Skip to main content

TODAY'S THOUGHT..

அற்புதமான வண்ணங்களில் அறிய சிறகுகள் கொண்ட அழகான சிறுகுருவிக்கு ஒரு கனவு வந்தது..
_கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.._

_இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.._
_*வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது..*_
_எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.._
_அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.._

_ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.._

_அது பறந்து போகும் போது ஒரு காகத்தை பார்த்தது.._

காகத்திடம் குருவி வழி கேட்டது..

*“எனக்கு முழு விபரம் தெரியாது.. தெரிந்த வரை சொல்கிறேன்..*
*அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் உள்ள அழகான இறகு ஒன்றைத் தர வேண்டும்”* என்றது காகம்.. 

_*ஒரேயோரு இறகுதானே என்று குருவியும் சரி என்றது..*_
குருவி காகம் சொன்ன வழியில் பறந்து சென்றது..

_குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,_
அந்த வழியே ஒரு கிளி வந்தது.. கிளியிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, *“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்”* என்றது..

கிளி *“இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும்.. சொல்கிறேன்..*
*_பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.. உன் அழகான இறகில் ஒன்றைத் தந்து விடு”_* என்றது. 

*_இன்னொரு இறகுதானே, தந்தால் போச்சு_* என்று குருவியும் சம்மதித்தது..

_கிளி சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.._ அதற்குப் பிறகு வழி தெரியவில்லை..

_இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே வந்த பறவைகளிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.._

*_அவைகளும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு இறகை விலையாக பெற்றன.._*

_குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு இறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.._

*முடிவாக, அதோ..* _*கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது..*_

*_வந்து விட்டோம்.._* _*வந்தே விட்டோம்..*_ *இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்..*

*_குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.._*

ஆனால்,
*இதென்ன..*
*ஏன் என்னால் பறக்க முடியவில்லை..* *ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே..*
*_காற்றில் பறக்கவே முடியவில்லையே._* என்று கதறியது..

_மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.._ _பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.._
_*குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..*_

*_இதோ கண் முன்னே.. தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.._*

ஆனால்
*அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்..*
_*அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது..*_ அந்தக் குருவி..
🐝

👇
_இன்று நம்மில் பலர்.. நாளைய மாய உலகின் வசதிகளைப் எண்ணி இன்றைய எல்லா மகிழ்ச்சியையும் இழக்கிறோம்.._

_கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது.. நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.._

*மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை..*
*_நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.._*
_*ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்..*_
🐝

Comments

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here