Skip to main content

முன் வைத்த காலை..!!

 அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ். பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை. இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத் தான் உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம், ”இப்போது திரும்பினால், பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம். கடலில் வீணாக உயிர் விட வேண்டாம்,” என்றனர்.


ஆனால், கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை. தமது பாதை முன்னோக்கியே தவிர பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். ஆனால் கொலம்பஸின் பேச்சைக் கேட்டால் கடலில் தான் எல்லோருக்கும் சமாதி என்று கூறி மாலுமிகள் கொலம்பசுக்கு எதிராகத் திரும்பினர். கப்பலின் பொறுப்பை அவர்கள் ஏற்கத் தீர்மானம் செய்து விட்டார்கள். அப்போது கொலம்பஸ் ஒரு முக்கியமான முடிவெடுத்தார். மனதுக்குள் சிறு கணக்கு ஒன்று போட்டார்.


அவர் மாலுமிகளிடம் சொன்னார், ”நண்பர்களே, உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. இருபது பேருக்கு இருபது நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது. ஒருவர் குறைந்தால் கூடுதலாக ஒரு நாளைக்கு உணவு இருக்கும். எனவே இன்னும் ஒரு நாள் கப்பலை முன்னோக்கி செலுத்துங்கள். அதற்குள் கரை தென்படா விட்டால் என்னைக் கொன்று விட்டுத் திரும்புங்கள். அப்போது உங்களுக்கு ஊர் போய் சேரும் வரை உணவு சரியாக இருக்கும்,” என்றார்.


கொலம்பஸ் இவ்வாறு சொன்னதும் மற்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. ஒன்றும் சொல்லாது கப்பலை முன்னோக்கி செலுத்தினர். அடுத்த சில மணி நேரங்களிலேய கரை தென்பட்டதும் எல்லோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.


இன்றும் கொலம்பஸின் பெயர் உலகில் நிலைத்திருப்பதற்கு, கொலம்பஸ் சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவு தான் காரணம்.

Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Nice mam. Trt approximately syllabus enna mam. Trt la tamil irukumama? I am English major

    ReplyDelete
    Replies
    1. Kalanithi friend..

      TRT syllabus mostly ug based ah dhan irukum.. Ella major kum irukkum..

      Delete
  3. *🅱️🅱️🔴🔴🅱️🅱️ ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்(2013,2017,2019) மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்துவதை ரத்து செய்யக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு*


    *🟢🌹2013 முதல் 2019 வரை அனைத்து சங்கம் மற்றும் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்🌹*

    *🟢போராட்டம் நிகழ்வு:*
    2013 முதல் 2019 வரை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

    *🟢போராட்டம் நடைபெறும் இடம்:*
    ஆசிரியர் தேர்வு வாரியம்,DPI வளாகம்,நுங்கம்பாக்கம், சென்னை.

    *🟢போராட்டம் நடைபெறும் தேதி:*
    28.02.2022(திங்கட்கிழமை).

    *🟢போராட்டம் ஆரம்பம் ஆகும் நேரம்:*
    காலை 8.30 மணி

    *🌷இப்படிக்கு🌷*
    *அனைத்து சங்க தலைமை நிர்வாகிகள்*

    ReplyDelete
  4. Trt exam syllabus eppo vara chance irukku mam

    ReplyDelete
  5. 💪💪👍👍💐💐👍👍💪💪
    என் இனமான அறிவார்ந்த அன்பான ஆசிரியர் சொந்தங்களே!! உங்கள் அனைவருக்கும் பாசார் மு.புகழேந்தியின் நெஞ்சம் நிறைந்த வணக்கம் 🙏🙏

    இதோ போராட்ட களம் தயாராகி விட்டது

    வாருங்கள்

    உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறேன்
    வாருங்கள்

    💪💪 போராட்டமே
    வாழ்க்கை 💪💪

    * தேவையை உணராமல் போராட முடியாது

    * போராடாத நீ
    வாழ முடியாது!!

    * போராடு ......
    தோல்விகள் தோற்கும் வரை போராடு!!!

    * துவண்டு விடாமல்
    போராடு....

    * திட்டமிட்டு போராடு....

    * தீர்க்கமாக போராடு......

    * அறவழியில் போராடு ....

    அதற்கு
    உன்னை அர்ப்பணித்து போராடு!!!

    * எதிரியின் ஆயுதம்
    கண்டு போராடு....

    அதைவிட
    பன்மடங்கு ஆயுதம் கையில் கொண்டு போராடு!!

    * போராட்டம் வெல்லும் வரை போராடு....

    காலம் சொல்லும் வரை போராடு!!

    * சாதி, மத, இனம் களைந்து போராடு....

    சரித்திரம் - உன்
    சாதனை சொல்லும் வரை போராடு!!

    * விருப்பம் கொண்டு போராடு.....

