Skip to main content

புதிய கல்வி கொள்கையின்படி பல்கலை, ஐஐடி பாடத்திட்டம்: இந்த கல்வி ஆண்டில் அறிமுகம்


ஒன்றிய அரசு தயாரித்து அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை மீது பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும், அதன் மீது பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்து கேட்டு அதற்கு பிறகே புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதன் பேரில் தற்போது புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை பின்பற்றி, தங்களுக்கான பாடத்திட்டங்களை தயாரிக்கும் பணியில் பல்வேறு பல்கலைக் கழகங்களும், ஐஐடி நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன.

இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி வரும் பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொண்டால், மத்திய பல்கலைக் கழகங்கள், முதுநிலைப் பட்டப் படிப்பில் தொழில் படிப்புகள் அல்லாத, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் நேரடியாகவே சேரும் வகையில் ஒரு புதிய முதுநிலைப் பட்டப் படிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

புதுடெல்லி ஐஐடி இயக்குநர் ராம்கோபால் ராவ் கூறுகையில், புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை ஐஐடிகள் முன்னெடுக்க உள்ளன. அதில், செயற்கை நுண்ணறிவுப் பள்ளிகளும் ஒன்று. இது தவிர டெல்லி ஐஐடியில் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் காயத்தடுப்பு மையம், எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய கல்விக் கொள்கையை மனதில் வைத்து, மின் போக்குவரத்து வாகனங்கள், பொதுக் கொள்கைள் ஆகிய தலைப்புகளில் முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மூன்று புதிய ஒருங்கிணைந்த படிப்புகளை ஹரியானா மத்திய பல்கலைக் கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, இந்த மூன்று புதிய படிப்புகளும் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகியவற்றில் 2021-2022ல் அறிமுகமாக உள்ளது. அவை, பிஎஸ்சி-எம்எஸ்சி இயற்பியல், பிஎஸ்சி-எம்எஸ்சி வேதியியல், பிஎஸ்சி-எம்எஸ்சி கணக்கு என்று இணைந்து இருக்கும். இந்த படிப்புகளுக்கான சேர்க்கையை மத்திய பல்கலைக் கழகம் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தும். இந்த படிப்புகள் புதிய கல்விக் கொள்கையை மனதில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்புவரை நேரடியாக படிக்க முடியும். இந்த பட்டப் படிப்புகள் தனித்துவமாக வடிவமைக்கப்படுகிறது. அதாவது மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கானதாகவும், தற்சார்பு உடையதாகவும் இந்த படிப்புகள் இருக்கும். மேற்கண்ட படிப்புகளுக்காக நடத்த இருக்கின்ற நுழைவுத் தேர்வுக்கு ஒரு மண்டல அதிகாரியையும் மத்திய பல்கலைக் கழகம் நியமித்துள்ளது. இதையடுத்து, இந்த மூன்று படிப்புகளும் அடிப்படை அறிவியல் இருக்கையின் கீழ் தொடங்கப்படும் என்று அந்த மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் இந்த பல்கலையின் மற்ற இளநிலைப் படிப்புக்கான சேர்க்கை நடக்கும் போது கிடைக்கும்.

இருப்பினும், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த புதிய படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறவும் வாய்ப்பு வழங்கவும் மத்திய பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள், வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் படிப்புகளை தொடங்க உள்ளன. அத்துடன் பல்வேறு கல்லூரிகள், டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளையும் இந்த தொழில் படிப்புகளின் மூலம் விரைவில் தொடங்க உள்ளன.

Comments

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...