Skip to main content

Posts

Flash News : High School to Hr Sec School Upgradation - School List Published

  GO NO : 11 , DATE : 18.01.2021 ஆணை  : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 13.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் :  " 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் . இப்பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 55 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிலும் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 21 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் "  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , 20.03.2020 அன்று சட்டமன்றப் பேரவை விதி 110 - இன்கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து பிறவற்றினிடையே பின்வரும் அறிவிப்பினை அறிவித்துள்ளார் . " ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக , 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் , 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் , வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும் ".  பள்ளிக் கல்வி இயக்குநர் தன...

இன்றைய சிந்தனை..

*தழும்புகள், காயத்தை நினைத்து வருந்துவதற்கு அல்ல.. அந்த காயத்தை கடந்து வந்ததை எண்ணி பெருமைப்படுவதற்கு..!!* *இனிமேல் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்டாலும்.. புன்னகை செய்யுங்கள்; புன்னகையின் அடுத்த நிலை தான் வெற்றி..!!* *பேராசைக்கும், இலட்சியத்திற்கும்கொஞ்சம் தான் வித்தியாசம்.. முயற்சி இல்லாத கனவு பேராசை..! முயற்சியுடன் கூடிய கனவு இலட்சியம்..!!* *வாழும் காலம் சிறிது என்பதால் நேரத்தை விரயம் செய்யாதீர்..!வெற்றி தொலைவு என்பதால் முயற்ச்சியை கைவிட்டு விடாதீர்..!!* *உங்களுக்கு எது பிடிக்கவில்லையோ.. அதனிடம் இருந்து விலகி நில்லுங்கள்....!பொருளானாலும் உறவானாலும்....*    *அதையே நினைத்து  உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்ளாதீர் ......!அதனால் பாதிக்கப்படுவது  நீங்கள் மட்டுமே...!* *உங்கள் கவுரவம் வேறெங்கும் இல்லை..! உங்கள் நாக்கின் நுனியில் தான் உள்ளது..!!* *நம்பிக்கை இழந்தவர் வெல்வது கடினம்..!நம்பிக்கையோடு இருப்பவர் வீழ்வது கடினம்..!!* *உங்கள் எதிரிகளை கவனியுங்கள்.. அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்..!!* *அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களு...

10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் - ஆசிரியர்கள் கருத்து

  10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங் களை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது என் பது சிரமமான விஷயம் என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . குறைக்கப்பட்ட பாடங்கள் எவை ? 10 , 12 - ம் வகுப்பு மாணவர்க ளுக்கு நாளை ( செவ்வாய்க்கி ழமை ) முதல் பள்ளிகள் திறக் கப்படுகின்றன . கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழு பாடங்களையும் அவர் கள் கற்றுக்கொள்வது சிரமம் என்பதை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம் அரசுவெளியிட்டு இருக்கிறது .  அந்தவகையில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தமாக இவ்வளவு பாடத் தலைப்பு கள் குறைப்பு என்று இல்லா மல் , பாடப்பிரிவுகளில் இருக் கும் பாடத்தலைப்புகளின் உட்பகுதிகளில் சிலவற்றை யும் , மேலும் உயர்கல்வி படிப் புக்கு தேவை என கருதி சேர்க் கப்பட்டு இருந்த பாடங்களின் உட்பகுதிகள் சிலவற்றை யும் தான் குறைத்து இருக்கின் றனர் .  மொத்தத்தில் மாண வர்களின் கற்றல் விளைவு களில் எந்த பாதிப்பும் ஏற் பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் பாடக் அறைப்பு செய்யப்பட்டுள்ள காககல்வித்துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன . ஆசிரியர்களின் கருத்துகள் குறைக்க...

அனைத்தும் அவர் அறிவார்..

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது. மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான். அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன. அவன் உரக்கச் சிரித்தான். முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார். கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன். கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார். இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்...

News about PGTRB..

Very soon Pgtrb Notification can be expected..

குறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு TNSCERT இயக்குநர் கடிதம்.

  குறைக்கப்பட்ட (முன்னுரிமை அளிக்கப்பட்ட - Prioritized Syllabus) பாடத்திட்டத்தை முதலில் முடிக்கவும் நேரமிருப்பின் எஞ்சிய பாடங்களையும் முடிக்கலாம் - போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்கள் அந்தந்த தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு TNSCERT இயக்குநர் கடிதம்.

தலைக்கனம் என்னும் செருக்கு..!

