Skip to main content

SUNDAY'S THOUGHT..

 ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்...!!அதிகாலையில் எழுந்தவுடன்

"சூரிய உதயத்தைப் பார்ப்பது" ,
அவனது வழக்கம்....!!

ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார்.

அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பிய போது, தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது....!!

கோபம் கொண்ட அரசர்,
பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வர செய்து, தூக்கிலிடும்படி கட்டளை பிறப்பித்தார்.....!!

பிச்சைகாரன் சிறிதும் கலங்கவில்லை.....!!
கல கலவென சிரிக்கத் தொடங்கினான்....!!
அரசருக்கு அவன் சிரிப்பதை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது ...!!

மற்றவர்களுக்கு திகைப்பு...!!

அரசன் பிச்சைக்காரனை      "ஏன் சிரிக்கிறாய்?" என்று கோபமாக கேட்க,
பிச்சைக்காரன்,
     "என் முகத்தில் நீங்கள் விழித்தால் ,
   உங்களுக்கு சிறு காயம் மட்டுமே  அரசே....!!
  ஆனால்,
     உங்கள் முகத்தில் நான் விழித்ததால்,......
   " என் உயிரே போக போகிறதே" ,...!!
இப்போது மக்களுக்கு மிக நன்றாக புரிந்து விடும்....

  மன்னன் முகத்தில் எவன் விழித்தாலும் மரணம் நிச்சயம் என்று...!!

  அரசனின் முகம் அவ்வளவு "ராசியான முகம்" ,
          என நாடே சிரிக்கும் அரசே...என்றான்..!!
   அதை எண்ணி சிரித்தேன்" என்றான்,
அரசனுக்கு இப்போது தான் தான் செய்ய இருந்த தவறு உறைத்தது...!!
தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான்.
தண்டனை ரத்து செய்யப் பட்டது....!!
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்....!!

அது இல்லையென்றால்,
    சமயத்தில் தன் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.
 எதை இழந்தாலும்,
தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்....!!

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. PS shanmugam 9398504751.

    ReplyDelete
  3. Tet apply date extend panuvangala sis

    ReplyDelete
  4. Ano mam tet ne syllabus grade 1 to 5 மட்டும் கொடுத்து இருக்காங்க 1to 5 alone படித்தால் போதுமா

    ReplyDelete
    Replies
    1. Avanga apdi dhan soluvanga apuram difficulty level nu 8th varaikkum questions kepanga, so 8th vara padichukradhu naladhu..

      Delete
  5. Psychology any changes in paper-1

    ReplyDelete
  6. Some changes have in paper2

    ReplyDelete
  7. சூப்பர் ஸ்டோரி மேடம்

    ReplyDelete
  8. Mam BTpost approximately evlo irukkum?

    ReplyDelete
  9. Replies
    1. Thanks for your reply mam, somebody told vacancy is too low, that's why I'm asking...

      Delete
    2. What we are expecting is also low only, lets hope for the best..

      Delete
    3. Thanks for your reply mam

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here