''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கலாகும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர்களை நியமிக்க, 2017
செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய, இந்தத் தேர்வின் முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டன. அப்போது, தேர்வு முடிவில், 200 பேர் தில்லுமுல்லு செய்து, அதிக மதிப்பெண் பெற்றதாக புகார் எழுந்தது. உடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிந்து, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த பிரச்னையால், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே நடந்த சிறப்பு ஆசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகளும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கல்லுாரி பேராசிரியர் பணி, வேளாண் பயிற்றுனர் பணி, மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான, தேர்வு அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று கூறுகையில், ''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில், விசாரணை அறிக்கை தாக்கலாகும். அதை தொடர்ந்து, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் துவங்கும்; புதிய தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும்,'' என்றார்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment