Skip to main content

அன்பளிப்பு..

                

“பளார் பளார் “என பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு !

அப்போது அவருக்கு வயது 11 ; 
அடித்தவர் அப்துல் கலாமின் அப்பாதான் !

அப்பா எதற்காக தன்னை அடிக்கிறார் எனப் புரியாமல் , 
அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம்.

அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் :

“எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது ;
 ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார். 

ஊரிலுள்ள ஒருவர் , ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார்.
நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். 
அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால், 
வந்த அந்த மனிதரிடம் நான் .. “அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள்.... நான் அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார்.

வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான்.
அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார்.

பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார்.

அதில் அவர் திருக்குரானை மேற்கோள் காட்டி , பதவியில் இருப்பவர்கள் , பரிசுப் பொருளாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது .
அது பாவம்.
பதவியில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பரிசு தருவது , 
வேறு எதையோ எதிர்பார்த்துத்தான் என்று எடுத்துச் சொன்னார்.”

கள்ளமில்லா மகனின் மனதில் பதியும்படி கலாமின் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் , 
அந்தச் சின்ன வயதில் சிறுவன் கலாமின் உள்ளத்தில் சிற்றுளியால் செதுக்கிய கல்வெட்டாக பதிந்து விட்டது.

சிறுவன் பெரியவன் ஆனான்.
இந்திய நாட்டின் ஜனாதிபதியும் ஆனார்.

பதவிக் காலம் முடிந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறும்போது , 
பலரது பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் அப்துல் கலாமின் காதுகளில் வந்து விழுந்தாலும் ,
சிறு வயதில் கலாமின் அப்பா சொன்ன சில வார்த்தைகள் மட்டுமே அந்த வேளையில் அவர் காதுகளில் தாரக மந்திரமாக தனித்து ஒலித்திருக்கும் .

அப்படி என்ன சொன்னார் கலாமின் தந்தை ?

“ இறைவன் ஒருவரை ஒரு பதவியில் நியமிக்கின்றார் என்றால் அவருக்கான அனைத்தையும் ஆண்டவன் கொடுத்து விடுகிறார் என்று அர்த்தம் ;  
அதையும் விட மேலாக மனிதன் வேறு ஏதாவது எடுத்தால் அது தவறான வழியில் வந்த ஆதாயம்.”

ஆம் !
அப்பா சொன்னது அப்துல் கலாமின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலிக்க , 
தான் வரும்போது கொண்டு வந்த இரண்டே இரண்டு சூட்கேஸ்களுடன் 
ஜனாதிபதி மாளிகையை விட்டு புறப்பட்டு விட்டார் கலாம்.
பதவியில் இருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட  பரிசுப் பொருட்கள் அத்தனையையும் , 
அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார்.

“ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.”


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Teacherku transfer councling vaippangala mam, intha weekla, school reopen pannrathanala

    ReplyDelete
    Replies
    1. Ipothaikku BRTE ku dhan nadakka poguthu adhuku apuram dhan start panuvanga..

      Delete
    2. Admin mam Education. Departmentil Estimate. Period என்றால் என்ன?

      Delete
  3. Mam BRTE posting epdi poduvanga mam

    ReplyDelete
    Replies
    1. BRTE எக்ஸாம் வைத்துதான் கடைசியாக 2010 ல் நிரப்பினார்கள்.... இனிமேல் அந்த பணி இடம் புதிதாக நிரப்பமாட்டார்கள்.... அது SS scheme

      Delete
    2. New appointment yen poda mattanga sir please reply me

      Delete
  4. Pg exam date change aga chance irukka?

    ReplyDelete
  5. பூஜ்யம் கலந்தாய்வு அப்படின்னா என்ன மேடம்

    ReplyDelete
  6. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  7. காலை வணக்கம். Admin mam. Very super. Msg . . I love puthagasalai daily thoughts..

    ReplyDelete
  8. பூஜ்யம் counselling na enna mam

    ReplyDelete
    Replies
    1. Brte இல் தமிழ்நாடு முழுதும் சுமார் 600பணியிடங்கள் இருந்தால் அத்தனை பணியிடங்களையும் காவிப்பணியிடங்களாக காண்பித்து அவற்றை Seniority அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் நிரப்புதல்.....
      இந்த பூஜ்யம் கலந்தாய்வு நடைமுறையை ஆசிரியர்களுக்கு கடைபிட்க்கமாட்டோம் என அனைத்துச்சங்க நநிர்வாகிகளும் ஆணையர் நந்தகுமாரைச் சந்தித்துக்கேட்ட போது உறுதியளித்துள்ளார்

      Delete
  9. Pooja counseling enbathu irukkum ella vacant yum kali Ena arivithu seniority padi pani niruvuthal and teachers oda wife oh husband oh health problem irunthal avangalukku priority koduppanga

    ReplyDelete
  10. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் வெளியிடலாம்

    ReplyDelete
    Replies
    1. விரைவில்? ????நீங்களுமா???????

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...