Skip to main content

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்காலத்தின்போது பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்தும் மின்கசிவு காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதையும் மாணவர்கள் காயமடைந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்த நிலையிலும் பல கட்டடங்கள் காணப்படுகின்றன. மழைக்காலத்தில் இதுபோன்ற கட்டடங்கள் இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த சம்பவங்களும், உயிரிழப்புகளும் முந்தைய காலங்களில் ஏற்பட்டுள்ளன. இந்த கட்டடங்கள் நீண்ட காலமாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் அந்த கட்டடங்கள் காரணமாக உள்ளன. எனவே, இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பழைய கட்டிடங்களை உடனடியாக அப்புறப் படுத்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக இருப்பின் வட்டார வளர்ச்சி அதிகாரிகளையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக இருந்தால் பொதுப்பணித் துறை அதிகாரி களையும் பழைய கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்பில் இருந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
மழைநீர் ஒழுகும் கட்டடங்கள்... இதேபோன்று பருவமழையால் பள்ளி வளாகங்களில் எந்தவித விபத்துகளும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம் ஆகியோர் சுற்றறிக்கைகள் அனுப்பியுள்ளனர்.


Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...