Skip to main content

சென்னையை மீட்ட காமராஜர்!!

👉காமராஜர் தன் அதிரடியை தொடங்கினார். தமிழ்நாடு எல்லைக்கமிட்டி என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பு சார்பில் 'தமிழ்நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்" என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு அந்த அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

👉தேர்தலில் தமிழ்நாடு எல்லைக்கமிட்டி சார்பில் காமராஜர் நிறுத்திய வேட்பாளர்கள் அமோக வெற்றியை பெற்றனர். ஆந்திர காங்கிரஸ்காரர்கள் படுதோல்வியை தழுவினார்கள். இதன்மூலம் சென்னை நகரை காமராஜர் மீட்டு, தமிழ்நாட்டுடன் தக்கவைத்துக் கொண்டார்.

👉இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆந்திர மாநில தலைவர்கள், சென்னை நகருக்கு உரிமை கொண்டாடுவதை கைவிட்டுவிட்டனர். இதன்மூலம் காமராஜர் தமிழக-ஆந்திர காங்கிரஸ் தலைவர்களிடம் ஏற்பட இருந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

👉இரண்டாவது சென்னை நகரம் கை நழுவி செல்லாமல் பார்த்துக் கொண்டார்.

பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் உதிர்த்த வரிகள் :


👉பள்ளிக்கு படிக்க வரும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த காமராஜர், அந்த விழாவில் பேசியது :

👉கடைசி மனிதனுக்கும் கதி மோட்சம் கிடைக்க வேண்டும் என்பதுதான் காந்திஜியின் கொள்கை.

👉கடையர்கள் எப்படிக்கடைத்தேறுவார்கள்? கல்வி கற்றால் கடைத்தேறுவார்கள்.

👉படிக்கின்ற கல்வியால் அறிவும் திறமையும் வளர்ந்தால், பிழைத்துக் கொள்வார்கள்;, மனிதர்கள் மாறுவார்கள்.

👉நம் நாட்டில் பெரும்பாலானோர்க்கு எழுத்தறிவே கிடையாது.

👉ஊரில் பள்ளிக்கூடங்கள் இல்லாதபோது எழுத்தறிவு எப்படி வரும்?


👉ஆகவே, நம்முடைய முதல் வேலை எல்லா ஊர்களிலும் பள்ளிகளை திறப்பதுதான். அடுத்த பணி, அதை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இலவசமாக்குதல்.

👉நிலம் ஈரமாக இருந்தால் தானே பயிரிட முடியும்? காய்ந்து கிடந்தால் எப்படி பயிரிட முடியும்?

👉பிள்ளைகளின் வயிறு காய்ந்து கிடக்கும்போது, பாடம் சொல்லிக் கொடுத்தால் பாடம் ஏறுமா?

👉நம் நாட்டில் ஏழைகள் தான் அதிகம் என்பது எனக்குத்தெரியும்.

👉எனவே, பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போடுவது நல்லது.

👉அன்னதானம் என்பது நமக்கு புதிய விஷயம் அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு அன்னதானம் அளித்தோம். இப்பொழுது பள்ளிக்கூடத்தை தேடி போய் அன்னதானம் செய்யச் சொல்கிறோம்.

காமராஜர் - இவர் இல்லையென்றால் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவே இல்லை...!!


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Akilan sir..

    How are you.. I remember u very well.. Revathi sis also had d same doubt..

    Sir, you can apply under micro biology itself since there is no specific category for botany or zoo.. Depending upon the marks only they'll categorize..

    ReplyDelete
  3. OK mam but microbiology st ku 1 posting mattum irukku mam ந MBC. ந எப்படி apply pantrathu

    ReplyDelete
    Replies
    1. Sir, apo bot or zoo la podunga.. But as far as schools are concerned bot and zoo dha mostly irukum.. Adhula edhavadhu onnu choose panunga..

      Delete
  4. Mam nan ug Blit tamil ,MA Bed padithulan Iam eligible in Pg trb exam pls reply mam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here