செருக்கு என்பது ஓர் தீயகுணம், அதுவே பல தீய விளைவுகளுக்கு காரணமும் கூட. செருக்கில் விழுந்தவர்கள் என்றுமே உயர்ந்த நிலையை அடைய முடியாது... செருக்கு யாரிடம் இருக்கிறதோ!, அவர்கள் மற்றவர்களிடமிருந்து அன்பு, நட்பு, பாசம் போன்றவற்றைப் பெற இயலாது, அவர்களுக்கு நல்லவற்றை சொன்னாலும் கேட்க மாட்டார்கள். நல்லது சொன்னவர்களை அற்பமானவர்களாகக் கருதுவார்கள்... செருக்கினை அழித்து, மற்றவர்களையும் மதித்து, அவர்களையும் அரவணைத்து, தன் வாழ்க்கைப் பாதையை சீராகக் கொண்டு சென்றால்  அவர்களுக்கு வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள் கிடைக்கும். செருக்கின்மையே வாழ்க்கையின் வெற்றி. அந்த வெற்றியின் மறைபொருள்... ஒரு அரசர், ‘யான் எனல்’ என்ற செருக்கு நிரம்பியவர். வேட்டைக்குச் சென்ற போது ஒரு துறவியை சந்திக்க நேரிட்டது. அவர் கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார்... அந்த துறவியைப் பார்த்து அரசன்.., ”நான் பல நாடுகளை வென்றவன், அது இது என்றெல்லாம் தன்னைப் பற்றிக் கூறிய அரசன், எல்லாம் தனக்கு இருந்தும் தான் ''நிம்மதி இல்லாமல்'' இருப்பதாகக் கூறி,  தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் எனக் கேட்டான்... தியானம் கலைந்தத...

News about PGTRB 2021..

Here\"s again a valid proof that pgtrb is on its way.. Its not the usual procedure because it was clearly mentioned that they need vacancies about pg and physical director which is only for recruitment of pg teachers through EXAM.. Don\"t believe in people who expects and act according to their selfishness.. Keep preparing.. 

பணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ஒத்திவைப்பு

இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், பலர், மாற்று சமூக வலைதளங்களுக்கு மாறி வருவதால், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பான தன் புதிய கொள்கையை, மே, 15 வரை ஒத்தி வைத்துள்ளது. அமெரிக்கவைச் சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும், 40 கோடி பேர், இதைப் பயன்படுத்து கின்றனர். இந்நிலையில், தன் பயனாளிகள் குறித்த தகவல்களை, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக, புதிய கொள்கையை, வாட்ஸ் ஆப் சமீபத்தில் அறிவித்தது.பிப்., 8ம் தேதிக்குள் அந்த கொள்கையை ஏற்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்றும், அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.இதற்கு, இந்தியா உட்பட பல நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.   மாற்று சமூக வலை தளங்களுக்கு, பலர் மாறி வருகின்றனர். இதையடுத்து, 'புதிய கொள்கையை அமல்படுத்துவது, மே, 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  மக்களுக்கு உள்ள சந்தேகங்கள், தவறான புரிதலுக்கு சரியான விளக்கம் அளிக்கப்படும்' என, வாட்ஸ் ஆப் நிற...

TODAY'S THOUGHT..

யாரும் இறுதி வரை வரப்போவதில்லை, யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தோடு \"சுபம்\" போடப்படுகிறது.. ஒருவரே கடைசி மூச்சு வரை வரப்போகிறார் என்பது வாழ்வியல் இல்லை. அதெல்லாம் காலத்தின் சுழற்சியில் அடித்து செல்லப்படுவர்..  வாழ்வில் சிலர் வாழ்க்கையை  அழகாகக்கின்றனர் என்பதற்காக அவரே கடைசி வரை வாழ்வை அழகாக்குவார் என்பது அபத்தம்.. விரும்பி வந்தவர்கள் எல்லாமே விலகி செல்பவர்களே.. அதெல்லாம் காலம் பார்த்துக்கொள்ளும்.. நீங்கள் எதையும் மெனக்கெட வேண்டியதில்லை.. ஈர்ப்பும் தேவையும் ஒருவருக்கு பூர்த்தியானாலும் சரி பூர்த்தியாகாமால் இருந்தாலும் சரி விலகல் தான் இறுதி அத்தியாயம்.. மொபைல் அப்டேட் போல பத்து வருடங்களுக்கொருமுறை மனிதர்களுக்கு புதுப்பித்தல் நடைப்பெறுகிறது.. இறுதி வரை வருவார் என்று நினைத்தவரெல்லாம் காலப்போக்கில் கூட்டத்தில் எங்கேயோ ஒரு புள்ளியாய் வந்து புள்ளியாய் மறைந்து விடுவார்கள்.. ஒரு சிலர் அப்படி தானாகவே கிடைப்பார்கள், கிடைத்து தானாகவே தொலைந்து போவார்கள்.. அவர்களே வந்து அவர்களே மறைவதற்கு ஏன் வந்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.. அதையே நினைத்து உருகி  அடுத்த நிலைக்கு செல்லாமல்  உ...

