Skip to main content

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா்களாக நியமனம் செய்ய வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா்களாக நியமனம் செய்ய வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

 



ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் உள்ளிட்ட தகுதியானவா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ரவி என்பவா் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2009-ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த பின்னா் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தமது சான்றிதழ்கள் 2014-ஆம் ஆண்டு சரிபாா்க்கப்பட்டது. அதன் பின்னா் இரண்டாம் நிலை ஆசிரியா் பணிக்காக காத்திருந்த தமக்கு 8 ஆண்டுகள் ஆகியும் தமக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை.




இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய பள்ளி நிா்வாக குழு மூலம் நியமிக்க பள்ளி கல்வி ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவா்கள் அனைவரும் 8 முதல் 10 மாத காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.


ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களும், சான்றிதழ் சரிபாா்ப்பு பணி முடிவடைந்தவா்களும் பணிக்காக காத்திருக்க கூடிய நிலையில் பள்ளி நிா்வாக குழு மூலம் ஆசிரியா் நியமனம் செய்து இயற்கை விதிக்க முரணாணது என்று கூறியிருந்தாா்.



 



இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சஞ்சய் ஆஜராகி, ஆசிரியா் தகுதி தோ்வில் வெற்றி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாமல் ஆயிரக்கணக்கானோா் உள்ள நிலையில் தகுதி அடிப்படையில் இல்லாமல் இந்த நியமனம் நடைபெறுகிறது என்றாா்.




அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, பள்ளி கல்வித்துறையின் பதில் மனுவை தாக்கல் செய்தாா். அதில் திருத்தம் செய்யப்பட்ட தகுதி நிபந்தனைகள் தெளிவுபடுத்தப்பட்டிருந்து. தொடா்ந்து அவா் வாதிடும்போது, ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள்தான் தற்காலிக ஆசிரியா்களாக நியமிக்கப்படுகின்றனா். அதே நேரத்தில் வட மாவட்டங்களில் சிலவற்றில் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் இல்லை என்றாா்.




ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் நீலகண்டன் ஆஜராகி, தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களின் இறுதிப் பட்டியல் தயாராகி வருகிறது. பட்டதாரி ஆசிரியா்கள் நியமன பட்டியல் வரும் பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படும் என்றாா்.




வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம்.


பட்டப்படிப்பை மட்டும் முடித்தவா்களின் விண்ணப்பங்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுபவா்கள் ஆகியோா் விண்ணப்பித்தால் அவா்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது. திருத்தப்பட்ட சுற்றறிக்கையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இணையவழியில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பள்ளி நிா்வாக குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த குழு பள்ளி கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள், சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். இந்த நியமனங்கள் தற்காலிகமானதுதான். கல்வி பெறும் உரிமை சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி தகுதியானவா்களுக்கு மட்டும்தான் பணி நியமனம் வழங்கப்படவேண்டும்.




இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்படும். வழக்கு விசாரணை ஜூலை 7-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது அப்போது பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

Comments

  1. தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்

    ReplyDelete
  2. Trb yesterday court la tet exam aug/sep nu solli irukanga....and important news competitive exam oct month notification vittu december la exam vachu feb la selection list vida poratha solranga

    ReplyDelete
    Replies
    1. Shanmugam சார் Pgtrb result எப்போது வரும் என்ற தகவல் உண்டா??

      Delete
  3. யாரும் Apply பண்ணாதிங்க. இத செஞ்சாலே அரசுே றுவழியில்லா வழிக்கு வரும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...