Skip to main content

நீங்கள் வெற்றியை விரும்புகிறீர்களா?

நீங்கள் உங்களுடைய தொழில் அல்லது வேலையில் நுழைந்ததும் அது ஒரு மிகவும் போட்டி மிக்க கடுமையான சூழல் என்பதை உணர்வீர்கள். 


அதனைக் கடந்து செல்வது எளிது தான் என்றாலும், ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் விரைவாக முன்னேற எந்த ஒரு உத்திரவாதமோ அல்லது குறுக்கு வழியோ இல்லை என்று தான் பலரும் நினைக்கிறார்கள். 


ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் மூலம் நீங்கள் உழைத்த கடின உழைப்பிற்குத் தக்க பலன்களை உங்கள் சகபணியாளர்களை விட விரைவாகவே பெற முடியும்.


சார்ந்திருக்கக் கூடிய நம்பகத்தன்மை உங்களைச் சுற்றியிருப்பவர்களை குறிப்பாக உங்கள் மேலதிகாரி அனைத்திற்கும் தீர்வாக உங்களை நம்புமாறு நடந்து கொள்ளுங்கள். 


அனைவரும் தங்களுடைய தேவைகளுக்கு, உங்களை அதிகம் நம்புமாறு இருக்க விரும்புங்கள். உங்கள் வேலை பேசட்டும், உங்களை விட.. 


உங்கள் முயற்சிகள் மற்றும் உங்கள் பணிகளில் நீங்கள் காட்டும் பணிவு அல்லது அடக்கம் உங்களின் வெற்றிகளைப் பார்த்து மற்றவர்களை மேலும் மேலும் உங்களைப் பற்றிப் பேச வைக்கும். 


குறைவாக நீங்கள் பேசுவதால்,தவறான கருத்துக்களை நீங்கள் தவிர்க்க முடியும். அது உங்களை ஒரு நல்ல புத்திசாலியான மனிதராக மாற்றும். 


நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என மற்றவர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்கள் பேச்சு இருக்க வேண்டும். 


உங்கள் வாழ்க்கையின் கனவின் மீது எப்போதும் ஒரு கண் ஒரு பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம் அவற்றைச் சிறு குறிக்கோள்களாக பிரித்துக் கையாளுங்கள். 


இதன் மூலம் சிறந்த முறையில் உங்கள் வாழ்க்கையின் பயணம் தேக்கமின்றி நடக்கும். 


மற்றவர்களை சரியாகக் கையாளுவது எப்படி என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


உறவுகளில் சிக்கல்களைத் தீர்த்து அவை சண்டையாக மாறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.


மற்றவர்களுடன் உள்ளக் கருத்து வேறுபாடுகளை சச்சரவுகளைக் களைந்து நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள். 


இதன் மூலம் உறவுகள் நீடிக்கும். தொடர்பை மதியுங்கள் 


எங்கே சென்றாலும் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யார் எப்போது நம் வாழ்வில் தேவைப்படுவார்கள் என்பது நமக்குத் தெரியாது. 


அனைவரையும் நினைவில் கொள்கின்ற ஒரு நபராக இருக்க முயலுங்கள். 


அனைவருடன் இணைந்து செயல்புரிய விரும்பும் ஒருவராக இருங்கள். 


வாய்ப்புகளை மற்றவர்களுக்கு முன் கண்டறியுங்கள் மற்றவர்கள் செய்ய இயலாத அல்லது செய்திராத செயலைச் செய்யவும் முயற்சி செய்யுங்கள். 


ஆம்.,நண்பர்களே..,


இந்த உலகம் இதுவரை பார்த்திராத ஒன்றைக் காட்ட அல்லது செய்ய முயற்சி செய்யுங்கள். 


இதன் மூலம் நீங்கள் ஒரு உண்மையான நாயகனாக வரலாம்..

Comments

  1. Gudmrng பfriends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. முதுகலை 4மாசம் டெட் 8வருஷம்

    ReplyDelete
  3. *விரைவில் நீட் தேர்வு ரத்து!*

    *ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், சட்டம் இயற்றப்பட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.*

    *- சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் பொன்முடி பேட்டி!*

    ReplyDelete
  4. Mam trt go cancel aguma mam athukku ethana percentage chance irukku nu neenga ninaikkuringa plz reply me mam

    ReplyDelete
    Replies
    1. Namma ellam suggestion or petition kuduthalum final ah govt decision dhan nadakkum, ipo iruka govt porutha varaikkum nichayama discuss panuvanga, so 10% chances iruku but 90% GO change agarathu doubt dhan..

      Delete
    2. Iyoooo 10% than irukka mam

      Delete
  5. Posting tet eppo poda chance irukku nu neenga ninaikkuringa mam

    ReplyDelete
    Replies
    1. Indha year kulla nichayama Tet ku oru clarity kedaikkum..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...