Skip to main content

பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 5 அசத்தல் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.


இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, 5 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.


1. மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள்‌


தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்று (Person Studied in Tamil Medium- PSTM)‌, கல்வி இணைச்சான்று (Equivalence Certificate), புலப்பெயர்வு சான்று (Migration Certificate) போன்ற 25 வகையான சான்றிதழ்களை நேரடியாக மாணவர்கள்‌ சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களை/ பள்ளிகளை அணுகி பெற்று வந்த நிலைக்கு மாற்றாக தமிழ்நாடு அரசின்‌ பொது சேவை மையங்கள்‌ வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும்‌ பெறும்‌ நிலை உருவாக்கப்பட்டுள்ளது.


படிப்படியாக அனைத்து சேவைகளும்‌ ஜூன்‌ 2022க்குள்‌ இணைய வழியில்‌ பொது சேவை மையங்கள்‌ வாயிலாக வழங்கப்படும்‌.


2. மின்பதிவேடுகள்‌ (eRegisters)


ஆசிரியர்களின்‌ நிர்வாகப் பணியை சூறைப்பதற்காக தற்போது நடைமுறையில்‌ இருக்கும்‌ 100க்கும்‌ மேற்பட்ட பதிவேடுகளை கணினிமயமாக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இப்பணியின்‌ தொடக்கமாக 30 பதிவேடுகள்‌ மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குக்‌ கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள்‌ இப்பதிவேடுகளை 2022-23ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ நேரடியாக (physical copy) பராமரிக்கத்‌ தேவையில்லை. மின்பதிவேடுகளாக வைத்திருந்தால்‌ மட்டும்‌ போதுமானது.


இதனால்‌ ஆசிரியர்கள்‌ தம்‌ கற்றல்‌, கற்பித்தல்‌ செயல்பாடுகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்த இயலும்‌. படிப்படியாக ஜூன்‌ 2022க்குள்‌ பிற அனைத்து பதிவேடுகளும்‌ மின்பதிவேடுகளாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும்‌.


3. இணைய வழியில்‌ பணிப்பலன்களைப்‌ பெறுவதற்கான செயலி


ஆசிரியர்கள்‌ தற்செயல்‌ விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு என தங்களது பணிசார்ந்த தேவைகளை எழுத்துப்பூர்வமாக தங்கள்‌ உயர்‌ அலுவலர்களிடம்‌ நேரடியாகச்‌ சென்று விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர்‌. இம்முறையில்‌ ஏற்படுகின்ற சிரமங்களைக்‌ களையும்‌ வண்ணம்‌ அவர்தம்‌ கைபேசி வாயிலாக விண்ணப்பிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்குக்‌ கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்‌ 3 லட்சத்திற்கும்‌ அதிகமான ஆசிரியர்கள்‌ பயன்‌ பெறுவர்‌.


4. 2022- 23ஆம்‌ கல்வியாண்டிற்கான நாட்‌காட்டி


ஒவ்வொரு கல்வியாண்டும்‌ பள்ளி தொடங்கவிருக்கும்‌ நாள்‌, செயல்படும்‌ நாட்கள்‌, தேர்வு, விடுமுறை தினங்கள்‌ என அனைத்துத்‌ தகவல்களையும்‌ கொண்ட கால அட்டவணை பெற்றோர்‌, மாணவர்‌, ஆசிரியர்களின்‌ நலனுக்கென வெளியிடப்பட்டுள்ளது.


5. 2022- 23ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி


அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ 3 லட்சத்திற்கும்‌ அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ பல்வேறு வகையான ஆசிரியர்களும்‌ மாதந்தோறும்‌ பெறவேண்டிய அடிப்படை, திட்டம்‌ சார்ந்த, தன் விருப்பப்‌ பயிற்சிகளுக்கென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால்‌ ஆசிரியர்கள்‌ தங்களது பயிற்சி குறித்து, தெளிவாகத்‌ தெரிந்து அதன்‌ பயனை முழுமையாகப் பெறும்‌ வாய்ப்பு ஏற்படும்‌.


இதுகுறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இணைய வழியில்‌ பணிப்பலன்களைப்‌ பெறுவதற்கான செயலி மற்றும் ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி ஆகிய இரண்டு திட்டங்களும் இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Comments

  1. மொதல்ல போஸ்டிங் போடுங்க அன்பில்

    ReplyDelete
  2. School reopen pannrathukula tet pass pannavangalku posting poda vaippu iruka mam pls reply

    ReplyDelete
  3. pg trb evlo postings increase aga chance iruku mam.ethavathu thagaval threumanka mam.

    ReplyDelete
  4. Tntet posting no. Pg posting late aagum. Increase ஆகாது

    ReplyDelete
  5. Posting இருக்கு fill panna மாட்டாங்க.... Tntet.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...