நமது அன்றாட வாழ்க்கையில் கணக்கில் அடங்காத பூனைக் கதைகள் இருக்கும். முதலில் புத்த அறிவாலயம் ஒன்றில் வசித்த ஒரு பூனைக் கதை ஒன்றைப் படிக்கலாம்.
தினந்தோறும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குருவும் அவருடைய மாணவர்களும், அறிவாலயத்தின் தங்கும் விடுதியிலிருன்து புறப்பட்டு தியானம் செய்ய, அங்குள்ள தியானமண்டபத்திற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் அங்குள்ள சமையல் அறையில் வளர்ந்த
பூனை ஒன்று, பெரியதாக வளர்ந்து அவ்வப்பொழுது பெரியதாக சத்தம் எழுப்பத் தொடங்கியது.
இந்தப் பூனை போடும் சப்தம் தியானத்திற்கு இடையூறு செய்யவே, குரு, அப்பூனையை தொலைவில் உள்ள மரத்தில் கட்ட தன் மாணவன் ஒருவனுக்கு உத்திரவிட்டார்.
அடுத்த நாள் முதல், தியானத்திற்கு செல்வதற்கு முன், அந்தப் பூனையைப் பிடித்து தொலைவில் இருந்த ஒரு குறிப்பிட்ட மரத்தில் கட்ட முடிவு செய்தார்கள். (தியானநேரம் முடிந்த பின் பூனை அவிழ்த்து விடப்படும்).
அன்று முதல் தியானத்திற்கு செல்லும் முன்பே பூனையை ஒரு குறிப்பிட்ட மரத்தில் கட்டுவது வழக்கமாகிவிட்டது.
மாதங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டோடின. அந்த குருவும் மறைந்தார். பூனையும் இறந்தது. சில மாணவர்கள் குரு ஆனார்கள். புதிய மாணவர்கள் சேர்ந்தார்கள். சில நூறு வருடங்களும் கழிந்தன.
அந்த அறிவாலயத்தில் பூனை ஒன்று வளர்க்கப்பட்டுமுன்ன, தியானம் தொடங்கும் முன்பாக, தவறாமல் குறிப்பிட்ட அந்த மரத்தில் கட்டப்படும்.
பூனையின் மகிமையையும், அந்த மரத்தின் மகிமையும், ஒரு பூனையை குறிப்பிட்ட மரத்தில் கட்டிவிட்டு பின்னர் தியானம் செய்யும்போது கிடைக்கும் அபூர்வ தியான பலன்களையும் விவரித்து பல குருமார்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய ஓலைச் சுவடிகள் இருப்பதாக யாரோ சொல்லக் கேள்வி.
(பின் குறிப்பு)
மனிதன் பயங்கரமானவன்
நினைத்த மாத்திரத்தில் கடவுளையும் உருவாக்குவான். தான் இறபின்னும், வேண்டாத, கேடுகள் விளைவிக்கும் பல செயலையும், தவறான விளக்கங்களும் பல நூற்றாண்டுகள் நிலைக்கும்படியும் செய்வான். மேலே கண்ட பூனை விவகாரம் இந்த வகையில் சேரும்.
இது போன்ற பல ஆதாரமற்ற நம்பிக்கைகள் மற்றும் நமது கலாசாரத்தில் ஊறிய அபத்தங்கள் கணக்கில் அடங்காது. எனவே தான் மனிதன் பயங்கரமானவன் 😇😇

Good Afternoon Everyone ❤️
ReplyDeleteI know I have been away from my blog for many years due to unavoidable famil situations.. Am reall thankful, grateful to many people who approached me asking for the updates of blog.. Here I am, back to form..
This blog is again gonna be your place of relaxation, information and motivation too.. Welcome back everyone 💐
Hi mam gd to see u after long time.happy to meet u again
ReplyDeleteNaren sir..
DeleteThanks a lot.. Lets keep in touch🙏🏻
அட்மின் மேடம் மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteஉங்களோட டெய்லி தாட்ஸ் ரொம்ப மிஸ் பண்ணேன்
Hi Swetha madam..
DeleteHope you are doing good, am trying to get back to blog, very soon I'll be active like before.. Thanks for your concern..
Gd aft mam. Why again ur absence.? I want to ask one doubt . Polytechnic lecturer exam nadakkuma. Adukum NET SET VENUMUNU varuma? Bcz last exam la eligibility PG with first class iruntha pothumnu sonnanga
ReplyDeleteGd Evng Naren sir..
DeletePolytechnic porutha vara NET SET ku wvasoyam varadhu, last time process repeat aga dhan chances adhigam.. Unless, until GO vara varaikum adha pathi worry pana vendam sir..