Skip to main content

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மீண்டும் 58 ஆக மாற்ற திட்டம்?


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து, ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக, 2020ல் அதிகரிக்கப்பட்டது. 

ஆட்சி மாற்றம் அதன்பின் கடந்த பிப்ரவரியில், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக, சட்டசபையில் 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்ற புகார் எழுந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.தற்போதைய தி.மு.க., அரசு, ஓய்வு பெறும் வயது 60 என்பதை, ஏற்கனவே இருந்தபடி 58 ஆக குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரவாத பத்திரம்இப்போதைய சூழ்நிலையில், உடனடியாக ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைத்தால், ஓய்வு பெறுவோருக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்க வேண்டும். தற்போதைய நிதி நெருக்கடியில் அது பெரும் சுமையாக இருக்கும். எனவே, முதலில் 59 வயதாக குறைத்து விட்டு, பின் 58 ஆக குறைக்கலாம் என பரிசீலிக்கப்படுகிறது.

இல்லையேல், நேரடியாக 58 ஆக குறைத்து விட்டு, ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதிய பணப்பலன்களுக்கு பதிலாக, உத்தரவாத பத்திரம் அளிக்கலாம் என்றும் யோசிக்கப்படுகிறது. 

தற்போது ஓய்வூதிய வயது அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஓய்வு பெறாமல் உள்ளவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது. அறிவிப்புஅவர்களுக்கு பதிலாக, புதிய நபர்களை தேர்வு செய்யும் போது, சம்பளம் குறைவாக வழங்கினால் போதும். இது, அரசின் செலவை குறைக்கும் என, நிதித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, முதல்வர் ஆலோசனை நடத்தி, ஓய்வூதிய வயது குறைப்பு தொடர்பான அறிவிப்பை சட்டசபையில் வெளியிட வாய்ப்புள்ளது என, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

  1. Job வாங்காம
    நாங்க retired agiduvom Pola இருக்கிறதே நிலமை 60 தெல்லம் ஓவர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...