பள்ளிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசு அறிவிப்பு.

  பள்ளிகள் திறப்பு மற்றும் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த  4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.  தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று முற்றிலும் நீங்காத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத அளவுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்ெகாண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பள்ளிகள் திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.  அந்த குழுவில் தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெயந்தி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, அதே துறையை சேர்ந்த கூடுதல் இயக்குநர் அமிர்தாேஜாதி, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் கல்வித்துறையை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டவாரியாக பணிகள...

மாடு போற்றுதும் மாடு போற்றுதும்..

மனிதனுக்காய் பால் கொடுத்து மனிதனுக்காய் தோள்(ல்) கொடுத்து மனிதனுக்காய் தனைக் கொடுத்து மாண்டு போவது மாடு...! இரத்தமெல்லாம் பிழிஞ்சி விட்டு ஏறேற்றி உழுது விட்டு எடையேற்றிப் படுத்தி விட்டு ஏமாற்றி வாழ்வதே மனிதன்...! மாடு போற்றும் ஒருநாள் உழைப்பை போற்றும் ஒருநாள் மணிகள் கட்டி வண்ணமிட்டு போற்றுவோம் இந்த ஐந்தறிவை... நம்சோற்றுக்கு பின்னும் இருக்கும் நம்சக்திக்கு பின்னும் இருக்கும் நம்கிராமத்து வாசம் கொடுக்கும் நம்நண்பனை இன்று வாழ்த்துவோம்...! தெரியா இந்த தலைமுறைக்கு புரிய வைப்போம் அதனருமைகளை தெரிந்த நாமும் மறந்திட்டால் அறிவைப் பெருக்கி ஆவதென்ன? வீரத்தின் அடையாளமாய் , தமிழரின் திருநாளாய் , விவசாயத்தின் தோழனாய் , ஏழைகளின் தெய்வமாய் , உழவனின் தொண்டனாய் , விளங்கும் பசு மற்றும் மாட்டின்  பண்டிகையாம் மாட்டு பொங்கல் ...!! அலங்காரங்களுகிடையே கம்பீர நடைகொண்டு , மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

10, 12-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு: ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது

    நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்புதாமதம் காரணமாக 50 சதவீத அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குபின் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாக நடப்பு ஆண்டு1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும்பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள தாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டது. தற்போது 10, 12-ம்வகுப்புகளுக்கும் 50 சதவீதம்வரை பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வ...

பொங்கலோ பொங்கல்..

பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்! பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்! தங்கட்டும் தங்கட்டும் பாசமும் தங்கட்டும்! தங்காமல் போகட்டும் வேசமும் அழிந்தேதான்! சிறக்கட்டும் சிறக்கட்டும் உழவர்தன் வாழ்க்கையும் சிறப்பான‌ வயற்காடும் செழிப்பாக விளையட்டும பரவட்டும் பரவட்டும் சந்தோசம் பரவட்டும்! பரவாமல் போகட்டும் தேள்கொட்டும் ஏழ்மைதான்! போற்றட்டும் போற்றட்டும் உலகம்நம் ஒற்றுமையை போராடும் குணம்கண்டு எதிராளி பதுங்கட்டும்! பறக்கட்டும் பறக்கட்டும் சமாதான கொடிமட்டும்! பறக்காமல் இறக்கட்டும் தீவிரவாத எண்ணம்தான்! திக்கெட்டும் திக்கெட்டும் எட்டட்டும் மகிழ்வோசை திக்கின்றி அடங்கட்டும் சோகத்தினால் அழும்ஓசை பொங்கட்டும் பொங்கட்டும் பொங்கலும் பொங்கட்டும்! பொங்கலைப் போல மகிழ்ச்சியும் பொங்கட்டும்! பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம்  வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம்.. தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது.. தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல.. தமிழரின் பண்பாட்டு விழா.. தம...

