Skip to main content

TODAY'S THOUGHT..

 


அமிதாப் பச்சன் சொன்னது...

எனது வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.

எனக்கு அருகில் இருந்த பயணி,
ஒரு சாதாரண சட்டை,பேண்ட்
அணிந்து அமர்ந்திருந்தார். 

வயதான மனிதர்,
நடுத்தர வர்க்கம்,
நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார்.

நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.

என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர்.

ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை.
என்னை கண்டு கொள்ளவும் இல்லை.

ஒருவேளை, அவர்  நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால்,
என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன்.

தேநீர் வழங்கப்பட்ட போது, ​​அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார்.

என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா?

அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா?

என்னால் பொருத்து கொள்ள முடியாமல்,
அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன்.

அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார்.

நாங்கள் பேச ஆரம்பித்தோம்.
சமூகம்,
பொருளாதாரம்,
அரசியல்,
என்று பல விஷயங்களை பற்றி பேசினோம்.

அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.

சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன்.

நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன்.

ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.

நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

அப்படியா? ரொம்ப நல்லது.
நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.

அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.

அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,

உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.
நல்லது,
என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.

அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,
உங்களை சந்தித்த இந்த நாள்,
நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி:

என் பெயர்: JRD டாட்டா.
மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன். 

நான் விக்கித்து நின்று விட்டேன்.

அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவை பற்றி.

பேரையும், புகழையும் வைத்து,
நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், நம்மை விட வசதியிலும்,
அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.

நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது.

வாழ்க்கையில் பல கால கட்டங்களில்,
அறிவு, பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது.

பணிவும் நல்ல நடத்தையும்,
எல்லா இடத்திலும் வென்றுள்ளது.

அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்..

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Mam nammaluku ethavathu oru solution soluvangala entrance ethir parpil pg ku prepare panna mudiyala, manasu kastama iruku tetku therve illaya mam

    ReplyDelete
    Replies
    1. Ipodhaikku pg ku concentrate panni padinga, adhan nalaldhu.. Age issue la vaaipu izhandhavanga neriya per, so unga chance ah miss pannidathinga..

      Delete
  3. 2009 , 2010 ல சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிக்காக 5000 பேர் காத்திருக்காங்ளாம்... அவங்களுக்கு டெட் இல்லாம போஸ்டிங் போடனும்னு சட்ட சபைல நேற்று 2 MLA கள் குரல் கொடுத்து இருக்கிறார்கள்...

    ஆனா டெட் தேர்ச்சி பெற்ற நம்ம நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது..

    சசி அவர்கள் சொல்வது உண்மையே

    ஒரே மனபோராட்டமா இருக்கு

    முடியல...

    அடேய் TRB எதாவது ஒரு முடிவுக்கு வாங்கடா...

    ReplyDelete
    Replies
    1. Nammala Kollama Vida
      Mattanunga

      Delete
    2. Adhu kalaingnar period la nadanthuchu adhan apdi solranga..

      Delete
  4. Pg online application link kuduthuttanga

    ReplyDelete
  5. Age relaxation is also applicable for pgtrb please explain madam

    ReplyDelete
  6. Exam date change aga chance irukka due to corona issue

    ReplyDelete
  7. Admin mam
    one doubt.pg trb ku apply pana poren,but enoda community certificate la date 12|5/2011 poturuku,ithu valid aguma friends,plz anyone reply me

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. PG TRB Online application process started now.

      Delete
    3. Qualification certificates ku dhan adhu porundhum..

      Delete
  8. Admin mam,community certificate la 12|5|2011 potutu ku.10 years than validity soldranga.antha certificate vatchu ipo pg ku apply panalama,problem varatha mam

    ReplyDelete
    Replies
    1. Validity issue irundha, renew or new ah eduthutu apply pannunga..

      Delete
  9. Mam, good night ,I am watching 5 year follow you are blogspot verynice . I am pg geography studied .but practical one paper fail corona last one and half year not contact tamil university.i am eligible for trb exam . please explain mam.thanks

    ReplyDelete
    Replies
    1. Unknown friend..

      Thanks for your overwhelming support, keep in touch..

      With regards to PGTRB, all qualifications should have been completed before applying, so better approach your university, get a statement abt ur practicals then go ahead with applying..

      All the best..

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here