Skip to main content

ஆசிரியர் பணி வயது வரம்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

 


தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான வயது வரம்பினை உயர்த்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


வயது வரம்பு:


தமிழகத்தில் 1990 வரை படிப்பு, பணிமுன் அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்ட வயது மூப்பு சான்றிதழ் அடிப்படையில் அரசுப்பணிகளில் தகுதியானோர் நியமனம் செய்யப்பட்டனர். ஆசிரியர் பணிகளுக்கும் அவ்வாறே தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு பின் வயது வரம்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். 2012 முதல் எழுத்து தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது. இத்தகைய பணி நியமன முறையில் 57 வயது நிரம்பியவர்களும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


அதன் பின்னர் கடந்த 31.01.2020 அன்று ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு வழங்கி 45 வயதாகவும் நிர்ணயம் செய்து பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரி அவர்களால் அரசாணை வெளியிடப்பட்டது. இவ்வாறு வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டதால் 40 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர் பணியை கனவாக நினைத்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அமைந்தது. இதனால் அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை வல்லத்திரக் கோட்டையைச் சேர்ந்த எஸ்.தவமணி மற்றும் தேனி கீழவடகரையைச் சேர்ந்த எம்.பால முருகன், ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.


 மனுவில் தங்களுக்கு 48, 49 வயது நிரம்பியதால் எங்களால் ஆசிரியர் தேர்வு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு பாலிடெக்னிக், கலைக்கல்லூரி ஆசிரியர்கள் தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 57 ஆக இருக்கும் போது, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு அதிகபட்ச வயதாக 45 நிர்ணயம் செய்திருப்பது சட்டவிரோதம். ஆகவே இத்தகைய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அவர்கள் விசாரணைக்குப் பின்னர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


Comments

  1. 2017 eluthuna Sewing results vanthuduchu friends apdiye tet 17 yaum posting poduvanga nu nambuvom

    Government ninaithal ellam mudium

    ReplyDelete
  2. Amam ivanungalukku politician than mukkiyam Namma satharana manithan athan Namma case potta thallupadi pannuvanga but evana politician death ana Mattum ore nal la visaranai panni theerpu solluvanga sattam arasiyal vathikku oru mathiriyum pamara jenangalukku oru mariyum seiyal padukirathu .Vara kovathukku tet pass Panna ellorum oru katchi arampithal enna friends

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. டெட்லயும் ஏகப்பட்ட குரூப் இருக்காங்க சார் 😁

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...