Skip to main content

பள்ளிகள் திறப்பு பற்றி முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


பள்ளிகள் திறப்பு விஷயத்தில் பெற்றோர் இரட்டை மனநிலையில் இருக்கிறார்கள் என்றும், அதுபற்றிய இறுதி முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 


ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி சென்னையில் தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற 2021-22-ம் ஆண்டு திட்டத்தின் தொடக்கவிழா, ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.


இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன், தலைவர் மதுரா சுவாமிநாதன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.எம்.முரளி, இயக்குனர் (உயிர்தொழில்நுட்பம்) ஜி.என்.ஹரிஹரன், முதன்மை விஞ்ஞானி நா.பரசுராமன், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) பாரதிதாசன் உள்பட பலர் பங்கேற்றனர். 


 தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியலை பற்றிய ஆர்வத்தையும், அவர்களுக்கான அறிவியல் கருத்துகளை புரிந்து கொள்ளுதலையும் பலப்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. முதல்கட்டமாக சென்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. கற்றல் இழப்பு அபாயம் நிகழ்ச்சி முடிந்தபின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- 


 ஒவ்வொரு மாநிலத்திலும் நோய்த் தொற்று, பெற்றோர், மாணவர்களின் மனநிலை ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. எல்லோரும் ஒன்று சேர்ந்து பள்ளிகளை திறக்கலாம் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனா தொற்று அபாயத்தைவிட, கற்றல் இழப்பு அபாயம் அதிகளவில் இருக்கிறது. அந்தவகையில் நம்முடைய மாநிலத்தில் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறையைப் பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற அக்கறையில்தான் முதல்-அமைச்சர் முடிவுகளை எடுத்துவருகிறார். 


 முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்


ஏற்கனவே மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்ட அறிக்கையை முதல்-அமைச்சரிடம் வழங்கி இருக்கிறோம். அதேபோல், பொது சுகாதாரம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் என்ன சொல்கிறது என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் பள்ளிகள் திறப்பு பற்றி முதல்-அமைச்சர் இறுதி முடிவு எடுப்பார். பள்ளிகள் திறப்பு விஷயத்தில் பெற்றோர் இரட்டை மனநிலையில் இருக்கிறார்கள். சீக்கிரம் பள்ளிகளைத் திறங்கள் என்று ஒரு சாரரும், இப்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்கிறீர்களே என்று மற்றொரு சாரரும் சொல்கிறார்கள். பள்ளிகளுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. பள்ளிகளை திறந்து வைக்கிறோம். யார் யார் வர விருப்பப்படுகிறார்களோ அவர்கள் வரலாம் என்றுதான் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here