Skip to main content

அவமானப்படுங்கள்..

"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. 


*வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும்.* 


இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும்.


*அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது தெரியும்.*


யார் நண்பர்,

யார் நண்பர் அல்லாதார்,

யார் நல்லவர், 

யார் கெட்டவர், அவருடைய உண்மையான முகம் எது? 

என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத்தெளிவாகத்  தெரியும்.


நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். 


*வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.*


*நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக ரகசியமாகவே செய்கிறார்கள்.*


*வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள்.*


இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமைப் படத்தொடங்குகிறார்கள்


அநேகமாக அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப் படுத்துகிறார்கள். 


*எப்போதும் வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.*


பாரதி ரௌத்திரம் பழகு என்று சொல்கிறார். 


ரௌத்திரம் என்ற வட சொல்லுக்கு வெஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம்.


வெறும் சினம் அல்ல. மிகக் கடுமையான சினம். 


காரியமாற்றும் சினம். பதிலுக்கு என்ன செய்வது என்று திட்டமிட்டு அவமானம் செய்தலை எதிர்க்கும் சினம்.


அவமானம் நண்பர்களால் ஏற்பட்டாலும் உறவுகளால் ஏற்பட்டாலும் அந்நியர்களால் ஏற்பட்டாலும் நெல்முனையளவும் கவலை கொள்ளாதீர்கள்.


எதனால் இது ? 

எங்கு தவறு ? வேண்டுமென்றே செய்யப்படுகிறதா? அல்லது விவரமில்லாத விஷயமா ? என்பதை யோசித்து மிக வேகமாக ஒரு முடிவு எடுங்கள்.


எதிர்க்க முடியாத சூழலில் எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில் கூட உங்களுக்கு கடும் அவமானம் ஏற்படும். 


அப்போது அவமானத்தை நன்கு அனுபவியுங்கள். 


அவமானப்படுத்துதலை  புரிந்து கொண்டு அதற்கு அழாது கண்ணீர்விட்டு கதறாது உள்ளே இறுக்கிக் கொள்ளுங்கள். 


மகாகவி பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். 


*"பாதகம் செய்பவரைக் கண்டால்*  *நீ பயம் கொள்ளலாகாது பாப்பா*

*மோதி மிதித்துவிடு பாப்பா "*


*_அவருக்கு எதிரே வெற்றி பெற்று சிரித்து சிலாகித்து நில்லுங்கள். அவர் தானாகக்  குன்றிப்  போவார்._*


அவருக்கு முன் ஜெயித்து நலமா ? என்று விசாரியுங்கள் அவர் மனம் உடனே செத்துப் போகும்.


*_பழி  வாங்குதலில் மிகச் சிறந்த விஷயம் நீங்கள் திரும்ப  திரும்ப வெற்றி காண்பதே._*


*_வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள்._*


அவமானத்திற்கு அஞ்சாதீர்கள்.  அவமானம் ஒரு  உரம், கடுமையான உரம், காரமான உரம். அதனாலென்ன உரம் தானே ? "

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Mam minister paesnathu full video iruka? Lasta etho re meeting apdinu solraru.

      Delete
    2. Mam minister paesna full video iruka? Lasta etho remeeting apdinu solraru athuKu apram enna paesnaru?

      Delete
    3. Full video naa enoda frnd kitta ketruken, avarum TET Candidate avar dhan enaku indha video send panaru, ipo full session anupuratha sonnaru anupina udane inga update panuven..

      Delete
  2. மேடம் வீடியோல சொல்ற மாதிரி அமைச்சர் டெட்க்கு ஒரு தீர்வு சொல்லுவார? இது உண்மை தான

    ReplyDelete
  3. நிறைய 1ஆம் தேதி பாத்துட்டோம் நம்ம

    ReplyDelete
  4. Pg 1:2 தேவை இல்லாம டெட் பத்தி பேசி அசிங்க படாதிங்க. அவ்ளோ மனு கொடுத்திங்க ஆனால் உங்களை சுத்தமா மதிக்கல அப்புறம் என்ன பேச்சு? நாங்க கத்தி கதற அவசியம் இல்ல உங்களை போல அடுத்துவங்க வேலைக்கு வேட்டு வெக்கிறவங்க நாங்க இல்ல

    ReplyDelete
    Replies
    1. அதான எதுக்கு தேவை இல்லாம பேசுறாங்க. Pg1:2 நாங்க கத்துனா கேக்க ஆள் இருக்கு ஆனா உங்களுக்கு? நீங்களும் கூவிட்டு தான் இருக்கிங்க உங்கள பத்தி மினிஸ்டர் எதும் சொல்லலியேப்பா.

      Delete
    2. 1:2சீம் சொல்லிட்டா௫ வேலையை பாத்துட்டு கொஞ்சம் ஓரம்போ.....

      Delete
    3. ஒரே சிப்பு சிப்பா வருது

      Delete
    4. Cm தான் சொல்லிட்டாரே அப்புறம் எதுக்கு உதயநிதி ஸ்டாலினை பாக்க போறிங்க?????? Cm நடவடிக்கை எடுக்கிறதா சொன்னாரு. தம்பி ஆட்சி மாறினாலும் அதிகாரிங்க சொல்றது தான் நடக்கும்

      Delete
  5. Unknown first Unveeta paru piragu adutha veeta pakkalam

    ReplyDelete
  6. எல்லாம் நம்ம தல எழுத்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...