Skip to main content

இன்று முழு சந்திர கிரகணம்: 152 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு

நிகழாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதத்தின் 2 -ஆவது பெளர்ணமி தினமான புதன்கிழமை (ஜன.31) நிகழ உள்ளது. இதனை எவ்வித பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, வெறும் கண்களாலேயே பார்க்கலாம். இந்த முழு சந்திர கிரகணத்துடன் சூப்பர் நிலவு (சூப்பர் மூன்), நீல நிலவு (ப்ளூ மூன்) ஆகியவையும் தோன்ற உள்ளன. முழு சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூ மூன் ஆகியவை வழக்கமாக வரும் நிகழ்வுகளாக இருப்பினும், 152 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன்கிழமை இவை மூன்றும் ஒரே நாளில் வருவது மிக அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

சந்திர கிரகணம்: நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது, நிலவின் மீது படும் சூரிய ஒளி பூமியால் தடுக்கப்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது.
பூமியின் நிழலில் இருந்து சந்திரன் வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதுவே சந்திர கிரகணமாகும். சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போதுதான் இது சாத்தியம் என்பதால் எப்போதும் பெளர்ணமி நாளில் தான் சந்திர கிரகணம் வரும்.
முதல் சந்திர கிரகணம்: இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம், பெளர்ணமி நாளான புதன்கிழமை வருகிறது. இந்த அரிய நிகழ்வு இந்தியா, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு கிரகணமாக தெரியும்.

அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் தொடக்கம் முதல் முடிவு வரை கிரகணத்தை பார்க்க முடியும். அதேசமயம், பிற வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் இதனை முழுமையாக பார்க்க முடியாது.
முழு கிரகணம் எப்போது: சூரியன், பூமி, நிலவு ஆகியவற்றின் சுற்றுப் பாதையில், நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி நட்ட நடுவில் வரும்போது, அதன் நிழல் முழுமையாக சந்திரன் மீது விழுந்து, அதை முழுமையாக மறைத்து முழு சந்திர கிரகணத்தை ஏற்படுத்துகிறது. அப்படியின்றி பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதி மீது மட்டும் விழும் காலங்களில் அது பகுதி சந்திர கிரகணமாக வருகிறது.

கிரகண நிகழ்வு: இந்தியாவில் புதன்கிழமை மாலை 5.18 மணிக்கு பூமியின் நிழல், நிலவின் மேல் மெதுவாக விழத் தொடங்கும். இது பகுதி சந்திர கிரகணமாகும். மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை பூமியின் நிழல் நிலவை முழுவதுமாக மூடியிருக்கும். இதுவே, முழு சந்திர கிரகணம். இரவு 7.37 மணி முதல் பூமியின் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும், இரவு 9.38 மணிக்கு பிறகுதான் நிலவு அதன் முழு ஒளியுடன் 'சூப்பர் மூன்'னாக பிரகாசிக்கும்.
சூப்பர் மூன்: இந்த கிரகணத்துடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வு சூப்பர் மூன். நிலவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுவதே 'சூப்பர் மூன்' எனப்படுகிறது.
சிவப்பு நிலா தோன்றுவது ஏன்?: சூரிய ஒளி ஏழு நிறங்களை உள்ளடக்கியது. இவற்றில் ஊதா, நீலம் போன்ற நிறங்கள் பூமியின் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டும் சந்திரனில் விழுகின்றன. எனவேதான் முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.
ப்ளூ மூன்: 'ப்ளு மூன்' என்றதும் இந்நாளில் நிலவு நீல நிறமாக தோன்றுமா என்ற கேள்வி எழக்கூடும். உண்மையில் நிலவு நீல நிறமாக தோன்றாது. இதுவொரு பேச்சு வழக்கு. ஒரே மாதத்தில் இரு பெளர்ணமிகள் வந்தால், இரண்டாவதாக வரும் பெளர்ணமியின் போது தோன்றும் நிலவு பேச்சு வழக்கில் 'ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...