Skip to main content

இன்று முழு சந்திர கிரகணம்: 152 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு

நிகழாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதத்தின் 2 -ஆவது பெளர்ணமி தினமான புதன்கிழமை (ஜன.31) நிகழ உள்ளது. இதனை எவ்வித பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, வெறும் கண்களாலேயே பார்க்கலாம். இந்த முழு சந்திர கிரகணத்துடன் சூப்பர் நிலவு (சூப்பர் மூன்), நீல நிலவு (ப்ளூ மூன்) ஆகியவையும் தோன்ற உள்ளன. முழு சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூ மூன் ஆகியவை வழக்கமாக வரும் நிகழ்வுகளாக இருப்பினும், 152 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன்கிழமை இவை மூன்றும் ஒரே நாளில் வருவது மிக அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

சந்திர கிரகணம்: நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது, நிலவின் மீது படும் சூரிய ஒளி பூமியால் தடுக்கப்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது.
பூமியின் நிழலில் இருந்து சந்திரன் வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதுவே சந்திர கிரகணமாகும். சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போதுதான் இது சாத்தியம் என்பதால் எப்போதும் பெளர்ணமி நாளில் தான் சந்திர கிரகணம் வரும்.
முதல் சந்திர கிரகணம்: இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம், பெளர்ணமி நாளான புதன்கிழமை வருகிறது. இந்த அரிய நிகழ்வு இந்தியா, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு கிரகணமாக தெரியும்.

அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் தொடக்கம் முதல் முடிவு வரை கிரகணத்தை பார்க்க முடியும். அதேசமயம், பிற வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் இதனை முழுமையாக பார்க்க முடியாது.
முழு கிரகணம் எப்போது: சூரியன், பூமி, நிலவு ஆகியவற்றின் சுற்றுப் பாதையில், நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி நட்ட நடுவில் வரும்போது, அதன் நிழல் முழுமையாக சந்திரன் மீது விழுந்து, அதை முழுமையாக மறைத்து முழு சந்திர கிரகணத்தை ஏற்படுத்துகிறது. அப்படியின்றி பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதி மீது மட்டும் விழும் காலங்களில் அது பகுதி சந்திர கிரகணமாக வருகிறது.

கிரகண நிகழ்வு: இந்தியாவில் புதன்கிழமை மாலை 5.18 மணிக்கு பூமியின் நிழல், நிலவின் மேல் மெதுவாக விழத் தொடங்கும். இது பகுதி சந்திர கிரகணமாகும். மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை பூமியின் நிழல் நிலவை முழுவதுமாக மூடியிருக்கும். இதுவே, முழு சந்திர கிரகணம். இரவு 7.37 மணி முதல் பூமியின் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும், இரவு 9.38 மணிக்கு பிறகுதான் நிலவு அதன் முழு ஒளியுடன் 'சூப்பர் மூன்'னாக பிரகாசிக்கும்.
சூப்பர் மூன்: இந்த கிரகணத்துடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வு சூப்பர் மூன். நிலவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றுவதே 'சூப்பர் மூன்' எனப்படுகிறது.
சிவப்பு நிலா தோன்றுவது ஏன்?: சூரிய ஒளி ஏழு நிறங்களை உள்ளடக்கியது. இவற்றில் ஊதா, நீலம் போன்ற நிறங்கள் பூமியின் காற்று மண்டலத்தில் ஈர்க்கப்பட்டு ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டும் சந்திரனில் விழுகின்றன. எனவேதான் முழு சந்திர கிரகணத்தின்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது.
ப்ளூ மூன்: 'ப்ளு மூன்' என்றதும் இந்நாளில் நிலவு நீல நிறமாக தோன்றுமா என்ற கேள்வி எழக்கூடும். உண்மையில் நிலவு நீல நிறமாக தோன்றாது. இதுவொரு பேச்சு வழக்கு. ஒரே மாதத்தில் இரு பெளர்ணமிகள் வந்தால், இரண்டாவதாக வரும் பெளர்ணமியின் போது தோன்றும் நிலவு பேச்சு வழக்கில் 'ப்ளூ மூன்' என்று அழைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here