Skip to main content

சவுக்கடி..

அயல் நாட்டில்
மது அருந்திய குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டனர்...!
.
ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..
.
அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
ஆனால் அதற்கு முன்..
அவர்கள்
வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..!
.
முதலில் ரஷ்யன்..!!
"எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக
குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
.
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
"என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்..!"
என்றான்..!
.
அவ்வாறே செய்யப்பட்டது..!!
பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து...
அவன் பலமான காயத்துக்கு ஆளானான்..!
.
அடுத்து சீனன்..!!
"எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!!
.
இரண்டாவது...
"என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!"
என்றான்..!
.
அவ்வாறே செய்யப்பட்டது..!
15 சவுக்கடிகளில் தலையணைகள்
கிழிந்து..
அவன் முதுகு பிளந்தது..!!
.
அடுத்ததாக தமிழன்..!
அவன் அமைதியாக சொன்னான்..
"எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உயர்த்துங்கள் என்றான்..!
.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்.!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
.
இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
.
அவன் சொன்னான்....
"எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை,
என் முதுகில் தூக்கி கட்டுங்கள் என்றான்..!!!
.
இதனைக் கேட்ட நீதிபதி அதிர்ந்து போனாா்....
.
அப்போது நீதிபதியை பார்த்து அவன் கேட்டது...
மது அருந்தியதற்காக தண்டனை கொடுத்த தாங்கள்...
அதனை விற்பனை செய்பவர்களுக்கு இவ்வரசு தரும் ஆதரவு மற்றும் சலுகைகளை,
நீதித்துறை ௧ண்டும் காணாதிருப்பதற்காக முதல் சவுக்கடியின் தொடக்கம் இது என்றான்.......

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Happy B'day Revathi sis.. As I wished u last year, hope u'll b celebrating this b'day with kutty paapa.. Have a blast..

    ReplyDelete
  3. why trb cancelled lecturer exam mam?

    ReplyDelete
  4. இன்றைய பதிவு உண்மையான சவுக்கடி மேம்

    ReplyDelete
  5. willeducational psychology question same for all major in upcoming pg trb mam? is same means 40 marks easily get other major except physics?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...