Skip to main content

TODAY'S THOUGHT..

லண்டனில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் தன்னுடைய வயிற்றில் இருந்த சிசு கொஞ்சமும் நகராமல் இருப்பதை இரவில் திடீரென்று உணர்ந்தார்.பதறிப்போன அவரும் அவருடைய கணவரும் உடனே மருத்துவரை அணுகினர்.மருத்துவர் பரிசோதித்துவிட்டு காலையில் ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்றும்,சிசு கர்ப்பப்பைக்குள் வட்டமடிக்காமல் இருந்தால் அது உயிருடன் இல்லை என்பதாகவே தனக்கு படுவதாக கணவரிடம் மட்டும் ரகசியமாக சொல்லிவிட்டு மனதை திடப்படுத்திக்கொள்ள சொல்லிவிட்டார்.

குழப்பத்துடன் வீடு திரும்பிய கணவன் மனைவிக்கு விஷயத்தை சொல்லாமல் கொஞ்சம் அவளுடைய மனநிலையை மாற்ற டேப் ரிக்கார்டரில் ஒரு பாடலை போட்டுவிட்டார்.தன் வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனைவியின் அருகில் கண் மூடி அமர்ந்திருந்தார்.திடீரென்று தன் மனைவி தன் தோளை தொட்டு உலுக்கவும் கண்ணை திறந்தார்.மனைவி ஆனந்த கண்ணீரோடு சிசு கர்ப்பப்பையின் உள்ளே தற்போது நகர்வதாக சொல்லவும் உடனே மறுபடியும் மருத்துவமனைக்கு இருவரும் பயணப்பட்டனர்.

மீண்டும் பரிசோதித்த மருத்துவருக்கு பயங்கர ஆச்சர்யம்.அவரும் சிசு நகர்வதை உறுதி செய்தார்.எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல்  விசாரித்தார்.குறிப்பிட்ட பாடலை கேட்டவுடன்தான் குழந்தை நகர்ந்ததை உணர்ந்த அவர் அந்த இசையமைப்பாளரை தெய்வம் என்று வாயார புகழ்ந்தார்.

குழந்தை நல்லபடியாக சிறிது நாட்கள் கழித்து பிறந்தது.அந்த தம்பதியினர் நேராக அந்த இசையமைப்பாளர் வீட்டுக்கு வந்து அவர் காலில் அந்த குழந்தையை போட்டு ,அவர்களும் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கி சென்றனர்.....

அந்த பாடல் தேவாரம்.....!

அந்த இசையமைப்பாளர் இளையராஜா.....!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Gudmrng ano sis..nice lines..

    ReplyDelete
  3. Good morning, sister and friends.

    ReplyDelete
  4. Gud mrng . ano mam. And puthagasalai frnds

    ReplyDelete
  5. Gud morning ano mam and all friends

    ReplyDelete
  6. Gd afternoon ano mam and all of u in this blog.

    ReplyDelete
  7. Friends..

    Gudevng all.. Hope all of u might have watched Titanic movie.. Adhula ship sink aga poguthunu therinjum, andha ship la pala per uyira kaapathikka anga inga oodumbothu kuda 4 per continuous ah music vaasichutey irupanga.. Oru point of time la pothum nu matha 3perum povanga andha 4th persona gain solo va play pannuvaru so pona 3perumthirumba vandhu join panipanga..

    Adhu pola dha namalum inga puthagasalai la irukom, don't worry all of u, soon there will be some happy news.. Trust almighty, keep praying..

    ReplyDelete
  8. Good night ano mam & dear friends

    ReplyDelete
  9. Good night ano mam & dear friends

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here