அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் கடைத்தெருவில் நடந்து போய் கொண்டிருந்தார்.._
_அப்பொழுது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.._
_ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி,_
_அதன் பின் அந்தக் கடைக்காரரிடம்,_ *'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?'* என்று கேட்டார்..
*'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள்.. இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது.. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்'* என்றார் கடைக்காரர்..
_பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,_
_அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.._
_அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது.._
_போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர்.._
*_அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.._*
_முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.._
_அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர்,_ *'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'* என்று கேட்டார்..
அதற்கு சிற்பி, *'வேறு எங்கிருந்தும் இல்லை. .தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்..*
*என்னை தங்களுக்கு நினைவில்லையா? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்..*
கடைக்காரர் வியந்தார்..
*_ஆம்.. தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது.. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.._*
*வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன்.. உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!'* என்றார்..
*ஆம்..* _*தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய்,*_
_*ஒவ்வொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்..*_

Wishing everyone a blessed day ahead..
ReplyDeleteHi madam. Pg trb exam date pathi any news eruka madam
ReplyDeleteடெட்க்கு என்ன தான் முடிவு
ReplyDeleteTet ku no solution
DeleteBecause current government Assembly la Tet candidate pathi pesamattanga
Opposite party admk kandipa Tet posting patri suthama question panna mantanga because intha situation ku main reason avanga than
Bjb leader kitta poi ethanayo time request pannom but Tet Nala avangaluku politically no use so avanga kandukavea illa
Others DMK supporters including velmurugan kooda assembly la pedala
Pmk only report Mattum than assembly la pesamattanga
Kamal sir Tet patri pesuraru but avaruku members illa
So election vantha Mattum than Tet candidates patri pesuvanga
After election nammala suthama nenaika matranga
Tet Nala life ponathu than mitcham
Unknown sir politicians oda Tet Play ah apadiye sollitinga 100 percentage true sir
Deleteநம்மளோட வயித்தெரிச்சல் சும்மா விடாது
Deleteஉண்மை 😔
ReplyDelete