Skip to main content

SUNDAY'S THOUGHT..

தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர்.


ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார். மன்னன் சிரித்தபடியே போய்விட்டான்.


மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என சொல்லி விட்டு சென்றார்.


மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பி விடுவான்.

இதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டினர். “மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்”என்றனர்.


ஒருநாள், பார்வையற்ற கணவரை அழைத்து வந்த ஒரு பெண், அரசனின் குடில் முன்பு நின்று பிச்சை கேட்டாள். அந்த கணவன்
“நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?” எனக் கேட்டார்.

“அரசன் வீட்டு முன்பு” என்றாள் அந்தப் பெண். “ஓ! தானம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே அவன் வீட்டு முன்பா?” என்றார் அந்த பார்வையற்றவர்.

அந்தப்பெண் அவரது வாயை பொத்தினாள்.
“அன்பரே! என் கற்பின் சக்தியால் நான் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரை சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்ணுவதற்காக தயாரானது. அவ்விஷயம் இவனுக்குத் தெரிய வரவே, இவன் கன்னியருக்கு தர்மம் செய்து, நற்போதனைகளை செய்தான்.

ஆனால் இவனை பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டு கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. இவனைப் பற்றி தவறுதலாக பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடுத்த பிறவியிலும் பார்வையற்றே பிறப்பீர்கள்” என்றாள்.

தவறு செய்தவர்கள் திருந்தும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அப்படி செய்தால் அவன் செய்த பாவங்களை பங்கு போட்டு கொள்ளும் நிலைமை ஏற்படும்.

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. செம்ம செம்ம ஸ்டோரி

    ReplyDelete
  3. இந்த அரசை விட்டால் நமக்கு பணி வாய்ப்பு தரும் அரசு‌ வேறு‌ இல்லை இல்லை ஆகையால் .கூடுமானவரை‌ வழக்கை கடைசி ஆயுதமாக பயன்படுத்தலாம். அதற்குள் முதல்வரிடம் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி நிலைமையை எடுத்துசொல்லுங்கள். இல்லையேல் மிகப்பெரிய போராட்டம் சென்னையில் முன்னெடுப்போம். தலைமை முடிவெடுங்கள். இதற்குள் அரசாணை வந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்குத் தான் வழக்குசம்பந்தமாக முன்னெடுக்கிறீர்கள் என்பதனை யாம் அறிவோம். ஆனாலும் வரும் சட்டசபை கூட்டத்திலோ அல்லது 10 நாட்களுக்குள்ளாகவோ நமக்கு சாதகமான தீர்ப்பு வரலாம். எனவும் தோன்றுகிறது இவ்வாறிருக்கும்போது நாம் வழக்கு என போனால் அரசின் கோபத்திற்கு ஆளாகி நம்மை அம்போ எனவிட்டுவிட்டு இனிமேல் தகுதித்தேர்வு எழுதுபவர்களுக்கு பணிநியமனத்தேர்வை வைத்து இருக்கும் இடத்தை‌நிரப்பிவிட்டால் என்ன செய்வது என்பதே அனைவரின் அச்சம். இதற்கிடையில் நமக்கான காலம் ஓடிவிடும் ஆகையால் கூடுமானவரை அரசின் கருணை பார்வை எனும் நோக்கிலும் தயவுடன் என வேண்டுகோள் விடுத்தும் விதமாகவும் நம் கோரிக்கை இருந்தால் நல்லது என எனக்குள் தோன்றும் கருத்து.இந்த அரசு சொன்ன தேர்தல் வாக்குறுதி 177 நமக்கான ஆயுதம் ஏனெனில் இதன்படி தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அரசு உறுதி தந்துள்ளது. அவர்களுக்கு ஓர் நீதி நமக்கு ஓர் நீதியா? என்பதே நாம் தொடுக்கும் வினா? ஆகையால் யோசியுங்கள்! யோசியுங்கள்! குறுகிய காலமே உள்ளது .நன்றி.

    ReplyDelete
  4. இவ்ளோ நாள் சிலபஸ் வரலன்னு சொன்னிங்க இப்ப சிலபஸ் வந்தும் போராட்டம் எல்லாம் தேவ இல்லாதது

    ReplyDelete
  5. Sister naan already paper 1 and paper 2 pass ippo tet 2022 apply pannlama illaa trt kku focus pannava sister

    ReplyDelete
    Replies
    1. Venkat brother..

      Tet eludhi oru use yum illa.. Neenga TRT focus pannunga, topic wise padikka start panunga..

      2012 tet nyabagam iruka, andha madhiri dhan irukum first TRT yum kuda, first come first served..

      Delete
  6. பகுதி நேர ஆசிரியர்கள் எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் என்று அரசாணை வந்துள்ளது...

    ReplyDelete
  7. Mam paper 1 trt syllabus enna mam

    ReplyDelete
    Replies
    1. School level portions, subject wise topics iruku, go through the gazette..

      Delete
  8. Good evening Mam.BscBed paper1 pass.If I clear trt for paper 1 secondary grade teacheraga appointment seivaargala? Pls reply me Mam

    ReplyDelete
    Replies
    1. Yes, why not.. Anyone clearing TRT will get the posting depending upon availability of posting in respective subjects..

      Delete
  9. Sgt subject wise wiseagava? I can't understand Mam please explain

    ReplyDelete
    Replies
    1. Sir, yes you have to study all the subjects of school level, I hve given clear voice note message in a post also. Do refer that..

      Delete
  10. And one more doubt. Dted plus degree clearing paper 2 ,trt for paper 2 eligible for bt post?

    ReplyDelete
    Replies
    1. That we will know after notification from TRB..

      Delete
  11. நண்பர்களே!
    தகுதித்தேர்வு TNTET
    PAPER 1 க்கு

    D.T ED or (B.ED) முடித்தவர்கள் எழுதலாம் .

    PAPER 2 க்கு

    B.ED or (D TED+DEGREE)
    முடித்தவர்கள் எழுதலாம்.

    ஆனால்

    TRT
    நியமனத்தேர்வு பொறுத்தவரையில்

    கல்வித்தகுதி

    (தொடர்புடைய துறைகளின் பணிவிதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றலாம்)
    என்று TRT SYLLABUS இல் கொடுக்கப்பட்டுள்ளது.


    ReplyDelete
  12. தகுதித்தேர்வு எழுதும் தகுதி உள்ளபோது ஏன் TRT எழுதி பணி வாங்க வழி இல்லையா?

    என்ற கேள்வி வரும் .

    தகுதித்தேர்வு வேறு !

    பணிநியமனம் என்பது வேறு!

    தகுதி இன்மை காரணங்கள்:



    10 STD --> +2 --> DEGREE -->PG

    Or

    10 STD -->+2---->D.T.ED

    இந்த மாதிரி முறைப்படி படித்திருந்தால் மட்டுமே தகுதி.

    *NOTIFICATION க்கு முன்பே எந்த DEGERE OR D. T .ED யும் COMPLETE செய்த தேதி இருக்க வேண்டும்.


    *DEGREE ஒரு மேஜர் B.ED ஒரு மேஜர் படித்தது செல்லாது.

    *இரண்டு வேறு படிப்புகளை ஒரே வருடத்தில் படித்ததும் செல்லாது.

    நண்பர்களே அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.





    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here