திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தொடர்ந்து பள்ளி வகுப்பறைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிட்ம் கூறியது:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை19) வெளியிடப்பட்டுள்ளன. 22ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளில் 6 ஆயிரம் ஹைடெக் லேப் வசதிகள் உள்ளன. கொரோனா காலம் என்பதால் அதனை முழுமையாக ப.யன்படுத்த முடியவில்லை.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும். அதன் பிறகு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அந்த பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
கொரோனோ சூழலை கருத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட கல்வி அலுவலர் அறிவழகன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலந்தாய்வு முடிந்தவுடன் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் 2013தேர்வர்களுக்கு பணிநியமனம் ....தேர்தல் அறிக்கையில் 2017 ஐ குறிப்பிடவில்லை.....
ReplyDeleteநியாயப்படி 2013தேர்வர்களுக்குப்பின்பு தான் 2017வந்தார்கள்....நியமனத்தேர்வு
என்பது 100%நடத்த வாய்ப்பில்லை....
2013 மட்டும் போட வாய்ப்பு இல்லை...2017,2019 ம் இணைத்துதான் போட முடியும்
DeleteIvar sengottain bro VA lots of blabbering
ReplyDeleteபுத்தகசாலைலேயே போராட்டம் நடத்துனா வேலை கிடைஸ்ரீகாது
Delete