Skip to main content

வாழ்க்கையின் நீதி கதை!

தற்போதைய காலகட்டத்திற்கு  இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் தேவை!


🐀🐀எலிப்பொரியும் எஜமானியும். (சிறு கதை)🐀🐀


ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது...


ஒரு நாள் அது தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.


எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.


வீட்டின் எஜமானனும்,

எஜமானியும்,

 ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.


ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.


அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.


அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது...


உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது...


"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார்.


எனக்கு பயமாக இருக்கிறது என்றது.."


இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.."


உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.


நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.."


உடனே அது ..

பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று..

அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.


வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு,

"நான் எலிப் பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்..." என்றது.


மனம் நொந்த எலி... அடுத்தாக...

பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது...


ஆடும் அதேபதிலைச் சொல்லியது.


அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை...


"எலிப்பொறியை பார்த்து,

என்னையும் பயப்படச் சொல்கிறாயா?"

என்று நக்கலும் அடித்தது.


அன்று இரவு...

எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு...


பண்ணையாரும்,

அவர் மனைவியும், தூங்கப் போயினர்...


ஒரு அரை மணி நேரத்தில்,,

*"டமால் "* என்றொரு சத்தம்.


எலிதான் மாட்டிக் கொண்டு விட்டது என்று என்னிய  பண்ணையார் மனைவி ஓடிவந்து..

எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.


ஆனால்...

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.


எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.


விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும்..

பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.


அருகில் இருந்த ஒரு மூதாட்டி...


"பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.."

சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது.."

என்று யோசனை சொன்னாள்.


கோழிக்கு வந்தது வினை.


கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது.

கோழி உயிரை விட்டது.


அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.


உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்...


அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்...


வான்கோழியும் உயிரை விட்டது.


சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.


பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட 

ஊருக்கே விருந்து வைத்தார்.


இந்த முறை ஆட்டின் முறை.....


விருந்தாக ஆடும் உயிரை விட்டது..


நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.


பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.


"எலி தப்பித்து விட்டது. அப்பாடா..."


கதையின் நீதி :- 


கதையின் நீதி :- உங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் 

"என்ன..? என்றாவது கேளுங்கள்.


ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை?அது எப்போது வரும்? என்பது யாருக்கும் தெரியாது.


அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.


அடுத்த முறை... நம்முடையதாகவும் இருக்கலாம்..

Comments

  1. Wishing everyone a blessed morning..

    ReplyDelete
  2. வணக்கம் அட்மின் மேடம் டிஆர்டி எப்போ வரும்

    ReplyDelete
  3. பலர் பகல் கனவு கண்டுட்டு இருந்தாங்க எல்லாம் போச்சா

    ReplyDelete
    Replies
    1. பகல் கனவை நினைவாக்க முயற்சி பண்ணாங்க

      Delete
  4. கொஞ்ச நஞ்சம் ஆட்டமா டா ஆடுனிங்க, வெச்சாங்களா ஆப்பு

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய சரவணன் அவர்களே நீங்க என்ன சொல்ல வர்றீங்க என்பதை தெளிவாக கூறுங்கள்
      TRT வருமா வராதா

      Delete
    2. அருள் நண்பரே நிச்சயமா டிஆர்டி தான் வரும் அதில் இன்னுமா சந்தேகம்

      Delete
    3. நன்றிகள்

      Delete
  5. Hi madam hope you are doing good

    ReplyDelete
  6. Trt varum but 2013 ku applicable agathu so bro and sis yarum yaraiyum thakki pesa vendam

    ReplyDelete
    Replies
    1. Apdi patha 2017 kum
      Thana porunthathu sir

      Delete
    2. 2013 க்கு பொருந்தாதுனா ....எக்ஸாம்க்கு eligible இல்லையா

      Delete
    3. Apdilam edhum ila, trt tet clear pana ellarukum porundhum..

      Delete
    4. Vela venumna trt eludhi dhan aganum..

      Delete
  7. Trt வருமா??????????

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...