    விடியல் வரும் வரை போராடு!!

    * தளராமல் நீ போராடு.....

    தடைகளை தகர்த்தெறிய போராடு!!!

    * வீரநடை போட்டு
    வெற்றி கனி
    கிட்டும் வரை போராடு!!

    * வேட்கை அடைய போராடு.....

    வேங்கை போல் போராடு!!

    * வேண்டியதை அடைய போராடு....

    வெளியுலகம் அறியும் வரை போராடு!!

    * நம்பிக்கையுடன்
    போராடு....

    தன்னம்பிக்கையுடன் போராடு!!!

    * வீறு கொண்டு போராடு.....

    விடாமுயற்சியுடன் போராடு!!!

    * மனம் தளராமல் போராடு.....

    மறுநியமனததேர்வை ரத்து செய்யும் வரை போராடு!!

    * ஏதோ போராடினோம் என்றில்லாமல்....

    எழுச்சியோடு
    போராடு!!

    * உறங்கி கிடந்தால்
    சிலந்தியும் உன்னை
    சிறை பிடிக்கும்!!

    * எழுந்து நடந்தால்
    இமயமும் உனக்கு
    வழி கொடுக்கும்!!

    என் வாழ்க்கை சிதைந்தாலும் பரவாயில்லை

    என் ஆசிரியர் சமூகமே

    என் ஆசிரியர்
    இனமே

    உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும்!!

    போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு போராடிய 72 மணி நேரம் மறக்க இயலாது

    நடந்து நடந்து
    என்
    கால்கள் தளர்ந்தது
    என்
    உடலும் தளர்ந்தது!!

    ஆனால்
    மனம் மட்டும் தளரவில்லை!!

    என் கூக்குரல் தங்கள் செவிகளைத் துளைக்கவில்லையா??

    என் ஏக்கம் தங்களுக்கு
    தெரியவில்லையா??

    ஏன் இந்த ஓரவஞ்சனை???

    ஏன் இந்த செயலை முன்னெடுத்தேனோ
    என்று எண்ண வைக்காதீர்கள்...

    நான் முன் வைத்த காலை
    பின் வைக்க மாட்டேன்

    என் கழுத்திற்கே கத்தி வந்தாலும் கூட
    ஒருபோதும் இந்த
    பாசார் மு.புகழேந்தி
    விலை போக மாட்டான்!!

    டி.ஆர்.பி. நம்மை
    உள்ளே விட மறுத்து

    தேர்ச்சி பெற்றும்
    பலன் இல்லாமல் போனதே...
    அய்யோகோ !

    தடைகள் தாண்டி போராட
    ஏற்ற உடைகள் எடுத்து வாருங்கள்

    ஆயிரம் தோல்விகள் கிட்டினாலும்
    ஆங்கொரு வெற்றிக்கு
    அனுபவமே ஆசான்!!

    ஆசான்களாகிய நாம் அனைவரும்

    ஒன்றுபட்டு போராடுவோம்!!

    ஒற்றுமையுடன் போராடுவோம்!!

    நம் குரல் ஓங்கி ஒலிக்கும்
    வரை போராடுவோம்!!

    கடந்து வந்த பாதைகள்
    நம்மை கலங்க வைத்தாலும்.....

    வரவிருக்கும் பாதைகள்
    நம்மை வாழ வைக்கட்டும்!!

    * காலம் கனிந்து விட்டது!!

    களம் தயாராகி விட்டது!!

    டி.ஆர்.பி. முடிந்து விட்டது

    தேர்தலும்
    முடிந்து விட்டது

    கூடவே
    தேர்தல் முடிவுகளும்
    வந்து விட்டது.

    அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக
    இருக்கும் போது
    நாம் மட்டும் ஏன்
    அழுதுகொண்டும்
    புலம்பிகொண்டும்
    இருக்க வேண்டும்.

    ஆகவே

    களத்தை நோக்கி வாருங்கள்

    சென்னையை நோக்கி
    வாருங்கள்

    டி.பி.ஐ. நோக்கி
    வாருங்கள்

    முயற்சி நமதானால்
    வெற்றியும் நமதே!!

    * ஆயிரம் பிரிவுகள்
    நம்மில் இருந்தாலும்....

    ஆசிரியராய் இணைந்து
    நிற்போம்!!!

    அழைக்கிறேன்...
    ஆசிரியர்
    பாசார் மு.புகழேந்தி

    💪💪புரட்சி ஓங்குக💪💪

    ReplyDelete
    Replies
    1. காசினி மேடம் இது எல்லாருக்குமா ....இல்லை 2013 க்கு preference கேட்டு போராட்டமா???? தெளிவு படுத்துங்கள்

      Delete
    2. No,all passed candidate (82+)pls must come and convey to all

      Delete
  6. Tet marks 90% + b.ed employment seniority 10% padi podunga pa

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...