Skip to main content

அழிக்கபடும் அரசுபள்ளி....

மாணவர்கள் இல்லாத அரசுபள்ளிகள் நூலகமாக மாற்றபடும்

செங்கோட்டையன்.....

ஆசியாவிலே பெரிய தலைமைசெயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள்....

ஆசியாவிலே பெரிய நூலகத்தை எந்தவொரு பராமரிப்பும் இன்றி மூடினீர்கள்...

இப்போது
மாணவர்கள் வருகை குறைவால்
அரசுபள்ளிகளை

நூலகமாக மாற்றபோகிறீர்கள்
பள்ளிளை அழித்து நூலகமாக மாற்றினால்
அங்கு யார்  படிக்கவருவார்கள்...

சிறைச்சாலையை இடித்து நூலகங்களை கட்டுங்கள்...

கோயில்களைகூட இடித்து
பள்ளிகளை கட்டுங்கள்

ஒரு மனிதனுக்கு பக்தியை சொல்லிகொடுப்பதைவிட
படிப்பு கற்றுகொடுங்கள்
இதுதான்  அமைச்சரே அவசியமானது....

நூலகமாக மாற்றுவதற்கு பதில்

பேசாமல்  அரசு மதுபானகடையாக  மாற்றிவிடுங்கள்
நூலகத்தில் படிக்கவருவதைவிட படிக்காதவர்கள் அதிகமாக குடிக்கவருவார்கள்.....

அரசுக்கும் நிதி அதிகமாகும்

பள்ளிகள் இருந்தால்
ஆசிரியர்களை நியமிக்கணும்
ஊதியம் கொடுக்கணும்

படித்தால் அரசுவேலை கொடுக்கணும்
படித்தவன் எவனும்
கட்சி மாநாட்டுக்கு வரமாட்டார்கள்

படித்துவிட்டால்
நாடுமுன்னேறிவிடும்

அது நடக்ககூடாது

மாணவர்கள் இல்லாத பள்ளியை மூடுங்கள்
ஆனால் ஒருபோதும்

மாணவர்களை வரவழைப்பதற்கு என்ன வழி என சிந்திக்காதீர்கள்.....

மாணவர்கள் இல்லாத
அரசுபள்ளிகளை மட்டும் மூடவேண்டாம்

சுயமாககவும் மக்களைப்பற்றியும் சிந்திக்காத
அடிமையாக வாழும் அரசியல்வாதிகள் இருக்கும் சட்டசபையையும் சேர்த்து மூடிவிடுங்கள்....
உங்களிடம் ஏழையாக  வாழ்வதைவிட

ராணுவ ஆட்சியில் அடிமையாக வாழ்ந்துவிடலாம்....

ராஜராஜ சோழனுக்காவும்
ஆண்டாளுக்காவும் சினம்கொண்ட தமிழர்கூட்டம்

அரசுபள்ளிகளை அழிக்கும்போது சினம்கொள்ளாது

ஏனெனில்
அரசுபள்ளிகள்
அழிந்தால்
நமது குழந்தைகள் படிப்பு வீணாகிவிடும் என சிந்திப்பதைவிட
அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம்  அதனால்
அரசு பள்ளிகள் அழியட்டும் என நினைப்பவர்களே அதிகம்

நம் முதல்வரே மக்களிடம் அப்படி தானே சொல்கிறார்

ஆசிரியர்களுக்கு அதிகமான சம்பளம்

முப்பது வருடத்திற்கு மேல்
அரசு ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு

ஊதியம் கொஞ்சம் அதிகமாக கொடுக்ககூடாது
ஓய்வூதியமும் கொடுக்ககூடாது

ஆனால்
ஐந்து ஆண்டுகளில்
ஐந்து தலைமுறைக்கு சொத்துசேர்க்கும்

அரசியல்வாதிக்கு மாதம்
ஒரு இலட்சம் ஊதியம் கொடுக்கலாம்

ஓய்வூதியமும் கொடுக்கலாம்

இதை ஒரு முட்டாளும் கேட்கவும் மாட்டான்....

ஒரு பள்ளிகளை அழிப்பது
பல எதிர்கால  தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்துசெல்வதற்கு சமம்....

ஏழை குழந்தைகள்
அரசுபள்ளியில் படித்து

தன் சொந்தகாலில் நிற்கும் அளவுக்கு வந்தாலே போதும்

ஆனால் அதே....
அரசுபள்ளிகளில் படித்த பலரே
மாவட்ட ஆட்சியராக
நீதிபதியாக
ஏன்
விஞ்ஞானியாக கூட இருக்கிறார்களே......

முதலில் சமமான கல்வியை கொடுத்துவிட்டு
அப்புறம்
நீட் என்ன என்னவேண்டுமானாலும் வையுங்கள்

அப்போது தெரியும்
ஏழைகுழந்தைகளின்
அதீத சக்தி பற்றி.....

மெட்ரிக் சிபிஎஸ்இ
என ஏழைகுழந்தைகள் போகமுடியாது

நம் அரசுபள்ளிகலாவது
அழியாமல் காப்போம்.....

அழிவை நோக்கி தமிழ் நாடு.....

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. When computer instructor results

    ReplyDelete
  3. Online exam pgku kandipaga varumnu solrangal,majorpadi one day Tamil exam,next englishnu solrangal mam unmaiya

    ReplyDelete
  4. Netharsanamana unmai mam, indha state irrukaratha ninaithan vetkamaga irrukiradhu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here