மன்னர் அசோகர் ஒரு முறை வேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிரில் ஞானத்துறவி ஒருவர் வந்து கொண்டிருந்தார்..
மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
துறவி ஒதுங்கி நின்றார்.
அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.
உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு,
இறங்கிச் சென்று துறவியின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்து வணங்கினார்..
அவரது சிரம் (தலை) துறவியின் காலில் பட்டது.
துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்..
இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர்
சங்கடப்பட்டார் *"ஒரு மன்னன் ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?'*
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது.
அரண்மனைக்கு சென்றதும்.. அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப்
பதிலளிக்காமல்,
_ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்_ *"ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,''* என்றார்.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.. _எனினும் அரச கட்டளையாயிற்றே!_ _அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.._
*ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை.*
*ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது.*
புலித் தலைக்கு அலைந்தனர்.
*அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.*
_அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்._
_மனிதத் தலைக்கு எங்கே போவது?_ _*கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்..*_
மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், *"இம்மூன்றையும் சந்தையில் விற்று வாருங்கள்.''* என்றார்.
_மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்._
*ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.*
_புலியின் தலையை வாங்க ஆளில்லை._ _பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்._
*_கடைசியில் ஒரு வேட்டைப் பிரியர் அதனை தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க வாங்கிக்கொண்டார்._*
_மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது._
*ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை..*
அரண்மனை திரும்பிய அமைச்சர் *ஆட்டுத் தலை உடனே விலை போனதையும்,* *_புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும்,_* *மனிதத் தலையை வாங்க ஆளில்லை..* என்பதையும் தெரிவித்தார்.
*"அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!''* என்றார் அசோகர்.
*இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.*
இப்போது அசோக மன்னர் கூறினார்...
*"பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசுகூடப் பெறாது.*
*_இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள்._*
*இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!*
_*செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.*_
*_ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்._*
*அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு?* *_சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி! '_*
என்றார்.
*தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..*
*பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.*
Wishing everyone a blessed morning..
ReplyDeleteGood morning ano sis ☺
ReplyDeleteGudmrng Revathi sis🙂
DeleteTetku postings poduvangala mam
ReplyDeleteEnaku therinju doubt dhan sir.. Transfer counseling mudiyanum apo dhan exact vacancies theriyum, innoru tet ku dhan ipo preference kudukranga..
Delete8 years nammala fulla emmathitanga innimelavathu oru solution sonnare nallakalam irrukum, manna ulliatchala pgku preper panna mudiyala
ReplyDeleteEnna panradhu sir, pass pannavangalukku vazhi sollama inoru tetku preparation poitu iruku..
DeleteTransfer counciling eppo mam
ReplyDeleteMohanapriya mam..
DeleteIpothaikku DEO counselling dhan solirkanga..
Tet ku epdi vaccancy kammi ya than irukkum nu soldringa mam
ReplyDelete2019 la pgtrb vachu potta piragum 2021 la 2000+ vaccancy irukku so per year ku 1000 vaccancy create airukku ok va
Apdi tet ku patha year ku 500 vaccancy vachalum 4000+ vaccancy irukkume minimum a pathalaum
So tet ku vaccancy I'lla nu soldrathu ellam verum rumours
Tet posting podathathukku only reason 2013 batch mattum than
So let's pray till get tet posting 👍
4000 apdingrathey kammi dhana, ipo brte ku 500 vacancies kitta poiruchu, so 2013la pota posting compare panna kammi dhana adhanala dhan sonen BT vacancies kammiya dhan irukumnu..
DeleteSuthama surplus nu sollama ivlo posting potale pothum la mam
DeleteAma but adhayum podamatrangale.. Idhu romba naala solapatta vacancies..
DeleteUNESCO tamilnadu la 16000+ vaccancy irukku nu solli irukkanga mam ath pthi neenga enna ninaikkuringa
ReplyDeleteUNESCO solratha ellam ivanga enga madhikka poranga..
Delete👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊
ReplyDeleteEnna ipdi anupi irukkinga👊👊👊👊
DeleteUNSECO arrikaipadiyavathu tetku postings poda chances iruka mam
ReplyDeleteAthaellam doubt dhan sir..
DeleteVacant niraiya iruku but student niraiya idai nitral agi irukanga so Tet post kanave intha academic
ReplyDeleteஒத்த ரோசா இப்படி செய்துட்டீயே?????
ReplyDelete