Skip to main content

இன்றைய சிந்தனை..

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

அவர்களின்,

*தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...*

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

*வானொலி:*
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

*நாகேஷ்:*
நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது,
சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,
குறுக்குப் பலகைகள் போட்டு,
அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,
கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,
அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,
கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து,

*கிரஹப் பிரவேசத்தன்று*
கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,
அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,
எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,
வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு *கிரஹகப் பிரவேசம்* நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.
ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.
பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

*நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....*

*Always think positive

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. ❗ஒற்றை கோரிக்கை❗

    ♦️♦️ மறுநியமன தேர்வு அரசாணை 149 ஐ ரத்து செய்தல் மட்டுமே.. ♦️♦️

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்....

    மாண்புமிகு முதல்வர் அவர்கள் நமக்கு அளித்த உறுதியின் படி வரும் 7 ம் தேதி தொடங்கும் சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தில் நமக்கான அறிவிப்பை முதல்வர் அவர்கள் நிச்சயம் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்

    கடந்த 10 மாதங்களை போல் இன்னும் நம்மை ஏமாற்றி தாமதப்படுத்தி...

    இந்த TRB அதிகாரிகள் போட்டி தேர்வுக்கான அட்டவணை வெளியிடுவார்கள் எனில் அடுத்த கட்ட போராட்டதிற்கான ஆயத்த பணிகள் இன்று முதல் மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் அந்த அந்த மாவட்டங்களில் முன்னெடுக்க துவங்கியுள்ளனர்.

    இனி போராட்டம் தேவைப்படின் நிச்சயம் ஒட்டு மொத்த தமிழகமே திரும்பி பார்க்கும் அளவில் நடத்த திட்டமிடப்பட்டு அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துள்ளது..

    எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பள்ளிகளில் பணிபுரியும் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் என அனைவரிடமும் இந்த தகவலை கொண்டு சேருங்கள்...

    அதிகமாக இதை பகிருங்கள் .....

    அடுத்த கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்..

    இன்னும் இரண்டு நாட்களில் புதிய ஆசிரியர்கள் நமது குழுவில் இணைய தொடர்பு எண் பொது வெளியில் பதிவிடப்படும்

    நன்றி.

    ReplyDelete
  3. நீங்க தேவ இல்லாத வேலை பாக்குறீங்க

    ReplyDelete
  4. ஆள் பிடிக்கும் கூட்டத்தை நம்பி
    மானம் கெட்டு ,
    பணம் இழந்து,
    பெயர் கெட்டு,
    நடு ரோட்டில் , நடுத்தெருவில் நின்று , கைது செய்யப்பட்டு உறவினர், நண்பர்கள் , மேலும் யாரென்று தெரியாதவர்களின் வசை மொழிகளையும் வாங்கி துன்பப்படும் ஆசிரியரை மீண்டும் வா !
    என்று அழைத்தால்!
    அதையும் நம்பி சென்றால் அவர்களை என்னவென்று கூறுவது ?

    ReplyDelete
    Replies
    1. விருப்பம் இல்லாதவர்களை ஏன் இவ்வாறு கூவி கூவி அழைக்கணும்

      Delete
    2. ஆள் சேக்கதான்

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...