CM CELL REPLY..

Dear Friends.. Whoever waiting for PGTRB, here is a postive reply from CM CELL for you all.. Don't bother about others, keep preparing well.. All the very best..

நேற்று (13.01.2021) நடந்த CEO அவர்களின் meeting இல் கூறப்பட்ட தகவல்கள்.

  1. மாணவ/மாணவியர்கள் water can மற்றும் சாப்பாடு வீட்டிலிருந்தே கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்  2. Mask முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்  3. குடிதண்ணீர் உணவு snacks எதையுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது. 4. கை குலுக்குதல் தொட்டு பேசுதல் தடை செய்யப்பட்டுள்ளது. 5. Revised syllabus விரைவில் அளித்து விடுவார்கள்  6. தேர்வை குறித்த பயம் தேவையில்லை  தேர்வு நிச்சயமாக நடைபெறும்  7. Class room, Lab maximum strength 25 students  8. 18.01.2021 திங்கள் கிழமை Team visit செய்வார்கள் ,9. All Teachers should come to school 9:30 to 4:30  No special classes  No evening class  10.BT teachers should give 10th classes  PG teachers should give 12th classes  Other special teachers PET SGT maintain decipline Thermal scanner, sanitiser  11.அனைத்து மாணவ/மாணவியர்கள் காலை பள்ளிக்கு வருகை தந்தவுடன் பள்ளியின் நுழைவாயிலில் மூடப்பட்டிருக்க வேண்டும்  12.பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதி...

போகி திருநாள்..

 மார்கழி மாதத்தின் கடைசி நாளைத்தான் போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது நாளடைவில் மருவி போகி என்றாகி விட்டது. பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியே போகியின் தத்துவம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தப்படுத்தி அசுத்தங்களை போக்குவதால் அது போக்கிப் பண்டிகை என்றழைக்கப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தாத்பர்யமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அது மட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுபடுத்துவது தமிழர் பண்ப...

நடப்பு கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் , 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

    புதியதாக தொடங்கப்படும் 25 தொடக்கப் பள்ளிகளுக்குத் தேவையான 25 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 25 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் , இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட ஆசிரியரின்றி உபரியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை இணைப்பு -1 ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது . தரம் உயர்த்தப்படும் 10 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளுக்கு , பள்ளி ஒன்றிற்கு ஒரு நடுநிலைப் பள்ளி தலைமையாசியர் ( நிலை 17 ரூ .36,700 -116200 ) மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் ( நிலை 16 , ரூ .36400 -115700 ) வீதம் , 10 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தியும் , 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்ட உபரி பணியிடங்களிலிருந்து இணைப்பு - 2 ல் குறிப்பிட்டுள்ளபடி மாற்றி வழங்கி ஆணையிடப்படுகிறது . இவ்வாறு மாற்றி வழங்கப்படும் 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 ...

சிட்டுக் குருவி..

 ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு...  ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது. வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது!. ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.. சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?" எ...

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் TET தேர்விலிருந்து விளக்களித்திட வேண்டுகோள்!

    சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் போன்று புத்தாக்கப் பயிற்சியை அரசு உதவிபெறும் பள்ளி 1500 ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்து ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்திட மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009  RTE Act அடிப்படையில் தமிழ்நாட்டில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET தேர்ச்சி கட்டாயம் என்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனக்கூறி ஊதியம் தவிர மற்ற எந்த பணப்பயனுமின்றி தவித்து வருகின்றார்கள். தற்போது மைனாரிட்டி பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் DIET மூலம் புத்தாக்கப் பய...

அஞ்ஞான சூனியம்..

