Skip to main content

முட்டாள்க் கூட்டம்..

 மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை.அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது.

அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது.

கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த தவளைகளில் ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது.

‘நான் வெகு நாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி’ எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன.
கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை
வந்தது பிடிக்கவில்லை.

‘இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு’ எனக் கவலைப்பட்டன.
புதிய விருந்தாளியை எப்படியும் துரத்தி விட முடிவு செய்தன.

நல்ல சமயம் பார்த்து கொண்டு இருந்தன.இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன.

அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித்தவளையிடம்,
நண்பனே!நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?’ எனக்கேட்டது.

‘நான் ஏரியில் தங்கி இருந்தேன்’ என்றது ஏரித்தவளை.
ஏரியா? அப்படியென்றால் என்ன?’ எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்று பல மடங்கு பெரிய நீர் நிலை.அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு’ என்றது ஏரித் தவளை.

‘இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?’ என்று கேட்டது கிணற்றுத் தவளை.

‘இந்தக் கிணற்றைவிட மிக,மிகப் பெரியது ஏரி’ என்றது ஏரித் தவளை.கிணற்றுத் தவளை ஏரித் தவளை சொல்வதை நம்பவில்லை.

‘நண்பா நீ பொய் சொல்லுகிறாய்.எங்களுக்கு நன்றாக தெரியும்.இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் வேறு எங்கும் இருக்க முடியாது’ என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து,

‘நீ     பொய்யன்,புரடன்,உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் எங்களுக்கு ஆபத்து’ என்று கூறி ஏரித் தவளையை எல்லா கிணற்று தவளைகளும் தாக்க முயன்றன.

"இந்த முட்டாள்களோடு இனியும் விவாதிப்பது புத்திசாலித்தனம் அல்ல" என்று நினைத்த ஏரித்தவளை உடனே கிணற்றை விட்டு வெளியேற நினைத்தது.

அப்போது,

கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கியபோது, அதனுள் சட்டென்று தாவிச்சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது.

தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

ஆம்,நண்பர்களே.,

*முட்டாள்களிடம் வாதாடுவதை விட,அவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கிச் செல்வதே சாலச் சிறந்தது..*


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. அல்லி தவளைக்கு செருப்படி 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    ReplyDelete
  3. எல்லாம் தெரிந்த ஏகம்பரம் போல பாவலா காட்டும் அல்லி அவர்களே உங்களுக்கு என்ன தெரியுமோ அதை சொல்லுங்கள் தவறில்லை ஆனால் உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்னு பீலா உடாத்திங்கோ இங்க அட்மின் வேற மாதிரி. ஜாக்கிரதை.

    ReplyDelete
  4. 11.10.2021 நிலவரப்படி நிரப்ப தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! BT vacancy...,........... Posting podunga pa sekiram.....

    ReplyDelete
    Replies
    1. Kandippa poduvanga
      Podalattium enna selection method nu mattum sollunga pa

      Delete
  5. சரியான பதிவு அட்மின் சகோதரி.

    ReplyDelete
  6. Hm. Pg pt கலந்தாய்வு நடத்த நெறிமுறை வெளியிட்டுள்ளார்கள்

    ReplyDelete
    Replies
    1. எந்த Website பார்க்கனும் Sir

      Delete
  7. Admin mam rajalingam tha pearl kandu pidichutinga polq

    ReplyDelete
    Replies
    1. Ama sir, theriyum rajalingam thavira vera yaar avlo kevalama behave pannuvanga..

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Gud afternoon admin mam,apply pandra date postpone aiduchu,so exam talli poguma mam,bcoz Oct last varai apply closed.remaining days la hall ticket centre possible aguma mam

    ReplyDelete
    Replies
    1. Gudnoon Abarna mam..

      Thalli pora madhiri irundha nethey adhayum solirkalame, 30th vara irukadhala konjam chances iruku, but wait panni dhan paakanum..

      Delete
  10. Admin mam, Sgt postukku aga limit and niyamana thervu confirma mam?

    ReplyDelete
    Replies
    1. Geetha mam..

      Sgt and BT renduthukkume tet porutha varaikkum ipo vara TRT GO dhan iruku..

      Age limit GO padi corona pandemic irukadhala two years relaxation kudukalam mathapadi ellam age relax pannamatanga..

      Delete
  11. Trb special teachers list today published

    ReplyDelete
  12. Tet ku mattum posting podavea. Matenguranga mam. Atleast TRT nu solli GO vanthu syllabus vitta athukachum pidipom

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...