Skip to main content

நம்மை_நாமே_செதுக்குவோமா..

*அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.* 


*ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி அவருக்கு. அதன்பின் அந்தக் கடைக் காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.*


 *'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.*

                                          *பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்தச் சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.*


*அந்தச் சிலை கடைத்தெருவில் விலை க்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.* 


*முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.*

                                    

*அந்தச் சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலை க்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.*


*அதற்குச் சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாச லில்தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங் களுக்குமுன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல்தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார்.* 


*தங்கள் பார்வையில் இது தடைக்கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளைப் பொதிந்து வைத்தி ருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.* 


*வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார் சிற்பி.*


*நம்மை நாமே செதுக்கிக்   கொண்டால் அற்புத மனிதராக மாறிவிடு வோம், அதற்கு நாம் செய்யவேண்டிது ஒன்றே உளியை கையில் எடுப்போம் வேண்டாத குணங்களை உளி கொண்டு அப்புறப்படு த்துவோம்.*


*நாமும் வாழ்வில் தேவையற்ற வார்த்தைகளை நீக்கினால் விலை மதிப்பற்ற மனிதராய் வாழ்ந்து காண்பிக்கலாம்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*    


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* 


*#வாழ்த்துக்கள்.*

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. அட்மின் மேடம் இந்த அமைச்சர் என்ன தான் சொல்ல வராரு?

    ReplyDelete
  3. தயவு செஞ்சு யாராவது சொல்லுங்க

    ReplyDelete
  4. டிஆர்டி தான் வரப்போகுதுன்னு தெளிவா சொல்றாரு இதுல புரிய என்ன இருக்கு

    ReplyDelete
  5. அமைச்சருக்கும் இரு தேர்வு வைத்து தேர்ந்து எடுத்தால் சரியாக இருக்கும்

    ReplyDelete
  6. Mam,TETET PAPER -1 SYLLABUS.NOT HAVING IN THE TRB WEB.

    ReplyDelete
  7. புதிய ஆசிரியர் நியமனம் இல்லை, சமோசா விக்க போங்க

    ReplyDelete
  8. புதிய ஆசிரியர் நியமனம் கண்டிப்பாக உண்டு, சுமார் 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்... கல்வி மானிய கோரிக்கை யில் கட்டாயம் அறிவிப்பு வெளிவரும்!
    உங்கள் கடமை கடினமாக இழைத்து படித்து தேர்ச்சி பெற்று ஆசிரியராக வாருங்கள்

    ReplyDelete
  9. கேரளா, மேற்கு வங்கம், மராட்டியம் மாநில கல்வித்துறையை விட தமிழக கல்விதுறை சிறந்ததா என்ன, அத்தனையும் ஏமாற்று வேலை, மோடியை விட கேவலமான அரசியல் செய்பவர்கள் திராவிட ஆட்சியாளர்கள், ஏழைகள் எத்தனை முறை தேர்வு எழுதுவர்கள், குடும்பம், பிள்ளைகள், உழைப்பு என்று சென்று விட்டார்கள், ஏழைகளால் வையதாகி குடும்பத்தை கவனித்து கொண்டு எப்படி வெற்றி பெற முடியும், பணம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற வைக்கும் சூழ்ச்சி தான் போட்டி தேர்வு, tnpsc தேர்வில் 90 எடுத்தால் வெற்றி என்று சொல்கிறீர்கள், ஆனால் யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பணி போடுகிறீர்கள், TET யும் இந்த method ல இனைக்கலாம், ஆனால் கல்வித்துறை அதிகாரிகள், கல்வி அமைச்சர் go 149 ல் உறுதியாக உள்ளனர், எங்களை தோல்வி உற்றவர்கள் என்று அப்போதே அறிவித்து இருந்தால் நாங்கள் எதாவது ஒரு தனியார் கம்பெனியில் சேர்ந்து செட்டில் ஆகி இருப்போம், அந்த method எந்த method னு எங்களை காக்க வைத்து ஏமாற்றி விட்டீர்கள், வயதான காலத்தில் யாரு எங்களை பணியில் சேர்த்துகொள்வார்கள்,23 வயதுக்கும் 47 வயதுக்கும் போட்டி வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள், இந்த சிந்தனை கூட இல்லாத குடிகார கல்வித்துறை

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி

      Delete
    2. வலியின் உச்சம்

      Delete
    3. அருமை அருமை

      Delete
  10. ஆசிரியர்கள் வேலை பற்றி எ
    ஒரு வார்த்தை கூட பேசவில்லை... இதான் விடியல் ஆட்சி யா..‌இல்ல ஆசிரியர்களுக்கு விடியாத ஆட்சி யா

    ReplyDelete
  11. இதுல மோடி என்ன செய்வாரு. நாடு நல்லா இருக்கு. ேவியா

    ReplyDelete
  12. permanent post
    pgt chemistry
    tgt chemistry
    at sainik school amaravadinagar..
    100% pure recruitment...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...