Skip to main content

அழிக்கபடும் அரசுபள்ளி....

மாணவர்கள் இல்லாத அரசுபள்ளிகள் நூலகமாக மாற்றபடும்

செங்கோட்டையன்.....

ஆசியாவிலே பெரிய தலைமைசெயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள்....

ஆசியாவிலே பெரிய நூலகத்தை எந்தவொரு பராமரிப்பும் இன்றி மூடினீர்கள்...

இப்போது
மாணவர்கள் வருகை குறைவால்
அரசுபள்ளிகளை

நூலகமாக மாற்றபோகிறீர்கள்
பள்ளிளை அழித்து நூலகமாக மாற்றினால்
அங்கு யார்  படிக்கவருவார்கள்...

சிறைச்சாலையை இடித்து நூலகங்களை கட்டுங்கள்...

கோயில்களைகூட இடித்து
பள்ளிகளை கட்டுங்கள்

ஒரு மனிதனுக்கு பக்தியை சொல்லிகொடுப்பதைவிட
படிப்பு கற்றுகொடுங்கள்
இதுதான்  அமைச்சரே அவசியமானது....

நூலகமாக மாற்றுவதற்கு பதில்

பேசாமல்  அரசு மதுபானகடையாக  மாற்றிவிடுங்கள்
நூலகத்தில் படிக்கவருவதைவிட படிக்காதவர்கள் அதிகமாக குடிக்கவருவார்கள்.....

அரசுக்கும் நிதி அதிகமாகும்

பள்ளிகள் இருந்தால்
ஆசிரியர்களை நியமிக்கணும்
ஊதியம் கொடுக்கணும்

படித்தால் அரசுவேலை கொடுக்கணும்
படித்தவன் எவனும்
கட்சி மாநாட்டுக்கு வரமாட்டார்கள்

படித்துவிட்டால்
நாடுமுன்னேறிவிடும்

அது நடக்ககூடாது

மாணவர்கள் இல்லாத பள்ளியை மூடுங்கள்
ஆனால் ஒருபோதும்

மாணவர்களை வரவழைப்பதற்கு என்ன வழி என சிந்திக்காதீர்கள்.....

மாணவர்கள் இல்லாத
அரசுபள்ளிகளை மட்டும் மூடவேண்டாம்

சுயமாககவும் மக்களைப்பற்றியும் சிந்திக்காத
அடிமையாக வாழும் அரசியல்வாதிகள் இருக்கும் சட்டசபையையும் சேர்த்து மூடிவிடுங்கள்....
உங்களிடம் ஏழையாக  வாழ்வதைவிட

ராணுவ ஆட்சியில் அடிமையாக வாழ்ந்துவிடலாம்....

ராஜராஜ சோழனுக்காவும்
ஆண்டாளுக்காவும் சினம்கொண்ட தமிழர்கூட்டம்

அரசுபள்ளிகளை அழிக்கும்போது சினம்கொள்ளாது

ஏனெனில்
அரசுபள்ளிகள்
அழிந்தால்
நமது குழந்தைகள் படிப்பு வீணாகிவிடும் என சிந்திப்பதைவிட
அரசு ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம்  அதனால்
அரசு பள்ளிகள் அழியட்டும் என நினைப்பவர்களே அதிகம்

நம் முதல்வரே மக்களிடம் அப்படி தானே சொல்கிறார்

ஆசிரியர்களுக்கு அதிகமான சம்பளம்

முப்பது வருடத்திற்கு மேல்
அரசு ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு

ஊதியம் கொஞ்சம் அதிகமாக கொடுக்ககூடாது
ஓய்வூதியமும் கொடுக்ககூடாது

ஆனால்
ஐந்து ஆண்டுகளில்
ஐந்து தலைமுறைக்கு சொத்துசேர்க்கும்

அரசியல்வாதிக்கு மாதம்
ஒரு இலட்சம் ஊதியம் கொடுக்கலாம்

ஓய்வூதியமும் கொடுக்கலாம்

இதை ஒரு முட்டாளும் கேட்கவும் மாட்டான்....

ஒரு பள்ளிகளை அழிப்பது
பல எதிர்கால  தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்துசெல்வதற்கு சமம்....

ஏழை குழந்தைகள்
அரசுபள்ளியில் படித்து

தன் சொந்தகாலில் நிற்கும் அளவுக்கு வந்தாலே போதும்

ஆனால் அதே....
அரசுபள்ளிகளில் படித்த பலரே
மாவட்ட ஆட்சியராக
நீதிபதியாக
ஏன்
விஞ்ஞானியாக கூட இருக்கிறார்களே......

முதலில் சமமான கல்வியை கொடுத்துவிட்டு
அப்புறம்
நீட் என்ன என்னவேண்டுமானாலும் வையுங்கள்

அப்போது தெரியும்
ஏழைகுழந்தைகளின்
அதீத சக்தி பற்றி.....

மெட்ரிக் சிபிஎஸ்இ
என ஏழைகுழந்தைகள் போகமுடியாது

நம் அரசுபள்ளிகலாவது
அழியாமல் காப்போம்.....

அழிவை நோக்கி தமிழ் நாடு.....

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. When computer instructor results

    ReplyDelete
  3. Online exam pgku kandipaga varumnu solrangal,majorpadi one day Tamil exam,next englishnu solrangal mam unmaiya

    ReplyDelete
  4. Netharsanamana unmai mam, indha state irrukaratha ninaithan vetkamaga irrukiradhu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...