தொலைந்து போன பாரம்பரியங்களும்.. ஆரோக்கிய வாழ்க்கையும்..!! தென்னை ஓலை விசிறி எங்கே? பனையோலை விசிறி எங்கே? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ? அரிக்கேன் விளக்கு எங்கே?..!! பல்லாங்குழி எங்கே? பம்பரங்கள் எங்கே? கண்ணாமூச்சி எங்கே? திருடன் போலீஸ் எங்கே? கம்பர்கட் கல்கோனா மிட்டாய் எங்கே? பஞ்சு மிட்டாய், இஞ்சி மரப்பா எங்கே?..!! பல் துலக்கிய ஆலங்குச்சி எங்கே? பனை ஓலை குடிசைகள் எங்கே? நடை பழகிய நடை வண்டி எங்கே? பொதி சுமந்த கழுதைகள் எங்கே?..!! எலந்தைப்பழம் எங்கே? சீம்பால் எங்கே? பனம்பழம் எங்கே? பழைய சோறு எங்கே? மாட்டு வண்டி எங்கே? கூட்டு வண்டி எங்கே? பொன் வண்டு எங்கே? சிட்டுக்குருவி எங்கே?..!! அன்பு எங்கே? பண்பு எங்கே? பாசம் எங்கே? நேசம் எங்கே? நேர்மை எங்கே? வாய்மை எங்கே? கண்ணியம் எங்கே? கட்டுப்பாடு எங்கே?..!! விவசாயம் எங்கே? விளை நிலம் எங்கே? ஏர்கலப்பை எங்கே? மண் வெட்டி எங்கே? மண்புழு எங்கே? தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?..!! தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே? இடுப்பைச் சுற்றிய சுருக்குப்பை எங்கே? பெட்மாஸ் லைட் எங்கே? கோலி குண்டு எங்கே? கோலி சோடா எங்கே?..!! அம்மிக்கல் எங்கே? ஆட்டுரல் எங்கே? பிள்ளை சுமந்த...

பொங்கல் விடுமுறைக்கு பின் , பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ?

  பொங்கல் விடுமுறைக்கு பின், வரும், 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால்,மார்ச் முதல் பள்ளிகள்,கல்லுாரிகள் மூடப்பட்டன; ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்புகள்சில மாதங்களாக, ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு உள்ளன.கல்லுாரிகளில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், 2020 டிசம்பர், 2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. பாலிடெக்னிக் கல்லுாரிகளும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்புகள் நடத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.இதனால், பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதற் கட்டமாக நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, ஜனவரி, 6 முதல், 8 வரை, பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.கண்கள் பாதிப்புபெரும்பாலான பெற்றோர், பள்ளிகளை திறக்க வேண்டியது கட்டாயம் என, தெரிவித்துள்ளனர்.  'ஆன்லைன் வகுப்பில் பாடம் புரிவதில்லை. மாண...

வாழ்க்கை ஒரு விந்தை..

மாலையில் நடைப் பயிற்சியைமுடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்... திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான் மனைவி பாலத்தினை வந்தடைந்தார். மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்... இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது... தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு கணவனை அழைத்தாள். கணவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்கு அழுகையாய் வந்தது. இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள். பாலத்தை கடக்...

"WHATSAPP" பிலிருந்து "சிக்னல்" -க்கு மாறிட்டீங்களா...? உடனே மாறுங்கள்...!

    "வாட்ஸ் அப்" பிலிருந்து "சிக்னல்" -க்கு மாறிட்டீங்களா...? 🔴உடனே மாறுங்கள்...! வாட்ஸ் அப் செயலியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் "சிக்னல்" என்ற செயலிக்கு உலகம் முழுவது ஏராளமானோர் மாறி வருகின்றனர்...! பிரையன் அக்டன் மற்றும் ஜான் கௌம் ஆகிய இருவரும் இணைந்து 2009ம் ஆண்டு தொடங்கிய வாட்ஸ் அப் செயலி நிறுவனத்தை 2014ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிக் கொண்டது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் - ஐ கைப்பற்றிய பிறகு மேலும் பல கூடுதல் வசதிகள் வாட்ஸ் அப் ல் அறிமுகம் செய்யபப்ட்டது...! இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் அனுப்பும் தகவல்களை வியாபார ரீதியாக வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் வகையில் விதிமுறைகளை மாற்றியுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்...! இது தொலைபேசியை ஒட்டு கேட்பது போன்று தனி மனித உரிமையை மீறும் செயல் என்று உலகம் முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன...! வாட்ஸ் அப் - ஐ புறக்கணிப்பதாகக் கூறி ஏராளமானோர் இந்த செயலியிலிருந்து விலகி சிக்னல் என்ற செயலிக்கு மாறி வருகிறார்கள். சிக்னல் செயலியும் வாட்ஸ் அப்பில் உள்ள அனைத்து தகவல் பறிமாற்றங்...

இன்றைய சிந்தனை..

 உங்கள் பாதையில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும். உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள். *அவரிடம் நம்பிக்கை வையுங்கள், இவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள்.* முதலில் *உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே வெற்றிக்கு வழி வைக்கும்..* கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஆற்றங்கரையை கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார். கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகி விடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்து விடவே., தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார். தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?  என்று கேட்டான். இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்து இருப்பேன்” என்றார்...