Skip to main content

TODAY'S THOUGHT..

அற்புதமான வண்ணங்களில் அறிய சிறகுகள் கொண்ட அழகான சிறுகுருவிக்கு ஒரு கனவு வந்தது..
_கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.._

_இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.._
_*வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது..*_
_எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.._
_அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.._

_ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.._

_அது பறந்து போகும் போது ஒரு காகத்தை பார்த்தது.._

காகத்திடம் குருவி வழி கேட்டது..

*“எனக்கு முழு விபரம் தெரியாது.. தெரிந்த வரை சொல்கிறேன்..*
*அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் உள்ள அழகான இறகு ஒன்றைத் தர வேண்டும்”* என்றது காகம்.. 

_*ஒரேயோரு இறகுதானே என்று குருவியும் சரி என்றது..*_
குருவி காகம் சொன்ன வழியில் பறந்து சென்றது..

_குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,_
அந்த வழியே ஒரு கிளி வந்தது.. கிளியிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, *“அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன்”* என்றது..

கிளி *“இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும்.. சொல்கிறேன்..*
*_பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.. உன் அழகான இறகில் ஒன்றைத் தந்து விடு”_* என்றது. 

*_இன்னொரு இறகுதானே, தந்தால் போச்சு_* என்று குருவியும் சம்மதித்தது..

_கிளி சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.._ அதற்குப் பிறகு வழி தெரியவில்லை..

_இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே வந்த பறவைகளிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.._

*_அவைகளும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு இறகை விலையாக பெற்றன.._*

_குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு இறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.._

*முடிவாக, அதோ..* _*கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது..*_

*_வந்து விட்டோம்.._* _*வந்தே விட்டோம்..*_ *இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்..*

*_குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.._*

ஆனால்,
*இதென்ன..*
*ஏன் என்னால் பறக்க முடியவில்லை..* *ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே..*
*_காற்றில் பறக்கவே முடியவில்லையே._* என்று கதறியது..

_மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.._ _பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.._
_*குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..*_

*_இதோ கண் முன்னே.. தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.._*

ஆனால்
*அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்..*
_*அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது..*_ அந்தக் குருவி..
🐝

👇
_இன்று நம்மில் பலர்.. நாளைய மாய உலகின் வசதிகளைப் எண்ணி இன்றைய எல்லா மகிழ்ச்சியையும் இழக்கிறோம்.._

_கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது.. நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.._

*மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை..*
*_நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது.._*
_*ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்..*_
🐝

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...