.,போலியிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்ளும் போதுதான் அது வரமாக வாய்க்கிறது’ என்றார் ஞானி.

ஆம்.,நண்பர்களே..,

*அனுபவமும் எந்த செயலிலும் முக்கியம்... அனுபவங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கேட்பவரும் இருக்கவே செய்கின்றனர். உண்மைதான்.*

*அனுபவம் மட்டும் இருந்தால் போதாதுதான். அதைத் தொடர்ந்து உபயோகமாக பயன் படுத்த வேண்டும்.*

*நாம் எதையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.💐🙏🏻🌹*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Very nice motivating thought mam

    ReplyDelete
  3. என்ன தல நமக்கு மட்டும் விடிவு காலம் இல்லையா

    ReplyDelete
  4. சிறப்பாசிரியர் பணிநியமனம் முடிச்சாச்சு

    முதுகலை ஆசிரியர் பணி நியமனம் நடக்கப்போகிறது

    கணிணி ஆசிரியர் தேர்வு பட்டியல் விட்டாச்சு

    அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் நியமனப் பணிகள் நடைப்பெறுகிறது

    அப்படியே தற்சமயம் இருக்கும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்பாட்டீங்கனா நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அத மட்டும் பண்ணவே மாட்றாங்க அருள் சார்

      Delete
    2. இவங்க நியமனத்தேர்வுக்கான பாடத்திட்டம் நியமன முறை அனைத்தும் வெளியிட்டு அதற்கு கருத்து கேட்டு பொறுமையா குழு அமைத்து செய்யட்டும் அதற்கு முன் இருக்கும் காலிபணியிடத்தை நிரப்பட்டும்

      சரிதானெ

      Delete
    3. பண்ணமாட்றாங்களே அருள் சார்

      Delete
    4. நம்மை மட்டும் நிம்மதியாக உறங்க விடமாட்டார்கள் போல அருள் நண்பரே

      Delete
  5. வணக்கம் அட்மின் சகோதரி. இன்றைய கருத்து மிகவும் அருமை.

    ReplyDelete
  6. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தீ விபத்து. 3 லட்சம் ரூபாய் அளவிலான பொருட்கள் எரிந்து நாசம்... Trb chairman பேட்டி

    ReplyDelete
  7. எல்லாரோட வயித்தெரிச்சல் சும்மா விடுமா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here